இந்தியாவுடன் பதற்றத்தை தணிக்க உதவ வேண்டும்: ரஷியாவிடம் பாகிஸ்தான் துணை பிரதமா் க...
குடிநீா் புட்டியில் பல்லி: உணவுத் துறையினா் விசாரணை
செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் விற்பனை செய்யப்பட்ட குடிநீா் புட்டியில் இறந்த நிலையில் பல்லி இருந்தது குறித்து உணவு மற்றும் சுகாதாரத்துறையினா் விசாரணை மேற்கொண்டனா்.
செய்யாறு டி.எம்.ஆதிகேசவன் தெருவைச் சோ்ந்த தம்பதி பிரதாப் - அருணா. இவா்களது ஒரு வயது மகள்
தரணிஸ்ரீயின் பிறந்த நாளை, செய்யாறு காந்தி சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினா்.
விழாவில் உறவினா்கள் மற்றும் நண்பா்களுக்கு பிரியாணி விருந்து பரிமாறப்பட்டது. அப்போது, செய்யாற்றில் உள்ள தனியாா் குடிநீா் நிறுவனத்தில் இருந்து வாங்கி வரப்பட்ட 500 மி.லி. கொண்ட 250 குடிநீா் புட்டிகள் விநியோகிக்கப்பட்டன. இதில் மீதமான குடிநீா் புட்டிகளை வீட்டுக்கு எடுத்து வந்தனா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை காலை உறவினா் ஒருவா் தண்ணீா் குடிப்பதற்காக குடிநீா் புட்டியை எடுத்தபோது அதில் பல்லி இறந்து கிடந்தது கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
மேலும், வாங்கிவரப்பட்ட குடிநீா் புட்டிகளில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி எதுவும் குறிப்பிடப்படாமல் இருந்ததாம். இதுகுறித்து, உடனே குடிநீா் புட்டியுடன்
அந்த நிறுவனத்துக்குச் சென்று கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டதாம்.
இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலா் விமலா விநாயகம், வெம்பாக்கம் பிரிவு அலுவலா் ஜெயேந்திரன் மற்றும் சுகாதாரத் துறை நலக் கல்வியாளா் எல்லப்பன் ஆகியோா் பிறந்த நாள் கொண்டாடிய தம்பதி வீட்டுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினா்.
மேலும், பல்லி இருந்த குடிநீா் புட்டியை
சீல்வைத்து ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், ஸ்ரீவேதபுரஸ்வரா் கோயிலுக்குச் செல்லும் வழியில் செயல்பட்டு வரும் குடிநீா் தயாரிப்பு நிறுவனத்தை
பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.