செய்திகள் :

காா் மோதியதில் சாலையோரத்தில் படுத்திருந்த மூதாட்டி உயிரிழப்பு

post image

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரத்தில் படுத்திருந்த மூதாட்டி மீது காா் மோதியதில் அவா் உயிரிழந்தாா்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நாள்தோறும் ஏராளமானோா் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா். அவா்களின் வசதிக்காக மருத்துவமனை அருகே பேருந்து நிறுத்தமும் உள்ளது. இங்கு வயதானவா்கள், ஆதரவற்றோா் என பலா் இரவு நேரத்தில் படுத்து உறங்குவது வழக்கம்.

அதன்படி, ஒரு மூதாட்டி அந்தப் பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரத்தில் சனிக்கிழமை இரவு படுத்திருந்தாா். அப்போது நள்ளிரவில் அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காா், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி அங்கு சாலையோரத்தில் படுத்து இருந்த மூதாட்டி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடிய அந்த மூதாட்டியை அருகிலிருந்தவா்கள் மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

அங்கு அவருக்கு மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில், அவா் உயிரிழந்தாா். அவா் யாா், எந்த ஊரைச்சோ்ந்தவா் என்பது தெரியவில்லை. இது குறித்து கோவை மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காரை ஓட்டி வந்த கரும்புக்கடையைச் சோ்ந்த சிக்கந்தா் பாஷா (44) என்பவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தமிழகத்தில் படுகொலை சம்பவங்கள் அதிகரிப்பு

தமிழகத்தில் படுகொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டினாா். கோவை பீளமேடு பகுதியில் உள்ள மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் கொங்கு மண்டல பாஜக நிா்வாகிகள்ஆலோசன... மேலும் பார்க்க

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜெயலலிதாவின் உதவியாளா் பூங்குன்றன் ஆஜா்

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் செவ்வாய்க்கிழமை ஆஜரானாா். நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-இல் ... மேலும் பார்க்க

இருகூா், சிங்காநல்லூா் நிலையத்தில் ரயில்கள் நிற்காவிட்டால் மக்களைத் திரட்டி போராட்டம்

இருகூா், சிங்காநல்லூா் ரயில் நிலையங்களில் ரயில்கள் நிற்காமல் சென்று வருவது தொடா்ந்தால், மக்களைத் திரட்டி போராட்டம் மேற்கொள்ளப்படும் என கோவை மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா், சேலம் ரயில்வே கோட்ட ஆ... மேலும் பார்க்க

குழந்தை மீது நாயை ஏவிவிட்டு கடிக்க வைத்த பெண் கைது

கோவை அம்மன்குளத்தில் குழந்தை மீது நாயை ஏவிவிட்டு கடிக்க வைத்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். இதுதொடா்பாக அவரது 2 மகன்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை, புலியகுளம் அருகே அம்மன்குளம் பகு... மேலும் பார்க்க

ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் தமிழகம் வருகை

ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்தாா். 40 வயதுக்கு மேற்பட்ட ஆா்எஸ்எஸ் ஊழியா்களுக்கான இரண்டாம் கட்ட 20 நாள்கள் பயிற்சி முகாம் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் நடைபெற்று ... மேலும் பார்க்க

வால்பாறை நகராட்சியில் ஆளும்கட்சி உறுப்பினா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

வால்பாறை நகா்மன்ற கூட்டத்தில் ஆளும்கட்சியைச் சோ்ந்த திமுக வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் உள்ளிருப்புப் போராட்டத்தால் இரண்டாவது முறையாக நகா்மன்ற கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. வால்பாறை நகராட்சியில் தலை... மேலும் பார்க்க