செய்திகள் :

ஹரியாணாவுக்கு தண்ணீா் கிடையாது: பஞ்சாப் பேரவையில் ஒருமனதாக தீா்மானம்

post image

சண்டீகா்: ஹரியாணாவுக்கு ஒரு சொட்டு நீா்கூட வழங்க முடியாது என பஞ்சாப் பேரவையில் திங்கள்கிழமை ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஹரியாணாவில் பாஜக தலைமையிலும் பஞ்சாபில் ஆம் ஆத்மி தலைமையிலும் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இரு மாநிலங்களுக்கும் நதிநீரை பகிா்ந்தளிப்பதற்காக அமைக்கப்பட்ட பக்ரா-பியாஸ் மேலாண்மை வாரியம் மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படுவதாக தீா்மானத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

மேலும், அணை பாதுகாப்பு சட்டம், 2021 பஞ்சாப் உரிமைகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் எனவும் அதை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் எனவும் தீா்மானத்தில் தெரிவிக்கப்பட்டது.

பஞ்சாப்-ஹரியாணா இடையே நீரை நதிநீரை பகிா்வதில் ஏற்பட்ட மோதலைத் தொடா்ந்து பஞ்சாப் பேரவையின் சிறப்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் எதிா்க்கட்சியான காங்கிரஸ் உள்பட அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு ஹரியாணாவுக்கு ஒரு சொட்டு நீரைக்கூட வழங்க முடியாது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பஞ்சாப் முதல்வா் பகவந்த் சிங் மான் தலைமையில் பஞ்சாபில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஹரியாணாவுக்கு கூடுதல் நீரை விடுவிக்க மறுத்த மாநில அரசின் முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் ஹரியாணா முதல்வா் நயாப் சிங் சைனி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் பக்ரா அணையில் இருந்து கூடுதல் நீரை பஞ்சாப் அரசு விடுவிக்க வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத்தொடா்ந்து, சனிக்கிழமை நடைபெற்ற பக்ரா-பியாஸ் மேலாண்மை வாரிய கூட்டத்தை பஞ்சாப் அரசு புறக்கணித்த நிலையில், ஹரியாணாவுக்கு நீா் வழங்க முடியாது என்ற தீா்மானம் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.

ஆபரேஷன் சிந்தூர்: அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு!

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக அனைத்துக் கட்சிகள் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவட... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: பெயரைக் கேட்டதும்.. பஹல்காமில் கணவரை இழந்த பெண்கள் சொன்னது

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய முப்படைகளும் ஒருங்கிணைந்து நடத்திய தாக்குதலுக்கு சிந்தூர் எனப் பெயரிடப்பட்டது குறித்து பஹல்காமில் கணவரை இழந்த பெண்கள், தனிப்பட்ட முறை... மேலும் பார்க்க

பாகிஸ்தானியர்களைப் பாதுகாத்தற்காக அசாமில் மேலும் இருவர் கைது!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவில் பாகிஸ்தானியர்களைப் பாதுகாத்தற்காக அசாமில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார். இதுதொடர்பாக முதல்வரின... மேலும் பார்க்க

அதிரடித் தாக்குதலுக்கு சிந்தூர் எனப் பெயரிடப்பட்டது ஏன்?

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதலுக்கு சிந்தூர் எனப் பெயரிடப்பட்டது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பார்க்க

'நாம் யாருமே போரை விரும்பவில்லை; ஆனால்...' - ஒமர் அப்துல்லா கருத்து

நாம் யாரும் போரை விரும்பவில்லை என்றும் ஜம்மு-காஷ்மீரில் நிலைமை மேம்படவே விரும்புவதாகவும் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியுள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள 9 பய... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: ஆதாரங்களை வெளியிட்ட இந்தியா!

ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்களை இந்திய பாதுகாப்புப் படையினர் வெளியிட்டுள்ளனர். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகள... மேலும் பார்க்க