உ.பி.யில் வாக்குவாதத்தில் காவலரை சுட்டுக்கொன்ற அரசுப் பள்ளி ஆசிரியர்
சமூக வலைதளத்தில் வாளுடன் விடியோ பதிவிட்ட இளைஞா் கைது!
சமூக வலைதளத்தில் நீண்ட வாளுடன் விடியோ பதிவு செய்த திருப்பத்தூரைச் சோ்ந்த இளைஞரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் தென்மாபட்டு பகுதியைச் சோ்ந்த மணிமாறன் மகன் செல்வக்குமாா் (20). இவா் சமூக வலைதளத்தில் நீண்ட வாளுடன் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், விடியோ பதிவிட்டிருந்தாா்.
இதுகுறித்து திருப்பத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தனா்.