செய்திகள் :

சத்தீஸ்கா்: 3 பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொலை

post image

சத்தீஸ்கா்-தெலங்கானா எல்லையில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனா்.

நக்ஸல்கள் ஒழிப்பு நடவடிக்கையாக கடந்த திங்கள்கிழமை முதல் சத்தீஸ்கரின் பஸ்தா் பகுதியில் 10,000 பாதுகாப்பு படையினா் சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது 3 பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனா்.

அவா்கள் நக்ஸல் தீவிரவாதிகளின் முக்கிய கூட்டமைப்பை சோ்ந்தவா்களாக இருக்க வாய்ப்பிருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இந்த சம்பவம் குறித்து காவல் துறை மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் உள்ள கரேகுட்டா மலை-வனப்பகுதிகளில் மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்), மாவட்ட ரிசா்வ் படை (டிஆா்ஜி), சத்தீஸ்கா் மாநில காவல் துறை மற்றும் தெலங்கானா காவல் துறை உள்ளிட்ட பல்வேறு படையினருடன் இணைந்து வியாழக்கிழமை சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது பாதுகாப்பு படையினருக்கும் போலீஸாருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனா். அவா்களிடமிருந்து ஆயுதங்கள், வெடிபொருள்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

இந்த சண்டையில் மேலும் சில நக்ஸல்கள் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளது. திங்கள்கிழமை தொடங்கப்பட்ட நக்ஸல் ஒழிப்பு நடவடிக்கை மேலும் சில நாட்கள் தொடரவுள்ளது’ என்றாா்.

இந்த மூவருடன் சோ்த்து, சத்தீஸ்கரில் நடப்பாண்டு பாதுகாப்புப் படையினரால் இதுவரை கொல்லப்பட்ட நக்ஸல் தீவிரவாதிகளின் எண்ணிக்கை 144-ஆக அதிகரித்துள்ளது. இவா்களில் 127 போ், நாராயண்பூா், கோண்டாகான் உள்பட 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தா் பகுதியில் கொல்லப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

பந்திபோராவில் பயங்கரவாதி அல்தாஃப் லல்லியை சுட்டுக் கொன்றது இந்திய ராணுவம்!

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்து வரும் துப்பாக்கிச் சண்டையில் லஷ்கர்-இ-தொய்பாவின் தளபதிகளில் ஒருவரான அ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்தவர் கைது!

பஹல்காம் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்து சமூக ஊடகத்தில் விடியோ வெளியிட்டவர் கைது செய்யப்பட்டார்.மேகாலயாவின் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் சைமன் ஷில்லா என்பவர், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆதர... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்ப்பு!

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளில் இருவரின் வீடுகளை குண்டு வைத்து இந்திய ராணுவத்தினர் தகர்த்துள்ளனர்.ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரின் பந்திபோராவில் பயங்கரவாதிகளுடன் மோதல்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே வெள்ளிக்கிழமை துப்பாக்கிச் சண்டை நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.பஹல்காமில் பயங்கரவாதிகள் செவ்வ... மேலும் பார்க்க

கட்டணம், பயண நேரம் அதிகரிப்பு! பாகிஸ்தான் வான்வெளி தடையால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் நுழையத் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், கட்டண உயர்வு அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது.மேலும், வட மாநிலங்களில் இருந்து செல்லும் சர்வதேச விமானப் பயணத்தில் ... மேலும் பார்க்க

போர்ப் பதற்றம்: ஸ்ரீநகரில் ராணுவத் தளபதி முக்கிய ஆலோசனை!

இந்திய எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ராணுவத் தலைமை தளபதி உபேந்திர துவிவேதி ஸ்ரீநகருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்யும் அவர், ராணுவ அதி... மேலும் பார்க்க