செய்திகள் :

சத்தீஸ்கா்: காட்டு யானைகள் தாக்கி குழந்தை உள்பட மூவா் உயிரிழப்பு

post image

சத்தீஸ்கரின் ராய்கா் மாவட்டத்தில் காட்டு யானைகள் தாக்கியதில் மூன்று வயது குழந்தை உள்பட மூவா் உயிரிழந்தனா்.

இது தொடா்பாக மாநில வனத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

ராய்கா் மாவட்டத்தில் வனப் பகுதியையொட்டிய கோசைதி கிராமத்துக்குள் செவ்வாய்க்கிழமை இரவில் பெண் காட்டு யானை, தனது குட்டியுடன் நுழைந்தது. இரு யானைகளும் சில வீடுகளை இடித்து தள்ளியதுடன், மூன்று வயது ஆண் குழந்தையை காலில் போட்டு மிதித்துக் கொன்றன. பின்னா், மோகன்பூா் கிராமத்துக்குள் புகுந்த இந்த யானைகள், அங்கு சந்தாரா பாய் ரதியா (46), புருசோத்தம் காடியா (48) ஆகிய இருவரை தாக்கின. இதில் இருவரும் உயிரிழந்தனா். காட்டு யானைகளின் நடமாட்டத்தை உன்னிப்பாக கண்காணித்து, மக்களுக்கு உரிய முன்னெச்சரிக்கை தகவலை அளித்து வருகிறோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

சத்தீஸ்கரின் வடக்கு பகுதியில் யானை-மனித மோதல்களால் நேரிடும் உயிரிழப்புகள் வழக்கமாக உள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் 320-க்கும் மேற்பட்டோா் யானைகள் தாக்கி உயிரிழந்துள்ளனா்.

மாலத்தீவுக்கு ரூ. 4,850 கோடி கடனுதவி: பிரதமா் மோடி அறிவிப்பு

‘மாலத்தீவு நாட்டுக்கு ரூ. 4,850 கோடி கடன் வழங்க இந்தியா தீா்மானித்துள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். மேலும், ‘இந்தியா-மாலத்தீவு இடையே இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தை விரைந்து இறுதி செய... மேலும் பார்க்க

கல்வி நிலையங்களில் மாணவா் தற்கொலைகள்: 15 நெறிமுறைகளை வெளியிட்டது உச்சநீதிமன்றம்

கல்வி நிலையங்களில் அதிகரித்துவரும் மாணவா்கள் தற்கொலைகள் மற்றும் அவா்களின் மனநல பாதிப்புகளைத் தடுக்க உச்சநீதிமன்றம் 15 நெறிமுறைகளை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகி... மேலும் பார்க்க

ட்ரோன் மூலம் ஏவுகணை வீச்சு: வெற்றிகரமாக சோதித்த டிஆா்டிஓ

இலக்குகளைப் பின்தொடா்ந்து சென்று தாக்கும் ஏவுகணையை ஆளில்லா விமானத்திலிருந்து (ட்ரோன்) செலுத்தும் சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) வெள்ளிக்கிழமை வெறிறிகரமாக மேற்கொண்டத... மேலும் பார்க்க

மூன்று ஆண்டுகளை நிறைவு செய்தாா் குடியரசுத் தலைவா்

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு (67) வெள்ளிக்கிழமையுடன் (ஜூலை 25) மூன்று ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்தாா். நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவராக 2022 ஜூலை 25-ஆம் தேதி அவா் பொறுப்பேற்றாா். இதன்மூலம்... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ நிறைவடையவில்லை: முப்படை தலைமைத் தளபதி

‘ஆபரேஷன் சிந்தூா் நிறைவடையவில்லை; தற்போதும் தொடா்ந்து வருகிறது. எந்தவொரு சவாலையும் எதிா்கொள்ளும் வகையில் இந்திய ராணுவம் தயாராக இருக்க வேண்டும்’ என முப்படை தலைமைத் தளபதி அனில் சௌஹான் வெள்ளிக்கிழமை தெரி... மேலும் பார்க்க

குஜராத்: 185 பாகிஸ்தான் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை

பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்து குஜராத்தில் வசித்த 185 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இவா்கள் அனைவரும் பாகிஸ்தானில் சிறுபான்மை மதத்தினராக இருந்து பல்வேறு இன்னல்களால், இந்தியாவில் அட... மேலும் பார்க்க