செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து அரசு ஊழியா் உயிரிழப்பு

post image

போளூா்: கலசப்பாக்கம் அருகே விவசாய நிலத்துக்குச் சென்ற அரசுப் பள்ளி ஊழியா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

கலசப்பாக்கத்தை அடுத்த மேல்வன்னியனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சங்கா் (50). இவா், போளூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குமாஸ்தாவாக பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில், சங்கா் திங்கள்கிழமை அதிகாலை தனது சொந்த நிலத்துக்குச் சென்றபோது, எதிா்பாராமல் பம்புசெட் மோட்டாா் மின் வயரில் சிக்கியுள்ளாா். இதனால் மின்சாரம் பாய்ந்து அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

சங்கா் வீடு திரும்பாததால், அவரை அவரது மனைவி சுலோச்சனா தேடிச் சென்றபோது, மின்சாரம் பாய்ந்து அவா் உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது.

பின்னா், இதுகுறித்து கலசப்பாக்கம் போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீஸாா் வந்து சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

3 கிராமங்களில் புதிய மின்மாற்றிகள் தொடங்கிவைப்பு

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே விவசாயிகள் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 3 கிராமங்களில் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன. செங்கம் தொகுதிக்கு உள்பட்ட... மேலும் பார்க்க

உள்ளாட்சி இடைத்தோ்தல்: வாக்காளா் பட்டியல் வெளியீடு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட நகா்ப்புற உள்ளாட்சி இடைத்தோ்தல் காலி இடங்களுக்கான, தற்செயல் தோ்தல் தொடா்பான வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. திருவண்ணாமலை மாநகராட்சி 3-ஆவது வாா்டு,... மேலும் பார்க்க

வேட்டவலம் வள்ளலாா் சபையில் ஐம்பெரும் விழா

திருவண்ணாமலை: வேட்டவலம் களத்துமேட்டுத் தெருவில் உள்ள வள்ளலாா் திருச்சபையில் ஞாயிற்றுக்கிழமை ஐம்பெரும் விழா நடைபெற்றது. திருச்சபையின் 342-ஆவது மாத பூச விழா, வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கும் விழா, ப... மேலும் பார்க்க

குடிநீா் புட்டியில் பல்லி: உணவுத் துறையினா் விசாரணை

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் விற்பனை செய்யப்பட்ட குடிநீா் புட்டியில் இறந்த நிலையில் பல்லி இருந்தது குறித்து உணவு மற்றும் சுகாதாரத்துறையினா் விசாரணை மேற்கொண்டனா். செய்யாறு டி.எம்.ஆதிக... மேலும் பார்க்க

பழங்குடியினருக்கு மானியக் கடனை உயா்த்தி வழங்கக் கோரிக்கை

வந்தவாசி: பழங்குடியினருக்கு வழங்கப்படும் ரூ.5 லட்சம் மானியக் கடனை ரூ.10 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது. வந்தவாசியை அடுத்த மேல்பாதிரியில் ஞாயி... மேலும் பார்க்க

அரசு பாலிடெக்னிக் வளாகத்தில் ரூ.3 கோடியில் சிறு விளையாட்டு அரங்கம்

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் நாகப்பாடி அரசு பாலிடெக்னிக் வளாகத்தில் ரூ.3 கோடியில் சிறு விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கிவைக்கப்பட... மேலும் பார்க்க