செய்திகள் :

சம்பித் பத்ரா மணிப்பூர் பயணம்: எம்எல்ஏக்களுடன் முக்கிய சந்திப்பு!

post image

பாஜகவின் வடகிழக்கு பொறுப்பாளர் சம்பித் பத்ரா திங்கள்கிழமை மணிப்பூர் வந்து மெய்தி, குகி சமூகத்தைச் சேர்ந்த எம்எல்ஏக்களை சந்திக்க உள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இம்பால் விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு, பத்ரா ஹெலிகாப்டர் மூலம் சூரசந்த்பூருக்குச் சென்றார். அங்கு அவர் குகி அமைப்புகளின் தலைவர்களையும் மாவட்டத்தில் உள்ள பாஜக எம்எல்ஏக்களையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

சம்பித் பத்ராவை பாஜக மணிப்பூர் பொதுச் செயலாளர் கே. சரத் குமார் வரவேற்றார்.

மணிப்பூர் மாநிலத்திற்கு 21 எம்எல்ஏக்கள் தனித்தனியாகக் கடிதங்கள் எழுதி, குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் உள்ள வடகிழக்கு மாநிலத்தில் அமைதி, இயல்பு நிலையை உறுதி செய்வதற்காக "மக்கள் அரசை" அமைக்க வலியுறுத்தினர்.

அதே வேண்டுகோள் அடங்கிய கடிதங்களில், 13 பாஜக எம்எல்ஏக்கள், 3 என்பிபி சட்டப்பேரவை உறுப்பினர்கள், 3 நாகா மக்கள் முன்னணி சட்டமன்ற உறுப்பினர்கள், இரண்டு சுயேச்சை சட்டப்பேரவை உறுப்பினர்கள் கையெழுத்திட்டனர். இந்த கடிதங்கள் பிரதமர் அலுவலகம் மற்றும் உள்துறை அமைச்சகத்திற்கு ஏப்ரல் 29 அன்று தனித்தனியாகக் கிடைத்தன.

மணிப்பூரில் அமைதியையும் இயல்புநிலையையும் கொண்டுவருவதற்கான ஒரே வழி மக்கள் அரசை அமைப்பதுதான் என்று நாங்கள் கருதுகிறோம் என்று எம்எல்ஏக்கள் தெரிவித்தனர்.

சூரசந்த்பூருக்கு சென்ற பத்ரா, இம்பாலில் உள்ள பாஜக எம்எல்ஏக்களை சந்திக்கவுள்ளார். முன்னதாக கடந்த பிப்ரவரி மாதத்தில் பத்ரா கடைசியாக மாநிலத்திற்கு வருகை தந்திருந்தார்.

என். பிரேன் சிங் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து பிப்ரவரி 13 அன்று மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 2027 வரை இந்த தலைமை ஆட்சியமைக்கும்

கடந்த மே 2023 முதல் மணிப்பூரில் மெய்தி, குகி சமூகங்களுக்கு இடையேயான இன வன்முறையில் 260க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

போர்ப்பதற்றம்: பதுங்குமிடங்களைச் சீரமைக்க அரசுக்கு எல்லையோர கிராமங்கள் கோரிக்கை!

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் எல்லையையொட்டி அமைந்துள்ள கிராமங்களில் பதுங்குமிடங்களைச் சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ள அங்குள்ள மக்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.ஜம்மு காஷ்மீரிலுள்ள பஹல்காமில் நடத்தப்பட... மேலும் பார்க்க

எல்லைத் தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தானியர் கைது!

எல்லைத் தாண்டி இந்தியாவிற்குள் நுழைந்த பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் இன்று (மே 5) கைது செய்தனர். இது குறித்து எல்லைப் பாதுகாப்புப் படையின் மூத்த அதிகாரி கூறியதாவது, ''எல... மேலும் பார்க்க

பிரதமருடன் ராகுல் காந்தி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோசனை!

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடியுடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் ஆலோசனை நடத்தினர். புது தில்லியிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த முக... மேலும் பார்க்க

மே 7 அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு ஒத்திகை: மத்திய அரசு

புது தில்லி: மே 7-ஆம் தேதி அனைத்து மாநிலங்களிலும் மக்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் ஒத்திகையில் ஈடுபட மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. போர் நடைபெறும்போது, குடிமக்கள் தங்களை எப்படி தற்காத்துக்கொள்ள வேண்டு... மேலும் பார்க்க

மாற்றி யோசித்த பெற்றோர்.. 10-ஆம் வகுப்பில் தோல்வி.. கேக் வெட்டிக் கொண்டாட்டம்

விரைவில் தமிழகத்தில் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகவிருக்கும் நிலையில், கர்நாடக மாநில பெற்றோர்கள், தோல்வியடைந்த மகனுக்கு கேக் வெட்டிக் கொண்டாடிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.தேர்வில் தோல்வியட... மேலும் பார்க்க

இந்திய பாதுகாப்புத்துறை இணையதளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் சைபர் தாக்குதல்!

இந்திய பாதுகாப்புத்துறை இணையதளங்களைக் குறிவைத்து சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.இந்திய பாதுகாப்புத்துறையின் முக்கிய இணையதளங்களைக் குறிவைத்து பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர்கள்(இணையவழி... மேலும் பார்க்க