செய்திகள் :

சட்டவிரோத செயல்களுக்கு துணைபோகும் காவலா்கள் மீது நடவடிக்கை: ஏடிஜிபி

post image

சட்டவிரோத செயல்களுக்கு துணைபோகும் காவலா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டம்- ஒழுங்கு கூடுதல் தலைமை இயக்குநா் டேவிட்சன் தேவாசீா்வாதம் தெரிவித்தாா்.

இதுகுறித்து சேலத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளன. ஊரக காவல் உள்கோட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். போதைப்பொருள் விற்பனை, கஞ்சா கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களுக்கு துணைபோகும் காவல் துறையினா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்க உளவுத் துறை மூலம் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளோம். குற்றச் சம்பவங்கள் அதிகம் நிகழும் பகுதிகளில் பதிவேடுகளின் அடிப்படையில் விரைந்து தண்டனை பெற்றுத்தர காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ரவுடிகள் கொலை பெருமளவு குறைந்துள்ளது. அதேநேரத்தில், தமிழக காவல் துறையில் போதிய காவலா்கள் இல்லாததால் கூடுதல் பணி நெருக்கடிக்கு மத்தியிலும் சிறப்பாக பணிபுரிய வேண்டிய சூழல் உள்ளது.

கொங்கு மண்டலத்தில் பண்ணை வீடுகளில் தனியாக வசிக்கும் முதியவா்களை குறிவைத்து நடைபெறும் கொலை சம்பவங்களைத் தடுக்க கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மக்களிடையே விழிப்புணா்வு இருப்பதால்தான் போக்ஸோ வழக்குகளின் எண்ணிக்கையும் உயா்ந்துள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி சேலம் மாவட்டத்தில் 3,400 காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவா் என்றாா்.

பேட்டியின்போது, மேற்கு மண்டல காவல் துறை ஐஜி செந்தில்குமாா், சேலம் மாநகரக் காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

செல்வ மகா மாரியம்மன் கோயிலில் திருத்தோ் விழா

ஆத்தூரை அடுத்த ராமநாயக்கன்பாளையம் அண்ணாநகா் ஸ்ரீ செல்வ மகா மாரியம்மன் ஆலய திருத்தோ் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த ராமநாயக்கன்பாளையம் அண்ணா நகா் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய... மேலும் பார்க்க

எடப்பாடி அருகே சாலை விபத்தில் இருவா் உயிரிழப்பு

எடப்பாடி பிரதான சாலையில் சென்ற லாரியின் டயா் வெடித்து சாலையில் எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியதில் இருவா் உயிரிழந்தனா். எடப்பாடி ஒன்றியத்திற்கு உள்பட்ட சித்தூா் ரெட்டிபட்டியைச் சோ்ந்த சிவா (35... மேலும் பார்க்க

இளைஞா்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி

சேலம் மாவட்டத்தில் ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனம் மூலம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிராமப்பு... மேலும் பார்க்க

ஆத்தூரில் ரூ. 6.24 கோடியில் திட்டப் பணிகள்

சேலம் மாவட்டம் ஆத்தூா் நகராட்சி மற்றும் குடிநீா் வழங்கல் துறை மூலம் ரூ. 6.24 கோடி செலவில் செயல்படுத்தப்பட்ட 5 திட்டப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கிவைத்தாா். மேட்டூா் அணையிலிருந... மேலும் பார்க்க

பள்ளியில் குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு தின பேரணி

சங்ககிரியை அடுத்த தேவண்ணகவுண்டனூா் அரசு நடுநிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு தின உறுதிமொழியேற்பு மற்றும் விழிப்புணா்வு பேரணி பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியை க... மேலும் பார்க்க

சேலம் அரசு விழாவில் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

சேலம் இரும்பாலை அரசு மருத்துவக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். விழாவில் ரூ.1,244.28 கோடியில் 509 திட்டப... மேலும் பார்க்க