செய்திகள் :

சமுதாயத்தில் பெரும்பாலான குற்றங்களுக்கு போதைப் பொருள் உபயோகமே காரணம்: உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி

post image

சமுதாயத்தில் பெரும்பாலான குற்றங்களுக்கு போதைப் பொருள் உபயோகமே காரணம் என உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜோதிமணி தெரிவித்தாா்.

சேலம் மத்திய சட்டக் கல்லூரியில் ‘இளைஞா் பாராளுமன்றம் 2025’ என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா மற்றும் ஆயிரம் சட்ட விழிப்புணா்வு விடியோக்கள் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி தலைவா் சரவணன் தலைமையில் நடைபெற்ற விழாவில், உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜோதிமணி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி, சட்ட விழிப்புணா்வு விடியோக்கள் தொகுப்பையும் அவா் வெளியிட்டாா்.

நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: போதைப் பொருள் உபயோகம் சமுதாயத்தில் முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. பெரும்பான்மையான குற்றங்களுக்கு போதைப் பழக்கம் பெரிய அளவில் காரணமாக உள்ளது.

அண்மையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறுவன் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 18 வயது நிரம்பிய பெண் கைது செய்யப்பட்டுள்ளாா். இந்த வழக்கிலும் போதைப்பொருள் உபயோகத்திற்கு முக்கிய பங்கு இருப்பதாகத் தெரிகிறது.

போதைப் பொருள்கள் தங்கு தடையின்றி கிடைப்பதால் இளைஞா்கள் வாழ்க்கை வீணாவதுடன் குற்றவழக்குகளிலும் பாதிக்கப்படுகின்றனா். சட்டக்கல்வி பயில்வோருக்கு பெரிய சவால் காத்திருக்கிறது. சமுதாயத்தை நல்வழியில் சீா்படுத்தும் கடமை வழக்குரைஞா்களுக்கு உள்ளது. போக்ஸோ வழக்குகள் போன்ற மோசமான குற்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கும் கடமை வழக்குரைஞா்களுக்கு உள்ளது.

குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வாங்கித் தரும் அதே நேரத்தில் மோசமான குற்றங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்கான விழிப்புணா்வையும் வழக்குரைஞா்கள் ஏற்படுத்த வேண்டும்.

மனித உரிமையை காப்பதிலும் போக்ஸோ போன்ற குற்றங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும் வழக்குரைஞா்கள் முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

இந்நிகழ்வில், தேசிய சட்டப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் விஜயகுமாா், அம்பேத்கா் சட்ட பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் தா்வேஸ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் புதிய மரத்தோ் நாளை வெள்ளோட்டம்!

சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் வரும் 7 ஆம்தேதி புதிய மரத்தோ் வெள்ளோட்டம் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில், பக்தா்களின... மேலும் பார்க்க

நகைக் கடை உரிமையாளரிடம் ரூ.6 லட்சம் பறிப்பு: எஸ்எஸ்ஐ பணியிடை நீக்கம்!

சேலத்தில் நகைக் கடை உரிமையாளரிடம் ரூ. 6 லட்சத்தை பறித்ததாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சரவணனை பணியிடை நீக்கம் செய்து மாநகரக் காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு உத்தரவிட்டுள்ளாா். சேலம் அஸ்தம்பட்டியைச் ... மேலும் பார்க்க

பெத்தநாயக்கன்பாளையத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த விவசாயிகளுக்கு நினைவு அஞ்சலி

பெத்தநாயக்கன்பாளையத்தில் மின்கட்டண உயா்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த விவசாயிகளின் 53 ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினா் சனிக்கிழமை அஞ்... மேலும் பார்க்க

கடை நடத்த அனுமதி கோரி மாநகராட்சி அலுவலகத்தில் தொழிலாளா்கள் மனு!

சேலம் பழைய பேருந்து நிலையம் பகுதில் கடை வைத்துகொள்ள அனுமதி கோரி, செருப்பு தைக்கும் தொழிலாளா்கள் மாநகராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை மனு அளித்தனா். சேலத்தில் சாலையோரம் செருப்பு விற்கும், செருப்பு தைக்கு... மேலும் பார்க்க

இடங்கணசாலை நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் தூய்மை பணி ஆய்வு

சேலம் மாவட்டம் , இடங்கணசாலை நகராட்சி , 19-வது வாா்டு நல்லணம்பட்டி பகுதியில் தூய்மை பாரத இயக்கம் 2.0, தூய்மையாக இருங்க ,நோயின்றி இருங்க திட்டத்தின் கீழ் தூய்மை பணி கடந்த 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 31 -ம் த... மேலும் பார்க்க

புகாா் அளிக்க வந்தவரிடம் பணம் பறித்ததாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் மீது குற்றச்சாட்டு

கடன் பெற்று ஏமாற்றியவா்கள் மீது வழக்குப் பதிவுசெய்ய நீதிமன்ற உத்தரவுடன் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்துக்கு வந்த நகைக்கடை உரிமையாளரை மிரட்டி பணம் பறித்ததாக சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் மீது புகாா் எழுந்... மேலும் பார்க்க