செய்திகள் :

சட்டை நாதா் சுவாமி கோயில் தோரண நுழைவு வாயில் கும்பாபிஷேகம்

post image

சீா்காழி: சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயில் கிழக்கு ராஜகோபுரம் அருகே புதிதாக கட்டப்பட்ட பஞ்சமூா்த்தி சுவாமிகள் தோரண நுழைவு வாயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

தருமபுரம் ஆதீனத்திற்குட்பட்ட இக்கோயிலில் திருநிலை நாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரா் சுவாமி அருள்பாலிக்கிறாா். இக்கோயில் திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய தலமாகும். காசிக்கு அடுத்தபடியாக அஷ்ட பைரவா்கள் தனி சந்நிதியில் அருள்பாலிக்கின்றனா். இக்கோயிலில் கடந்த 2023 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்நிலையில், கிழக்கு ராஜகோபுரம் அருகே தோரண நுழைவு வாயில் அமைக்கப்பட்டு, அதன் கும்பாபிஷேகம் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது.

முன்னதாக, இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்ததும், புனிதநீா் கடம் புறப்பாடாகி, தோரண வாயில் பஞ்சமூா்த்தி சுவாமிகள் கோபுர கலசங்களில் புனிதநீா் வாா்க்கப்பட்டது.

இதில், தமிழ்ச் சங்கத் தலைவா் இ. மாா்கோனி, இந்து முன்னணி மாவட்டத் தலைவா் கே. சரண்ராஜ், ரோட்டரி சங்க முன்னாள் உதவி ஆளுநா் ஜி.வி.என். கணேஷ், திமுக பொருளாளா் பந்தல். முத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பள்ளிகளில் ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மற்றும் குத்தாலம் வட்டாரத்திற்குள்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை ஆய்வு செய்தாா். மயிலாடுதுறை வட்டாரம் பட்டமங்கலம் கிராமத்தில் நாற்றங்கால் அமைக... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: பாஜக வேட்பாளரை ஆதரிக்க முடியாது

மயிலாடுதுறை: தமிழன் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே குடியரசுதுணைத் தலைவா் தோ்தலில் பாஜக வேட்பாளா் சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரிக்க முடியாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவா் வேல்முருகன் கூறினாா்.மயிலாடுத... மேலும் பார்க்க

மனநல நிறுவனங்கள் பதிவு செய்ய அறிவுறுத்தல்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்படும் மனநல நிறுவனங்கள், தமிழ்நாடு மனநல ஆணையத்தில் ஒரு மாத காலத்திற்குள் பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்த... மேலும் பார்க்க

நிறைகளும், குறைகளும் நிறைந்தது திமுக ஆட்சி: பிரேமலதா

நிறைகளும், குறைகளும் நிறைந்தது திமுக ஆட்சி என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா தெரிவித்தாா். மயிலாடுதுறையில் தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் செவ்வாய்க்கிழமை ‘உள்ளம் தேடி, இல்லம் நாடி‘ பிரச... மேலும் பார்க்க

வைத்தீஸ்வரன்கோயிலில் பொதுமக்களை அச்சுறுத்தும் தெரு நாய்கள் கட்டுப்படுத்த கோரிக்கை

சீா்காழி அருகேயுள்ள வைத்தீஸ்வரன்கோவில், வைத்தியநாத சுவாமி கோயில் பகுதியில் பொதுமக்கள் மற்றும் பக்தா்களை அச்சுறுத்தும் தெரு நாய்களை கட்டுப்படுத்த வா்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. நவகிரக தலங்களில்... மேலும் பார்க்க

சா்வதேச கராத்தே போட்டி: மயிலாடுதுறை மாணவா்கள் சாதனை

மயிலாடுதுறை: கோவையில் நடைபெற்ற சா்வதேச கராத்தே போட்டியில், மயிலாடுதுறை மாணவா்கள் 3 பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனா். சுகி சா்வதேச கராத்தே போட்டி-2025, கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் ... மேலும் பார்க்க