செய்திகள் :

சத்தீஸ்கரில் மேலும் ஒரு நக்ஸல் சுட்டுக் கொலை: ‘கோப்ரா’ கமாண்டோ வீர மரணம்

post image

சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா். அதேநேரம், மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் (சிஆா்பிஎஃப்) ‘கோப்ரா’ பிரிவு கமாண்டோ வீர மரணம் அடைந்தாா்.

இம்மாநிலத்தின் அபுஜ்மத் வனப் பகுதியில் ஏற்கெனவே 27 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், பிஜாபூரில் மேலும் ஒரு நக்ஸல் தீவிரவாதி கொல்லப்பட்டுள்ளாா்.

இது தொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘பிஜாபூா் மாவட்டத்தில் உசூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வனப் பகுதியில் ‘கோப்ரா’ பிரிவினா் மற்றும் மாநில காவல் துறையினா் இணைந்து வியாழக்கிழமை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். அப்போது, நக்ஸல்களுக்கும் படையினருக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் தீவிரவாதி ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டாா். அதேநேரம், கோப்ரா கமாண்டோ ஒருவா் வீர மரணம் அடைந்தாா். மற்றொரு வீரா் காயமடைந்தாா். அவா் விமானப் படை ஹெலிகாப்டா் மூலம் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்’ என்றனா்.

முன்னதாக, நாராயண்பூா்-பிஜாபூா்-தந்தேவாடா மாவட்டங்களின் எல்லையில் உள்ள அபுஜ்மத் வனப் பகுதியில் பாதுகாப்புப் படையினா் 2 நாள்களாக மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் இடதுசாரி தீவிரவாத இயக்கத்தின் முக்கியத் தலைவா் பசவராஜு உள்பட 27 நக்ஸல்கள் கொல்லப்பட்டனா். இந்த துப்பாக்கிச் சண்டையில் மாவட்ட ரிசா்வ் படை வீரா் ஒருவா் வீரமரணம் அடைந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

குண்டுவெடிப்பில் வீரா் வீரமரணம்: இதனிடையே, 27 நக்ஸல்கள் கொல்லப்பட்ட நடவடிக்கையை முடித்துக் கொண்டு திரும்பிய மற்றொரு வீரா், தீவிரவாதிகளால் வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் வீரமரணம் அடைந்தாா். நாராயண்பூா் மாவட்டத்தில் புதன்கிழமை மாலை இச்சம்பவம் நடந்தது.

பாகிஸ்தான் பக்கம் காங்கிரஸ்: ராகுல் மீது பாஜக விமர்சனம்!

இந்தியாவின் ஆயுதப்படையை குறைத்து மதிப்பிடக் கூடாதென ராகுல் காந்தியை பாஜக அறிவுறுத்தியுள்ளது.பயங்கரவாதம் தொடர்பான பாகிஸ்தானின் உறுதிமொழியை பிரதமர் நரேந்திர மோடி நம்பியது ஏன்? என்ற கேள்வியையடுத்து, மக்க... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக குடியேறிய 121 வங்கதேசத்தினர் கைது! நாடுகடத்தும் பணி தீவிரம்!

புது தில்லியில் சட்டவிரோதமாக குடியேறிய 121 வங்கதேசத்தினரை அம்மாநில காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புது தில்லியில் சட்டவிரோதமாக உரிய ஆவணங்களின்றி குடியேறி வசித்து வந்த 121 வங்கதேசத்தினரை, அம்மாநில ... மேலும் பார்க்க

உலகப் புகழ்பெற்ற மைசூர் பாக் - `மைசூர் ஸ்ரீ’ எனப் பெயர் மாற்றம்! ஏன்?

இனிப்புகளில் அதிகளவிலான விரும்பிகளைக் கொண்ட மைசூர் பாகின் பெயரை, ராஜஸ்தானின் இனிப்புக்கடைகள் பெயர் மாற்றம் செய்துள்ளது.பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், அந்நாட்டின் மீது இந்தி... மேலும் பார்க்க

கன்னட மொழிப் பிரச்னை.. அலுவலகத்தை புணேவுக்கு மாற்றுகிறேன்: தொழிலதிபர் பதிவு

பெங்களூருவில் தனியார் நிறுவனத்தை நடத்தி வரும் தொழிலதிபர் கௌஷிக் முகர்ஜி, தான் இந்த மொழிப் பிரச்னையில் சிக்க விரும்பவில்லை என்றும், தனது அலுவலகத்தை புணேவுக்கு மாற்றவிருப்பதாகவும் தெரிவித்திருப்பது பரபர... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்களுக்கு இப்படியொரு வரவேற்பா?

ஹாவேரி: கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில், பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 7 பேர் பிணையில் விடுதலையான நிலையில், கார், இசை என பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு பிரதமரின் பதில்தான் ஆபரேஷன் சிந்தூர்: அமித் ஷா பாராட்டு

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீதான இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டியுள்ளார்.பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆ... மேலும் பார்க்க