செய்திகள் :

சமூக மேம்பாட்டுத் திட்டங்கள்: நேபாளம்-இந்தியா ஒப்பந்தம்

post image

காத்மாண்டு: நேபாளத்தில் இந்தியாவின் ரூ. 39 கோடி நிதி உதவியுடன் சமூக மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்ள இரு நாடுகளிடையே 10 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன.

இதுகுறித்து நேபாளத்தில் உள்ள இந்திய தூதரம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘நேபாளம்-இந்தியா மேம்பாட்டு ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ் நேபாளத்தில் கல்வி, சுகாதாரம் மற்றும் கலாசாரத் துறைகளில் ரூ. 39 கோடி இந்திய நிதியுதவியுடன் சமூக மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்ள 10 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் இரு நாடுகளிடையே செவ்வாய்க்கிழமை கையொப்பமாகின.

இதன்மூலம் நேபாள மக்களுக்கு சிறந்த கல்வி, மருத்துவ வசதி மற்றும் கலாசார வசதிகள் கிடைக்கும். இந்தத் திட்டத்தின் கீழ் நேபாளத்தில் 3 பள்ளிக்கூடங்கள், ஒரு மடாலயம், பள்ளி ஒன்றில் இணைய நூலகம் அமைத்தல், இரண்டு மருத்துவக் கட்டடங்கள் ஆகியவை கட்டித்தரப்பட உள்ளன.

கடந்த 2003-ஆம் ஆண்டுமுதல் நேபாளத்தில் இந்தியா 573 சமூக மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இதில் 495 திட்டங்கள் நிறைவுபெற்றுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வரி விதிப்பை இணைந்து எதிர்கொள்ள வேண்டும்: இந்தியாவுக்கு சீனா வேண்டுகோள்!

வளரும் நாடுகள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு அழுத்தத்துக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என இந்தியாவிடம் சீனா கேட்டுக்கொண்டுள்ளது. இருதரப்பு பொருளாதார ஆர்வம், வளரும் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆக... மேலும் பார்க்க

ஒடிசா: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியீடு!

கட்டாக்: ஒடிசாவில் கல்வி வாரியம் நடத்திய உயர்நிலைப் பள்ளி சான்றிதழ் தேர்வின் முடிவுகள் மே மாதம் இரண்டாவது வாரத்தில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.10 ஆம் வகுப்பு தேர்வுக்கான மதிப்பீட்டு செயல்ம... மேலும் பார்க்க

ப. சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதி

காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் உடல்நலக் குறைவால் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். குஜராத்தில் நடைபெற்றுவரும் காங்கிரஸ் தேசிய மாநாட்டில் பங்கேற்றபோது, திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால... மேலும் பார்க்க

பாஜக தலைவர் வீட்டின் முன் குண்டுவீச்சு: இருவர் கைது! பிஷ்னோய் கும்பலுக்கு தொடர்பா?

பஞ்சாப் மாநில பாஜக தலைவர் வீட்டிற்கு முன்பு மர்மநபர்கள் வெடிகுண்டு வீசிய நிலையில் அந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டனர். பஞ்சாப் மாநில பாஜக தலைவர் மனோரஞ்சன் காலியா வீட்டிற்கு முன்பு... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்த மசோதாவுக்கு எதிரான வழக்கு ஏப். 15-ல் விசாரணை?

வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் ஏப். 15 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் அ... மேலும் பார்க்க

ஆளுநர் அரசியல் கண்ணோட்டத்துடன் செயல்படக்கூடாது! -உச்சநீதிமன்ற தீர்ப்பு தெரிவிப்பது என்ன?

தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மசோதாக்கள் சில, உரிய காரணமின்றி காலதாமதப்படுத்தப்பட்டு வருவதாக ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு தரப்பிலிரு... மேலும் பார்க்க