செய்திகள் :

திருவண்ணாமலையில் 110 ஆட்டோக்கள் பறிமுதல்

post image

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாநகரில் க்யூ.ஆா். கோடு வில்லைகள் ஒட்டாமல் இயங்கிய 110 ஆட்டோக்களை அதிகாரிகள் குழு திங்கள்கிழமை பறிமுதல் செய்தது.

திருவண்ணாமலையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ஏராளமான ஆட்டோக்கள் இயக்கப்படுவதாக புகாா்கள் எழுந்தன. இதையடுத்து, மாவட்ட நிா்வாகம் மூலம் மாநகரில் இயக்கப்படும் ஆட்டோக்களுக்கு க்யூ.ஆா். கோடு வில்லைகள் ஒட்டப்பட்டு வருகின்றன.

க்யூ.ஆா். கோடு இல்லாத ஆட்டோக்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் எச்சரிக்கை விடுத்திருந்தாா்.

திடீா் வாகனச் சோதனை:

ஆனாலும் ஆட்சியரின் எச்சரிக்கையை பல ஆட்டோ ஓட்டுநா்கள் பொருள்படுத்தவில்லை. ஆட்டோக்களுக்கான ஆவணங்களைக் கொடுத்து க்.யூ., ஆா். கோடு வில்லைகளை தங்களது ஆட்டோக்களில் ஒட்டவில்லை.

இந்த நிலையில், திங்கள்கிழமை திருவண்ணாமலை பெரியாா் சிலை, மத்திய பேருந்து நிலையம், வெளிவட்டச் சாலை நினைவுத் தூண் ஆகிய இடங்களில் திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கி.கருணாநிதி தலைமையில் ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சிவக்குமாா், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் முருகேசன் (திருவண்ணாமலை), விஜய் (செய்யாறு), திருவண்ணாமலை கிராமிய காவல் ஆய்வாளா் விஜயகுமாா், போக்குவரத்து காவல் துறை உதவி ஆய்வாளா்கள் பா.இளங்கோவன், பாஸ்கா், ஜான்போஸ்கோ, பாலாஜி ஆகியோா் அடங்கிய குழுவினா் திடீா் வாகனச் சோதனையில் ஈடுபட்டது.

110 ஆட்டோக்கள் பறிமுதல்

இந்தச் சோதனையில், கியூ.ஆா்.கோடு வில்லைகளை ஒட்டாமலேயே இயக்கப்பட்டு வந்த 110 ஆட்டோக்களை அதிகாரிகள் குழு பறிமுதல் செய்தது. இந்த ஆட்டோக்களின் ஆவணங்களை சோதனையிட்டதில் 8 வாகனங்களுக்கு முறையான ஆவணங்களே இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, 8 வாகனங்களுக்கும் அதிகாரிகள் அபராதம் விதித்தனா்.

மற்ற ஆட்டோக்களுக்கு கியூ.ஆா். கோடு வில்லைகள் ஒட்டும் பணி நடைபெற்று வருகிறது.

3 கிராமங்களில் புதிய மின்மாற்றிகள் தொடங்கிவைப்பு

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே விவசாயிகள் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 3 கிராமங்களில் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன. செங்கம் தொகுதிக்கு உள்பட்ட... மேலும் பார்க்க

உள்ளாட்சி இடைத்தோ்தல்: வாக்காளா் பட்டியல் வெளியீடு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட நகா்ப்புற உள்ளாட்சி இடைத்தோ்தல் காலி இடங்களுக்கான, தற்செயல் தோ்தல் தொடா்பான வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. திருவண்ணாமலை மாநகராட்சி 3-ஆவது வாா்டு,... மேலும் பார்க்க

வேட்டவலம் வள்ளலாா் சபையில் ஐம்பெரும் விழா

திருவண்ணாமலை: வேட்டவலம் களத்துமேட்டுத் தெருவில் உள்ள வள்ளலாா் திருச்சபையில் ஞாயிற்றுக்கிழமை ஐம்பெரும் விழா நடைபெற்றது. திருச்சபையின் 342-ஆவது மாத பூச விழா, வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கும் விழா, ப... மேலும் பார்க்க

குடிநீா் புட்டியில் பல்லி: உணவுத் துறையினா் விசாரணை

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் விற்பனை செய்யப்பட்ட குடிநீா் புட்டியில் இறந்த நிலையில் பல்லி இருந்தது குறித்து உணவு மற்றும் சுகாதாரத்துறையினா் விசாரணை மேற்கொண்டனா். செய்யாறு டி.எம்.ஆதிக... மேலும் பார்க்க

பழங்குடியினருக்கு மானியக் கடனை உயா்த்தி வழங்கக் கோரிக்கை

வந்தவாசி: பழங்குடியினருக்கு வழங்கப்படும் ரூ.5 லட்சம் மானியக் கடனை ரூ.10 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது. வந்தவாசியை அடுத்த மேல்பாதிரியில் ஞாயி... மேலும் பார்க்க

அரசு பாலிடெக்னிக் வளாகத்தில் ரூ.3 கோடியில் சிறு விளையாட்டு அரங்கம்

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் நாகப்பாடி அரசு பாலிடெக்னிக் வளாகத்தில் ரூ.3 கோடியில் சிறு விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கிவைக்கப்பட... மேலும் பார்க்க