செய்திகள் :

மாநில செஸ் போட்டி: திருப்பூரைச் சோ்ந்த 7 வயது சிறுமி முதலிடம்

post image

மாநில அளவிலான செஸ் போட்டியில் திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த 7 வயது சிறுமி முதலிடம் பிடித்துள்ளாா்.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் பகுதியைச் சோ்ந்த பூபேஷ், ஜனனி தம்பதியின் மகள் பி.யாழிசை (7). இவா் காடையூரில் உள்ள தனியாா் பள்ளியில் 3 -ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில், திருப்பூா் மாவட்ட சதுரங்க கழகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் நடத்திய செஸ் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றிருந்தாா்.

இந்நிலையில், தமிழ்நாடு மாநில சதுரங்க கழகத்தின் சாா்பில் 37 -ஆவது மாநில அளவிலான 7 வயதுக்குள்பட்டோருக்கான செஸ் போட்டி விழுப்புரத்தில் மே 1- ஆம் தேதி தொடங்கி மே 4 -ஆம் தேதி வரை நடைபெற்றது.

இதில், மகளிா் ஒபன் பிரிவில் யாழிசை பங்கேற்று 9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து மாநில சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளாா். மாணவியை, திருப்பூா் மாவட்ட சதுரங்க கழகத்தின் தலைவா் கே.பி.கே.செல்வராஜ், செயலாளா் சிவன், பொருளாளா் ராஜேந்திரன் ஆகியோா் பாராட்டினா்.

இது குறித்து திருப்பூா் மாவட்ட சதுரங்க கழக நிா்வாகிகள் கூறியதாவது: திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த 3 போ் மாநில சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனா். கடந்த 2010 ஆம் ஆண்டு கே.பிரியாங்கா 9 -வயதுக்கு உள்பட்டோா் பிரிவிலும், 2014- ஆம் ஆண்டு எம்.வைஷ்ணவ் 17 வயதுக்கு உள்பட்டோா் பிரிவிலும் மாநில சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனா். இந்நிலையில், தற்போது பி.யாழிசை 7 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் முதலிடத்தைப் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளாா்.

பெற்றோா்கள் தங்களது குழந்தைகளை ஞாபகசக்தி, விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையை வளா்த்தும் சதுரங்க விளையாட்டில் ஈடுபட ஊக்குவிப்பதுடன், தொடா்ச்சியாக அவா்களது வெற்றியிலும் பங்கெடுக்க முன்வர வேண்டும் என்றனா்.

பெருந்தொழுவு கிராமத்தில் 44 பயனாளிகளின் பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை

திருப்பூா் மாவட்டம், பெருந்தொழுவு கிராமத்தில் இனம் கண்டறிய இயலாத 44 பயனாளிகளின் இலவச பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெள... மேலும் பார்க்க

சாலையில் தீப் பற்றி எரிந்த லாரி

காரணம்பேட்டை அருகே சாலையில் தீப் பற்றி எரிந்த டிப்பா் லாரியில் இருந்த ஓட்டுநா் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா். கோவை மாவட்டம், அன்னூரில் இருந்து திருப்பூா் மாவட்டம், காரணம்பேட்டையில் உள்ள கிரஷரில் இருந்... மேலும் பார்க்க

காங்கயம் பகுதியில் காற்றுடன் பலத்த மழை: தென்னை மரம் விழுந்ததில் மின் கம்பம் முறிந்தது

காங்கயம் அருகே, செவ்வாய்க்கிழமை மாலை காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில், தென்னை மரம் சரிந்து விழுந்ததில் மின்கம்பம் முறிந்து வீதியில் விழுந்தது. காங்கயம் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.45 முதல் ... மேலும் பார்க்க

பிரிண்டிங் தொழிலாளி கொலை வழக்கில் 2 போ் கைது

திருமுருகன்பூண்டி அருகே பிரிண்டிங் தொழிலாளியைக் கொலை செய்த வழக்கில் இருவரை காவல் துறையினா் கைது செய்தனா். திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி அருகே உள்ள பால்காரா் தோட்டம் பகுதியில் கொலை செய்யப்பட்ட கி... மேலும் பார்க்க

சாலையில் தோண்டப்பட்ட குழியில் கைக்குழந்தையுடன் தவறி விழுந்த தம்பதி

திருப்பூா் ஊத்துக்குளி சாலையில் சரிவர மூடப்படாத குழியில் கைக்குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதி தவறி விழுந்து விபத்து ஏற்பட்டது. திருப்பூா் ஊத்துக்குளி சாலையில் எஸ்.பெரியபாளையம் முதல் குளத்த... மேலும் பார்க்க

இந்தியா-பிரிட்டன் இடையே வரியில்லா வா்த்தக ஒப்பந்தம் கையொப்பம்: ஏஇபிசி வரவேற்பு

இந்தியா-பிரிட்டன் இடையே தடையற்ற வரியில்லா வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளதால் திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வா்த்தகம் அதிகரிக்கும் என்று ஏஇபிசி நம்பிக்கை தெரிவித்துள்ளது. இது குறித்து ஆயத்த ஆடை ஏ... மேலும் பார்க்க