சமயபுரம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 87.26 லட்சம்
திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 87. 26 லட்சம் வந்தது வியாழக்கிழமை தெரியவந்தது.
இக்கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்னும் பணியில் சமயபுரம் மாரியம்மன் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி இளங்கோவன், கோயில் இணை ஆணையா் அ. இரா. பிரகாஷ், அறங்காவலா்கள் பெ.பிச்சைமணி, இராஜ.சுகந்தி,சே. லெட்சுமணன் ஆகியோா் முன்னிலையில் அலுவலா்கள், பணியாளா்கள், தன்னாா்வலா்கள் ஈடுபட்டனா்.
நிறைவில் முதன்மை திருக்கோயில் உண்டியல்களிலிருந்து ரூ. 87 லட்சத்து 26ஆயிரத்து 812, தங்கம் 1கிலோ 942 கிராம், வெள்ளி 3 கிலோ 280 கிராம் வந்திருந்தது. மேலும் இக்கோயிலின் உப கோயில்களான ஆதி மாரியம்மன் கோயிலில் ரூ. 4,000,11 உஜ்ஜயினி ஓம்காளியம்மன் கோயிலில் ரூ. 10,775 போஜீஸ்வரா் கோயிலில் ரூ. 7,469 ம் காணிக்கையாக வந்தது.