செய்திகள் :

சத்தீஸ்கர்: மூத்த ஐபிஎஸ் மீது காவல்துறை அதிகாரியின் மனைவி பாலியல் புகார்!

post image

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி மீது காவல்துறை அதிகாரியின் மனைவி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், நிதி ரீதியாகவும் துன்புறுத்தியதாக புகார் அளித்திருக்கிறார்.

2003-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக பொறுப்பேற்ற ரத்தன் லால் டாங்கி, ராய்ப்பூரின் சந்திரகுரியில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மாநில காவல் அகாடமியின் இயக்குநராக பணியாற்றிவருகிறார்.

இவர் மீது கடந்த அக்டோபர் 15 அன்று காவல்துறை அதிகாரியின் மனைவி ஒருவர் சத்தீஸ்கர் டிஜிபி அருண் தேவ் கௌதமிடம் புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார்.

ரத்தன் லால் டாங்கி
ரத்தன் லால் டாங்கி

அந்தப் புகாரில், ``காவல் துறைத் தலைவர் (ஐஜி) ரத்தன் லால் டாங்கி என்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், நிதி ரீதியாகவும் கடுமையாக துன்புறுத்துகிறார்.

இது தொடர்பாக வெளியில் கூறினால் என் கணவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இடமாற்றம் செய்துவிடுவேன் என்றும் மிரட்டுகிறார்." எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்தப் புகார் குறித்து விளக்கமளித்துப் பேசிய ரத்தன் லால் டாங்கிவ் ``புகார் அளித்திருக்கும் பெண் 2019-ம் ஆண்டு சமூக ஊடகங்கள் மூலம்தான் என்னை தொடர்புகொண்டு பேசினார்.

என் மனைவியின் அழகுக்கலை நிபுணராகவும் இருந்தார். நீண்ட காலமாக அந்தப் பெண்தான் என்னை என் குடும்பத்தைவிட்டுப் பிரிக்க வேண்டும் என முயற்சி செய்து வருகிறார்.

என்னைத் துன்புறுத்தி, பணம் பறித்து வருகிறார். அந்தப் பெண்ணால் என் குடும்பம் மனச்சோர்வடைந்துள்ளது.

கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக நான் போலீஸ் அகாடமியில் பணியமர்த்தப்பட்டிருக்கிறேன். யாரையும் இடமாற்றம் செய்வதற்கான அதிகரம் எனக்கு இல்லை.

ரத்தன் லால் டாங்கி
ரத்தன் லால் டாங்கி

நான் அவளைத் துன்புறுத்தினால் இதற்கு முன்பே புகார் அளித்திருக்கலாமே? இப்போது வந்து புகார் அளிக்க என்னக் காரணம்?" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இந்த விவகாரம் சத்தீஸ்கர் மாநிலத்தில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், துறை ரீதியான விசாரணைக்கு இரண்டு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

விசாரணைக் குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில், விதிகளின்படி மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

அதிகரிக்கும் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் - பூவுலகின் நண்பர்கள் முன்வைக்கும் 10 கோரிக்கைகள்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.இதுதொடர்பாக முறையான விசாரணை நடைபெற்றுவருகிறது. அரசு மற... மேலும் பார்க்க

தேனி: ``மக்கள் பிரச்னைகளில் அலட்சியமாக செயல்படாதீர்கள்'' – அதிகாரிகளை விளாசிய ஆட்சியர்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சித்தலைவர் ரஞ்சித் சிங் தலைமையில் நேற்று நடைபெற்றது.இதில் பேசிய அதிகாரிகள், “தேனி மாவட்டத்தில் ஆண்டுக்கு 829.80 மி.ம... மேலும் பார்க்க

‘ஸ்டாலின் முளைவிட வைத்தார்’ ‘பழனிசாமி நாற்றாகவே வளர்த்தார்’ ஆட்சிகள் மாறினாலும் வற்றாத விவசாயகண்ணீர்

அனைவருக்கும் பசுமை வணக்கம்... ‘விளைவித்த நெல் மூட்டைகளைச் சேமிக்க, போதுமான குடோன்கள் இல்லை, தார்ப்பாய்கள் இல்லை’ என்று விவசாயிகள் குமுறியதையெல்லாம் இரண்டு மாதங்களுக்கு முன்பே, இதே தலையங்கம் பகுதியில் ... மேலும் பார்க்க

"பாஜக 'Compose' செய்த பாட்டுக்கு டான்ஸ் ஆட ஒரு நடிகர் கிடைத்திருக்கிறார்" - விஜய்யை சாடிய கருணாஸ்

கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட சுற்றுப் பயணப் பிரசாரத்தில், 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தனர். இந்தக் கரூர் கூட்ட நெரிசல் சம்ப... மேலும் பார்க்க

"அதிக அளவு மழை பெய்தும் நீர் எங்கேயும் தேங்கவில்லை" - அமைச்சர் மா சுப்பிரமணியன் சொல்லும் விளக்கம்!

தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதனால், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திரு... மேலும் பார்க்க

`இது சட்டத்திற்கு புறம்பானது' - WTO-ல் இந்தியா மீது புகார் கொடுத்த சீனா; காரணம் என்ன?

'இது உலகளாவிய வர்த்தக விதிமீறல்' என்று இந்தியா மீது உலக வர்த்தக அமைப்பில் புகாரளித்துள்ளது சீனா.என்ன பிரச்னை?இந்தியாவிற்குள் உற்பத்தியை அதிகரிக்கவும், ஊக்குவிக்கவும் மத்திய அரசு பல்வேறு சலுகை திட்டங்க... மேலும் பார்க்க