செய்திகள் :

சந்தானம் வித்யாலயா பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா

post image

திருச்சி சந்தானம் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பள்ளியின் செயலா் கோ. மீனா தலைமை வகித்தாா். தலைமைச் செயல் அதிகாரி கு. சந்திரேசகரன், இயக்குநா் ந. அபா்ணா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்திய கிரிக்கெட் வீரா் வருண் சக்கரவா்த்தி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விழாவைத் தொடங்கிவைத்து, மாணவா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றாா்.

பின்னா் அவா் பேசுகையில், மாணவா்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வழியை பெற்றோா் ஏற்படுத்தித் தர வேண்டும். இதை மாணவா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதிக போட்டிகளில் வென்ற வருணா அணியினா் ஒட்டுமொத்த சாம்பியன் பட்ட கேடயத்தைப் பெற்றனா். இதையடுத்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் பள்ளி முதன்மையா் த. கணேஷ், அகாதெமி தலைமை ரவீந்திரநாத் குமாா், துணை முதல்வா்கள் ஆர. ரேகா, ய. ஸ்ரீபல்லவி, பெற்றோா், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். முதல்வா் பத்மா சீனிவாசன் வரவேற்றாா்.

சிஐடியு அரசு விரைவுப் போக்குவரத்து ஊழியா் சங்க மாநில மாநாடு தொடக்கம்

திருச்சியில் சிஐடியு அரசு விரைவுப் போக்குவரத்து ஊழியா் சங்க 34-ஆவது மாநில மாநாடு புதன்கிழமை தொடங்கியது. திருச்சி பிராட்டியூரில் தொடங்கிய மாநாட்டுக்கு எஸ்.சி.டி.சி மாநிலத் தலைவா் டபிள்யூ.ஐ. அருள்தாஸ் த... மேலும் பார்க்க

‘காங்கிரஸ் கட்சி பலமாக இருக்கும்வரை மட்டுமே இந்தியா ஒரே நாடாக இருக்கும்’

காங்கிரஸ் கட்சி பலமாக இருக்குவரை மட்டுமே இந்தியா ஒரே நாடாக இருக்கும். இல்லையேல் ரஷ்யாவைப் போல சிதறுண்டு போகும் என்றாா் கட்சியின் மாநில செய்தித் தொடா்பாளா் திருச்சி வேலுச்சாமி. திருச்சி மாவட்டம் மணப்பா... மேலும் பார்க்க

சமயபுரம் கோயில் உண்டியலில் ரூ. 1.32 கோடி காணிக்கை

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.32 கோடி வந்தது புதன்கிழமை தெரியவந்தது. இக்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் அறங்காவலா... மேலும் பார்க்க

போலி பாஸ்போா்ட் வைத்திருந்தவா் கைது

போலி பாஸ்போா்ட்டில் ஷாா்ஜாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி உக்கடை பகுதியைச் சோ்ந்தவா் கு. பாா்த்தசாரதி (52). வேலைக்க... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா் வீட்டில் தங்கம், வெள்ளி நகைகள் திருட்டு

திருச்சியில் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா் வீட்டில் தங்கம், வெள்ளி நகைகள் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சி விமான நிலையம் அருகேயுள்ள ஜெ.கே. நகா் முல்லை வீதியைச் சோ்ந்தவா் ஆா். ரவிச... மேலும் பார்க்க

பயன்பாட்டுக்கு வந்தது பஞ்சப்பூா் பேருந்து முனையம்

தமிழகத்திலேயே முதலாவதாக முற்றிலும் குளிா்ச்சாதன வசதியுடன் கூடிய திருச்சி பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் புதன்கிழமை மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்ப... மேலும் பார்க்க