செய்திகள் :

`சபாநாயகரை கைநீட்டி பேசுவது மரபு அல்ல’ - காட்டமான முதல்வர்; அதிமுக உறுப்பினர்கள் ஒருநாள் சஸ்பெண்ட்

post image

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில், மதுரை உசிலம்பட்டி காவலர் முத்துக்குமரன் கொலை வழக்கு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியதுடன், கவன ஈர்ப்பு தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

கவன ஈர்ப்பு தீர்மானத்தை முறையாக கொடுத்தால் மட்டுமே விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என அவை முன்னவர் துரைமுருகன் தெரிவித்தார். தொடர்ந்து, சபாநாயகர் கவன ஈர்ப்பு தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து அதிமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதற்கு பதில் அளித்த முதல்வர், `சபாநாயகரை நோக்கி கைநீட்டி பேசுவது மரபல்ல’ என்றார். அதனை தொடர்ந்து கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டதால் அதிமுகவினரை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். மேலும் இன்றைய அவை நடவடிக்கைகளில் அதிமுக உறுப்பினர்கள் பங்கேற்க முடியாது என ஒரு நாள் சஸ்பெண்ட்-யும் அளித்தார்.

சபாநாயகர் அப்பாவு

தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் சம்பந்தமாக முதலமைச்சர் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசினார். அவர் கூறியதாவது...

'இந்த அவைக்கும், அவை மூலம் மக்களுக்கு சொல்ல விரும்புவது, "தமிழ்நாட்டில் அமைதி நிலவுகிறது. இங்கு பெரிய சட்ட ஒழுங்கு பிரச்னை இல்லை. மக்கள் அமைதியாக வாழ்கிறார்கள். அதனால் தான், முதலீடுகள் உள்ளிட்ட முன்னேற்ற பாதையில் செல்கிறது தமிழ்நாடு.

இதை தாங்கி கொள்ள மாநில விரோத சக்திகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக நிகழும் குற்றங்களை பெரிதாக்குகின்றன. போலீஸாரை இழிவுபடுத்துகின்றன.

'அதிமுக தூபம் போடுகின்றது' - ஸ்டாலின்
'அதிமுக தூபம் போடுகின்றது' - ஸ்டாலின்

தூபம் போடுகின்றது!

இதற்கு பிரதான எதிர்க்கட்சி துணை போகின்றது... தூபம் போடுகின்றது. இது வேதனையளிக்கிறது.

அதிமுக ஆட்சியின் கலவரம் போல் இந்த ஆட்சியில் இல்லை. இந்த ஆட்சியில் குற்றங்கள் குறைந்துள்ளது. ஆளுங்கட்சி உள்ளிட்ட எந்தக் கட்சியாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது" என்று பேசினார்.

`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்

கும்பகோணம் அருகே உள்ள கஞ்சனுார் வந்த மதுரை ஆதீனம் 293வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ``கிராம தெய்வ வழிபாடு முக்கியமானது. மதுரை ... மேலும் பார்க்க

'இதுவரை அரசு பள்ளிகளில் 1,17,310 மாணவர்கள் சேர்க்கை' - அன்பில் மகேஸ் பெருமிதம்

தமிழ்நாட்டு அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை வேகமாக நடந்து வருவது குறித்து தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பவதாவது..."தமிழ்நாடு முழுவதும் அரச... மேலும் பார்க்க

'உ.பி-ல் தமிழ் கற்று தருகிறோம்' கூறும் யோகி ஆதித்யநாத்; 'தரவுகள் எங்கே?' கேட்கும் கார்த்தி சிதம்பரம்

சமீபத்திய பாட்காஸ்ட்டில், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், "உத்தரப்பிரதேசத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கனடா, பெங்காலி, மராத்தி கற்று தருகிறோம். இதனால், உத்தரப்பிரதேசத்தில் புதிய வேலைவாய்... மேலும் பார்க்க

'நீங்கள் பிரதமராவீர்களா?' - கேள்விக்கு யோகி ஆதித்யநாத் பதில் என்ன?

பொதுவாக, பாஜக கட்சியை சேர்ந்த பிரதமர்கள் தங்களது 75 வயது வரை மட்டுமே பதவியில் இருப்பார்கள். இது ஒரு எழுதப்படாத சட்டமாகவே இருக்கிறது. அமித் ஷா உள்ளிட்ட பலர் இந்தக் கூற்றை மறுத்தாலும், இன்னமும் இந்தப் ப... மேலும் பார்க்க

Annamalai: 'அவரை போய் பாருங்க' அண்ணாமலைக்கு ஆர்டர் போட்ட டெல்லி - மாநில தலைமையில் மாற்றமா?

தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றுவிட்டு திரும்பிய பிறகு, பரபரப்ப்பின் உச்சத்திற்கு மாறியிருக்கிறது கமலாலயம். "பதவியிலிருந்து போகச் சொல்லிவிட்டார்களாமே..." என ஒரு தரப்பு கிசுகிசுக்... மேலும் பார்க்க

Waqf Bill : நாடாளுமன்றத்தில் நாளை வக்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல் - என்ன முடிவெடுக்கும் அதிமுக?

இஸ்லாமிய மதத்தில் வக்பு என்பதற்கு அந்த மதம் சார்ந்த இறை பணிகளுக்காக நன்கொடையாக கொடுக்கப்படும் சொத்துக்களை குறிப்பிடுவது ஆகும். இது அசையும் சொத்தாகவோ அசையா சொத்தாகவோ இருக்கலாம். இது இரண்டு வகைகளில் கொட... மேலும் பார்க்க