செய்திகள் :

சண்டிகரில் கரோனாவுக்கு ஒருவர் பலி!

post image

சண்டிகரில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒருவர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் ஃபிரோஸாபாத் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவர் கரோனா பாதிப்பினால், பஞ்சாப்பின் லூதியானாவிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவர் இன்று (மே 28) சிகிச்சைப் பலனின்றி பலியாகியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அவருக்கு, தற்போது பரவி வரும் புதிய ரக கரோனா வைரஸான ஜே.என்.1-ன் பாதிப்பு ஏற்பட்டிருந்ததா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

இதுவே, சண்டிகரில் பதிவான முதல் பாதிப்பென்று கூறப்படும் நிலையில் அங்குள்ள அரசு மருத்துவமனையில் தற்போது கரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக படுக்கைகளுடன் கூடிய தனிப் பிரிவு ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2 நாள்களுக்கு முன்பு பஞ்சாப் மாநிலத்தில் முதல்முறையாக கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. ஹரியாணாவைச் சேர்ந்த 51 வயதுடைய பெண் ஒருவர் கரோனா பாதிப்பினால் மொஹாலியிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மேலும், ஹரியாணாவின் சுகாதாரத் துறை அமைச்சர் ஆர்த்தி சிங் ராவ், அம்மாநிலத்தில் 4 கரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாகக் கடந்த வாரம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:பயிர்களுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நடிகர் கமல்ஹாசனுக்கு மத்திய அமைச்சர் கண்டனம்

கன்னட மொழி குறித்த நடிகா் கமல்ஹாசனின் கருத்துக்கு மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லஜே கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு இன்று அவர் அளித்த பேட்டியில், "அனைவரின் மதிப... மேலும் பார்க்க

பெண்களுக்கு குங்குமம் அளிப்பதா? பாஜகவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!

பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது பதவிக் காலத்தைக் கொண்டாடும் வகையிலான பிரசார நடைப்பயணங்களில் பெண்களுக்கு குங்குமம் (செந்தூரம் - சிந்தூர், ஆபரேஷன் சிந்தூரை நினைவுபடுத்தும் விதத்தில்) வழங்குவது என்ற ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குல்: பலியானவரின் குடும்பத்தினரை சந்தித்த பிரதமர் மோடி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பலியான சுபம் திவேதியின் குடும்பத்தினரை பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை சந்தித்தார். உத்தரப் பிரதேச மாநிலம், சகேரி விமான நிலையத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இது மிகவு... மேலும் பார்க்க

நீட் முதுநிலைத் தேர்வை ஒரே ஷிப்ட்டில் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு!

வருகிற ஜூன் 15 ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் முதுநிலைத் தேர்வை ஒரே ஷிப்ட்டில் நடத்த தேசிய தேர்வுகள் வாரியத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் முதுநிலைத் தேர்வு வருகிற ஜூன் 15 ஆம் தேதி இரண்டு ஷிப... மேலும் பார்க்க

பஞ்சாபில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 5 தொழிலாளர்கள் பலி, 27 பேர் காயம்

பஞ்சாபின் முக்த்சர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர சேவைகள் மற்றும் மீட்புக் ... மேலும் பார்க்க

பாக்கு மட்டை பொருள்களுக்கு அமெரிக்கா தடை! முன்னணி ஏற்றுமதி நாடான இந்தியா பாதிப்பு!

பாக்கு மட்டைத் தட்டுகளுக்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது. இதனால், இந்தியாவில் பாக்கு மட்டைத் தட்டு உற்பத்தி வெகுவாக பாதிக்கப்படுகிறது.பாக்கு மட்டைத் தட்டுகள் சந்தையானது, உலகளவில் ஆண்டுதோறும் ரூ. 3,... மேலும் பார்க்க