செய்திகள் :

காஸாவில் தாக்குதலை அதிகரிக்க இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்

post image

காஸாவில் தாக்குதலை அதிகரிக்க இஸ்ரேல் அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆக்கிரமிக்கப்பட்ட காஸாவில் மேலும் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தவுள்ளது.

மேலும், கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மனிதாபிமான உதவிகள் நுழைவதை அனுமதிக்கவும் அமைச்சரவையில் ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

காஸாவில் தாக்குதலைத் தீவிரப்படுத்த ராணுவ தலைமை அதிகாரி இயால் ஸமீர் தொடர்ந்து அறிவித்துவந்ததை அடுத்து இஸ்ரேல் அமைச்சரவையில் இன்று (ஏப். 5) வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் ஒருமனதாக காஸாவின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் தாக்குதலை அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

காஸா - இஸ்ரேல் இடையிலான போர் ஒப்பந்தத்தை மீறி ஹமாஸ் படையினர் செயல்பட்டதால், காஸாவுக்கு உலக நாடுகள் வழங்கிவந்த மனிதாபிமான உதவிகளை மார்ச் 2ஆம் தேதி முதல் இஸ்ரேல் ராணுவம் பல்வேறு வகைகளில் தடுத்து வருகிறது.

இஸ்ரேல் விதிகளை ஹமாஸ் படையினர் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துவதற்காக எல்லைப் பகுதிகளில் மனிதாபிமான உதவிகள் உள்பட பல அத்தியாவசிய உதவிகளைத் தடுத்து நிறுத்தியதாக இஸ்ரேல் தரப்பு கூறி வந்தது.

இந்நிலையில், எதிர்காலத்தில், கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மனிதாபிமான உதவிகளுக்கு அனுமதி வழங்கவும் அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறும்போது, காஸாவை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நோக்கத்தில் தந்திரமான தாக்குதலில் இருந்து ஆக்கிரமிப்பை நோக்கி நாம் நகர்கின்றோம். காஸா மக்கள் விருப்பப்பட்டு நாட்டிலிருந்து வெளியேறுவதை ஊக்குவிக்கிறோம். காஸாவிலிருந்து அகதிகளாக வெளியேறுபவர்களை ஏற்றுக்கொள்ளும்படி பல உலக நாடுகளுடன் பேசிவருகிறோம் எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | சண்டை தீர்வல்ல! பாக்., இந்தியாவிடம் ஐ.நா. வலியுறுத்தல்

1,000 டாலர் தருகிறோம்; அமெரிக்காவிலிருந்து வெளியேறவும்! சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு டிரம்ப் அறிவுறுத்தல்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியிருக்கும் வெளிநாட்டு மக்கள் தங்கள் தாயகத்துக்கு திரும்ப உதவியாக ஆயிரம் டாலர் நிதியுதவி அளிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் அறிவித்த... மேலும் பார்க்க

சண்டை தீர்வல்ல! பாக்., இந்தியாவிடம் ஐ.நா. வலியுறுத்தல்

இந்தியாவும் பாகிஸ்தானும் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று ஐ.நா. வலியுறுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரிலுள்ள பஹல்காமில் நடத்தப்பட்ட கொடூர பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் இந்தியா - பாகிஸ்தான் இடையே ... மேலும் பார்க்க

மறைந்த போப் பிரான்சிஸின் கடைசி ஆசை!

வாடிகன்: மறைந்த போப் பிரான்சிஸின் கடைசி ஆசை என்ன என்பது வெளியாகியுள்ளது. போப்பாண்டவர் தாம் பயன்படுத்திய நான்கு சக்கர வாகனத்தை மருத்துவ வசதிகள் அடங்கியதொரு நடமாடும் கிளினிக் ஆக உபயோகித்துக்கொள்ள பணித்த... மேலும் பார்க்க

போர்ப்பதற்றம்: பாக்., இந்தியாவுக்கு ஈரான் அமைச்சர் வருகை!

புதுதில்லி: ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி மே 8-ஆம் தேதி இந்தியா வருகிறார்.ஈரானிலிருந்து முதலில் பாகிஸ்தான் செல்லும் அவர், அங்கு முக்கிய விவகாரங்கள் குறித்து உயர்நிலைக் குழுக்களுடன்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்!

பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் பதிவாகியிருப்பதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிக்கு அருகில் மாலை 4 மணியளவில் ரிக்டர் அளவில் 4.2 ஆகவும், 10 கி.மீ.... மேலும் பார்க்க

சீனாவில் 4 சுற்றுலா படகுகள் கவிழ்ந்ததில் 9 பேர் பலி

தென்மேற்கு சீனாவில் ஏற்பட்ட திடீர் சூறைக்காற்றில் சுற்றுலா படகுகள் கவிழ்ந்ததில் 9 பேர் பலியானார்கள். சீனாவின் மிக நீளமான நதியான யாங்சியின் துணை நதியான வு நதியின் மேல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை திடீர் ... மேலும் பார்க்க