செய்திகள் :

``சனிக்கிழமைக்குள் விடுவிக்காவிட்டால்... நகரம் முழுவதும் வெடிக்கும்" - ஹாமஸை எச்சரிக்கும் ட்ரம்ப்!

post image

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து அவரின் அதிரடி நடவடிக்கைகள், சர்ச்சைக்குள்ளாகும் சட்டங்கள், விமர்சனத்துக்குள்ளாகும் கருத்துக்களின் மூலம் தினம் தினம் செய்திகளில் இடம்பெறுகிறார். கடந்த வாரம் காஸா பகுதியை அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும் எனப் பேசியது விவாதமான நிலையில், வரும் சனிக்கிழமைக்குள் இஸ்ரேல் பணயக்கைதிகளை ஹாமஸ் விடுவிக்க வேண்டும் என எச்சரிக்கும் தொனியில் பேசியிருக்கிறார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கிறது.

ட்ரம்ப் - நெதன்யாகு

வரும் சனிக்கிழமை நண்பகலுக்குள் காஸாவிலிருந்து மீதமுள்ள பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால், அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு காஸா பகுதி முழுவதும் வெடித்துச் சிதறும். ஏற்கெனவே விடுவிக்க திட்டமிடப்பட்ட பலர் இறந்துவிட்டதாக அச்சம் இருக்கிறது. ஆனாலும், இது என்னுடைய கருத்து. இது தொடர்பாக இஸ்ரேல்தான் முடிவெடுக்க வேண்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

காஸாவை சொந்தமாக்கிக் கொள்வது குறித்த ட்ரம்ப்பின் கருத்துகள் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே இருக்கும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்கெனவே ஆபத்தில் ஆழ்த்தியிருக்கும் நிலையில், இந்தக் கருத்து தற்போது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: "கலவர வழக்கில் மாணவியின் தாயாரையே குற்றவாளியாக்குவதா?" - CPI(M) கண்டனம்

கள்ளக்குறிச்சியில் 2022, ஜூலை 13-ம் தேதியன்று, கனியாமூர் தனியார் பள்ளியில் +2 படித்து வந்த மாணவி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதில், மாணவி தற்கொலை செய்துகொண்... மேலும் பார்க்க

வேலூர்: விஐடி அருகில் குண்டும் குழியுமான சாலை... மக்களின் கோபமும் மாநகராட்சியின் விளக்கமும் என்ன?

வேலூர் மாவட்டத்தில் காட்பாடி பகுதியில் விஐடி பல்கலைக்கழகத்தின் மெயின் பிளாக் கட்டடங்கள் அமைந்துள்ளன. இந்த மெயின் பிளாக் கட்டடத்தின் அருகிலேயே இருக்கும் அரசு உள் விளையாட்டு மைதானத்திற்குச் செல்லும் சால... மேலும் பார்க்க

டெல்லி: பெண் அல்லது பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து முதல்வர் - ரேஸில் யார் யார்?

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கடந்த 5-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில், ஆம் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் எனத் தேர்தல் களம் பரபரத்தது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு 70 சட்டமன்றத் தொகுதியில் 48 இடங்க... மேலும் பார்க்க

Sanskrit: `இது பாரதம்... சமஸ்கிருதம்தான் முதன்மை மொழி’ - மக்களவையில் சபாநாயகர் vs தயாநிதி மாறன்

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில், நடைபெற்ற கூட்டத்தில் கேள்வி பதில் நேரத்தின்போது தி.மு.க எம்.பி தயாநிதி மாறனுக்கும், சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கும் மக்களவையில் இன்று காரசார விவாதம் அரங்கே... மேலும் பார்க்க