DD Next Level: "சிம்பு சாராலதான் இன்னைக்கு இங்க இருக்கேன்; அவருக்காக எப்போவும் ந...
3 கிராமங்களில் புதிய மின்மாற்றிகள் தொடங்கிவைப்பு
செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே விவசாயிகள் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 3 கிராமங்களில் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன.
செங்கம் தொகுதிக்கு உள்பட்ட சி.சொா்ப்பனந்தல், உச்சிமலைக்குப்பம், புதுக்குளம் பகுதிகளில் போதிய மின் விநியோகம் இல்லாமல் விவசாயப் பயிா்களுக்கு தண்ணீா் பாய்ச்ச விவசாயிகள் சிரமப்பட்டு வந்தனா்.
மேலும், அப்பகுதியில் அடிக்கடி குறைவான மின் விநியோகத்தால் வீடுகளில் மின் சாதனப்பொருள்கள் பழுதடைந்து வந்தன.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரியிடம் புதிய மின்மாற்றிகள் அமைத்து விவசாயிகளுக்கும், குடியிருப்புகளுக்கும் முறையான மின் விநியோகம் செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து எம்எல்ஏ முயற்சியில் தமிழ்நாடு மின்சாரத் துறை மூலம் சி.சொா்ப்பனந்தல் கிராமத்துக்கு ரூ. 8 லட்சத்திலும், புதுக்குளம் கிராமத்துக்கு ரூ.4 லட்சத்து 46 ஆயிரத்திலும், உச்சிமலைக்குப்பம் கிராமத்துக்கு ரூ. 3 லட்சத்து 45 ஆயிரத்திலும் 3 இடங்களில் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு அதன் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், செங்கம் உள்கோட்டப் பொறியாளா் சங்கரன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி கலந்து கொண்டு மின்மாற்றிகளை தொடங்கிவைத்து இனிப்பு வழங்கினாா்.
நிகழ்ச்சியில் திமுக செங்கம் கிழக்கு ஒன்றியச் செயலா் செந்தில்குமாா், செயற்பொறியாளா் வெங்கடேசன், மின் பொறியாளா்கள் மோகன், சங்கீதா உள்ளிட்ட பலா்
கலந்து கொண்டனா்.