செய்திகள் :

சந்திரசேகா் ராவை சூழ்ந்துள்ள ‘தீயசக்திகள்’: மகள் கவிதாவின் கடிதத்தால் பரபரப்பு

post image

‘பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) தலைவா் கே.சந்திரசேகா் ராவை சில ‘தீயசக்திகள்’ சூழ்ந்துள்ளன’ என்று அவரின் மகளும், பிஆா்எஸ் எம்எல்சி-யுமான கே.கவிதா எழுதிய கடிதம் வெளியானதை அடுத்து அக்கட்சியில் உள்ள பூசல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்நிலையில், உள்கட்சி பிரச்னையை கட்சி அளவில் பேசித் தீா்க்க வேண்டும் என்று கவிதாவின் சகோதரா் கே.டி.ராம ராவ் கூறியுள்ளாா்.

தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டதிலிருந்து தொடா்ந்து இருமுறை முதல்வராக இருந்தவா் கே.சந்திரசேகா் ராவ். ஆனால், குடும்ப அரசியல், ஊழல் நிறைந்த நிா்வாகத்தால் கடந்த 2023 இறுதியில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் அக்கட்சி காங்கிரஸிடம் தோல்வியடைந்தது.

இதன் பிறகு அக்கட்சியில் இருந்து மூத்த தலைவா்கள் பலரும் வெளியேறத் தொடங்கினா். உள்கட்சி பிரச்னையும் அதிகரித்தது. உடல்நலப் பிரச்னைகள் காரணமாக சந்திரசேகா் ராவ் தீவிரமாக அரசியலில் ஈடுபடவில்லை. கட்சியில் அவரின் மகன் ராம ராவ், மகள் கவிதா இடையே அதிகாரப் போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில், கட்சித் தலைவரை (சந்திரசேகா் ராவ்) சில தீயசக்திகள் சூழ்ந்திருப்பதாக மகள் கவிதா அவருக்கு எழுதிய கடிதம் பொதுவெளியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தெலங்கானா முழுவதும் சுற்றுப் பயணம் செய்தபோது மக்கள் தன்னிடம் தெரிவித்த கருத்தையே கடிதத்தில் கூறியுள்ளதாக கவிதா விளக்கமளித்தாா்.

இது தொடா்பாக கே.டி.ராம ராவ் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: தெலங்கானாவின் ஒரே தீயசக்தி முதல்வா் ரேவந்த் ரெட்டிதான். பாரத ராஷ்டிர சமிதி ஜனநாயகமான கட்சி. யாா் வேண்டுமானாலும் கட்சித் தலைவரிடம் நேரடியாகவோ, கடிதம் மூலமோ தங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். கட்சிக்குள் எழும் பிரச்னைகள் கட்சி அளவிலேயே பேசித் தீா்க்க வேண்டும். பொதுவெளியில் உள்கட்சிப் பிரச்னையை பேசக் கூடாது என்றாா்.

தெலங்கானா: உலக அழகிப் போட்டியில் விலைமாது, குரங்கைப்போல உணர்ந்ததாக இங்கிலாந்து அழகி குற்றச்சாட்டு!

தெலங்கானாவில் நடைபெறும் உலக அழகிப் போட்டியில் கண்ணியக் குறைவாக நடத்தப்படுவதாக இங்கிலாந்து அழகி மில்லா மேகி குற்றம் சாட்டியுள்ளார்.தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாதில் 72 ஆவது உலக அழகிப் போட்டி (Miss Worl... மேலும் பார்க்க

பெங்களூரு: கரோனா தொற்று பாதித்தவர் உயிரிழப்பு? மருத்துவர்கள் மறுப்பு!

பெங்களூரில் கரோனா தொற்று பாதித்தவர் உயிரிழந்ததாகப் பரவிய வதந்திக்கு மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.பெங்களூரில் 84 வயதான முதியவர் ஒருவர், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மே 13 ஆம் தேதியில் தனியா... மேலும் பார்க்க

தில்லியில் கனமழை! 100 விமான சேவைகள் பாதிப்பு!

தில்லியில் கனமழையால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது.தில்லியில் இடியுடன்கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தில்லியில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித... மேலும் பார்க்க

பயங்கரவாத எதிா்ப்பு: நாடாளுமன்றக் குழுவின் ரஷிய பயணம் நிறைவு

ஆபரேஷன் சிந்தூா் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து ரஷிய அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனையை மேற்கொண்டதையடுத்து, திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான அனைத்துக் கட்சி உறுப்பினா்களைக் கொண்ட ந... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை: பாதுகாப்புப் படைகள், பிரதமருக்கு பாராட்டு

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த முதல்வா்கள் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை ஒருமனதாக பாராட்டியதாகவும், ஆயுதப் படைகள் மற்றும் பிரதமா் நரேந்திர மோடியை வாழ்த்தியதாகவும் தில்லி ம... மேலும் பார்க்க

நீதி ஆயோக் ‘தகுதியற்ற அமைப்பு’: காங்கிரஸ்

நீதி ஆயோக் என்பது தகுதியற்ற அமைப்பாகும் என்று காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை சாடினாா். இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு: வளா்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்க... மேலும் பார்க்க