செய்திகள் :

திணறிய தில்லி கேபிடல்ஸ்; காப்பாற்றிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அசுதோஷ் சர்மா!

post image

சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய தில்லி கேபிடல்ஸ் 7 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தில்லி கேபிடல்ஸ் முதலில் விளையாடியது.

இதையும் படிக்க: வன்ஷ் பேடிக்குப் பதிலாக சிஎஸ்கேவில் இணையும் விக்கெட் கீப்பர்!

திணறிய தில்லி கேபிடல்ஸ்; காப்பாற்றிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அசுதோஷ் சர்மா

தில்லி கேபிடல்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கருண் நாயர் மற்றும் ஃபாப் டு பிளெஸ்ஸிஸ் களமிறங்கினர். பாட் கம்மின்ஸ் வீசிய ஆட்டத்தின் முதல் பந்திலேயே கருண் நாயர் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன் பின், டு பிளெஸ்ஸிஸ் (3 ரன்கள்), அபிஷேக் போரெல் (8 ரன்கள்), கே.எல்.ராகுல் (10 ரன்கள்), அக்‌ஷர் படேல் (6 ரன்கள்) எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.

தில்லி கேபிடல்ஸ் 29 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. நிதானமாக விளையாடிய விப்ராஜ் நிகம் 18 ரன்களில் ஆட்டமிழக்க, தில்லி கேபிடல்ஸ் 62 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான சூழ்நிலையில் இருந்தது.

இந்த நிலையில், டிரிஸ்டன் ஸ்டப்ஸுடன் இம்பாக்ட் வீரராக களமிறங்கிய அசுதோஷ் சர்மா ஜோடி சேர்ந்தார். இந்த இணை தில்லி கேபிடல்ஸை சரிவிலிருந்து மீட்டது. அதிரடியாக விளையாடிய அசுதோஷ் சர்மா 26 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து நிதானமாக விளையாடிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 36 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

இதையும் படிக்க: ஜோஷ் இங்லிஷை 3-வது வீரராக களமிறக்கியது யாருடைய முடிவு? ரகசியம் பகிர்ந்த ரிக்கி பாண்டிங்!

இறுதியில் தில்லி கேபிடல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் எடுத்துள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தரப்பில் பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஜெயதேவ் உனத்கட், ஹர்ஷல் படேல் மற்றும் ஈஷன் மலிங்கா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி களமிறங்குகிறது.

சமரன் ரவிச்சந்திரனுக்குப் பதிலாக ஹைதராபாதில் மாற்று வீரர் சேர்ப்பு!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் சமரன் ரவிச்சந்திரனுக்குப் பதிலாக மாற்று வீரர் சேர்க்கப்பட்டுள்ளார்.சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்ற சமரன் ரவிச்சந்திரனுக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, நடப்பு ஐபிஎ... மேலும் பார்க்க

தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக ஹைதராபாத் பந்துவீச்சு!

தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பந்துவீச்சைத் செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெறும் இன்றையப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் தில்லி கேபிடல்ஸ் ... மேலும் பார்க்க

வன்ஷ் பேடிக்குப் பதிலாக சிஎஸ்கேவில் இணையும் விக்கெட் கீப்பர்!

காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ள வன்ஷ் பேடிக்குப் பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸில் மாற்று வீரர் சேர்க்கப்பட்டுள்ளார்.சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் வன்ஷ் பேடிக்கு இடது கணுக்காலில் காயம்... மேலும் பார்க்க

ஜோஷ் இங்லிஷை 3-வது வீரராக களமிறக்கியது யாருடைய முடிவு? ரகசியம் பகிர்ந்த ரிக்கி பாண்டிங்!

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் 3-வது வீரராக ஜோஷ் இங்லிஷ் களமிறக்கப்பட்டது தொடர்பாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பேசியுள்ளார்.ஐபிஎல் தொடரில் ஹிமாசலில் நடைபெற்ற நேற... மேலும் பார்க்க

பிரப்சிம்ரன் சிங் அரைசதம் விளாசல்; லக்னௌவுக்கு 237 ரன்கள் இலக்கு!

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் ஹிமாசலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் பஞ்சாப் க... மேலும் பார்க்க

அதிக முறை 500+ ரன்கள்... டேவிட் வார்னரின் சாதனையை முறியடித்த விராட் கோலி!

ஐபிஎல் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் விராட் கோலி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.ஐபிஎல் தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்ப... மேலும் பார்க்க