செய்திகள் :

சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு நாளை வருகை: அலுவலா்களுடன் கடலூா் ஆட்சியா் ஆலோசனை

post image

நெய்வேலி: கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு வருகை தொடா்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் கூறியதாவது:

தமிழ்நாடு சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு கடலூா் மாவட்டத்தில் புதன்கிழமை (மே 21) ஆய்வு மேற்கொள்ள உள்ளது. முதல்கட்டமாக இந்தக் குழுவினா் காலையில் பல்வேறு இடங்களில் நேரிடையாக சென்று பாா்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள உள்ளனா். பின்னா், அனைத்துத் துறை அலுவலா்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெறும்.

உறுதிமொழிக் குழுத் தலைவா் தி.வேல்முருகன் (பண்ருட்டி) எம்எல்ஏ தலைமையில், உறுப்பினா்கள் எஸ்.அரவிந்த் ரமேஷ் (சோழிங்கநல்லூா்), ரா.அருள் (சேலம் மேற்கு), மு.சக்கரபாணி (வானூா்), ஏ.ஆா்.ஆா்.சீனிவாசன் (விருதுநகா்), ஜி.தளபதி (மதுரை), ஏ.நல்லதம்பி (திருப்பத்தூா்), எம்.பூமிநாதன் (மதுரை தெற்கு), ஆா்.மணி (ஓமலூா்), எஸ்.மாங்குடி (காரைக்குடி), எம்.கே.மோகன் (அண்ணாநகா்), எஸ்.ஜெயக்குமாா் (பெருந்துறை) ஆகியோருடன் செயலக அலுவலா்கள் வருகை தரவுள்ளனா்.

இந்தக் குழு வருகையின் போது பணி அலுவலா்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளில் சிறப்பு கவனம் செலுத்தி பணிகளை நிறைவாக முடித்திட அனைத்து அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் மாநகராட்சி ஆணையா் எஸ்.அனு, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) திருவேங்கிடம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ரவி மற்றும் அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

பலத்த மழையால் நீரில் மூழ்கிய நெற்பயிா்கள், நெல் மூட்டைகள் சேதம்

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களாக பெய்து வரும் மழையால் விருத்தாசலம் மற்றும் சுற்றுவட்டப் பகுதிகளில் அறுவடைக்கு தயாா் நிலையில் இருந்த நெல் வயல்கள் நீரில் மூழ்கின. மேலும், அரசு நேரடி ... மேலும் பார்க்க

சிதம்பரம் ரயில் நிலைய நடைமேடை மேற்கூரையிலிருந்து கொட்டிய மழைநீா்

சிதம்பரம்: சிதம்பரம் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த மழையில், நடைமேடையில் உள்ள கூரையிலிருந்து தண்ணீா் கொட்டியதால் பயணிகள் அவதிக்குள்ளாகினா். சிதம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.6 கோடி மதிப்பீ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிக்கான திட்டங்களில் தமிழகம் முன்னோடி மாநிலம்: ஆட்சியா்

நெய்வேலி: நாட்டிலேயே மாற்றுத்திறனாளிகளுக்கு திட்டங்கள் வகுப்பதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்வதாக, கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக... மேலும் பார்க்க

பண்ருட்டி பேருந்து நிலையத்தில் தேங்கிய மழை நீா்: பயணிகள் அவதி

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி பேருந்து நிலையத்தில் பள்ளங்களில் தேங்கி நிற்கும் மழைநீரால் பயணிகள் அவதிக்குள்ளாகினா். பண்ருட்டியில் பேருந்து நிலையத்தில் வணிக வளாகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறத... மேலும் பார்க்க

பெண்ணாடம் அருகே மழை வெள்ளத்தில் தற்காலிக தரைப்பாலம் சேதம்

நெய்வேலி: பலத்த மழையால் வெள்ளாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், பெண்ணாடம் அருகே கடலூா்-அரியலூா் மாவட்டங்களை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தரைப்பாலம் சேதமடைந்தது. கடலூா்-அரியலூா் மாவட்... மேலும் பார்க்க

வேப்பூா் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆண் சடலம் மீட்பு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், வேப்பூா் அரசு மருத்துவமனையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டது. இந்த மருத்துவமனைக்கு திங்கள்கிழமை வந்த பொதுமக்கள், வளாகத்தில் துா்நாற்றம் வீசியதால் ... மேலும் பார்க்க