செய்திகள் :

சண்டையிட்டுச் சென்ற மனைவி; இரு குழந்தைகளைக் கொன்ற தந்தை - பதறிய போலீஸ்

post image

மகாராஷ்டிரா மாநிலம் வாசிம் பகுதியைச் சேர்ந்தவர் ராகுல் சவான். நேற்று இவர் தன் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வெளியூருக்கு பயணம் சென்று கொண்டிருந்தார்.

வழியில் கணவன் மனைவி இடையே ஏதோ ஒரு பிரச்னையில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், 'நான் உங்களுடன் வரவில்லை, எனது பெற்றோர் வீட்டிற்குச் செல்கிறேன்' என்று சொல்லிவிட்டு ராகுல் சவானின் மனைவி சென்றுவிட்டார். இரண்டு மகள்களுடன் தனிமையில் நின்ற ராகுல் சவான் அக்குழந்தைகளை அழைத்துக்கொண்டு தொடர்ந்து பயணமானார்.

Representational Image
Representational Image

அவர் புல்தானா மாவட்டத்தில் உள்ள அஞ்சர்வாடி என்ற கிராமத்தில் இருக்கும் வனப்பகுதிக்கு குழந்தைகளை அழைத்துச் சென்றார். அங்கு இரண்டு குழந்தைகளையும் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டார். பின்னர் நேராக அங்குள்ள் காவல் நிலையத்திற்குச் சென்று, தன் இரண்டு மகள்களையும் கொலை செய்துவிட்டேன் என்று கூறி சரணடைந்துவிட்டார். போலீஸார் உடனே விரைந்து சென்று படுகொலை செய்யப்பட்ட இரண்டு குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இரண்டு குழந்தைகளின் உடல்களும் பாதி எரிந்த நிலையில் இருந்தது. இதனால் குழந்தைகளை கொலை செய்த பிறகு தடயங்களை அழிக்க உடல்களை எரிக்க முயன்றாரா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகளும் இரண்டு வயதாகிறது. ராகுல் சவானை கைது செய்து உண்மையில் என்ன காரணத்திற்காக குழந்தைகளைக் கொலை செய்தார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமரி: 14 போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்; இன்ஸ்பெக்டர் லஞ்ச வாங்கி சிக்கியதை தொடர்ந்து அதிரடி!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நேசமணி நகர் இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் ரூ.1.15 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. ஒரு வழக்கில் இருந்து பெயரை ந... மேலும் பார்க்க

உயிரிழந்த பெண் டாக்டர்; SI செய்த வன்கொடுமை; காதலனின் பகீர் வாக்குமூலம்

மகாராஷ்டிரா மாநிலம் சதாரா அருகில் உள்ள பால்டன் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த 28 வயது பெண் டாக்டர் தன்னை சப் இன்ஸ்பெக்டர் கோபால் என்பவர் 4 முறை பாலியல் வன்கொடுமை செய்தார் என்று எழுதி வைத்துவிட்டு... மேலும் பார்க்க

`இறந்துகிடந்த 50 மயில்கள்'- விவசாயி கைது

சங்கரன்கோவில் அருகே குருவிக்குளத்தில் 50 மயில்கள் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து புளியங்குடி சரக வனத்துறையினர், வனச்சரகர் ஆறுமுகம் தலைமையில் அங்குள்ள தோட்டங்களில் சோதன... மேலும் பார்க்க

Sabarimala: உண்ணிகிருஷ்ணன் போற்றி வாக்குமூலம்; பெல்லாரி நகைக்கடையில் மீட்கப்பட்ட சபரிமலை தங்கம்!

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவார பாலகர்கள் மற்றும் தங்க வாசல் செய்ததில் தங்கம் மோசடி செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அது சம்பந்தமாக சிறப்பு விசாரணைக்குழு 2 வழக்குகள் பதிவு செய்துள்ளது. இந்த ... மேலும் பார்க்க

ஆரணி: மனைவியை பிரிந்து மாணவி மீது காதல் - அடித்துக் கொல்லப்பட்ட இளைஞன்; மாணவியின் தந்தை வெறிச்செயல்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்துள்ள முக்குறும்பை ஊராட்சிக்குஉட்பட்ட அனந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேலன் (வயது 27). தனியார் கூரியர் நிறுவனத்தில் வேலை செய்துவந்த வடிவேலனுக்கு கடந்த இரண்டு ஆண்ட... மேலும் பார்க்க

உலகக்கோப்பை தொடரில் விளையாட இந்தியா வந்த ஆஸி, வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை - இந்தூர் இளைஞர் கைது

நடப்பு மகளிர் உலகக்கோப்பையில் இந்தியாவில் தங்கியிருக்கும் ஆஸ்திரேலிய அணியின் இரண்டு வீராங்கனைகள் மர்ம நபர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.Australia Women's Teamகடந்த செப்டம்பர் 30 ஆம் ... மேலும் பார்க்க