செய்திகள் :

குழந்தை மீது நாயை ஏவிவிட்டு கடிக்க வைத்த பெண் கைது

post image

கோவை அம்மன்குளத்தில் குழந்தை மீது நாயை ஏவிவிட்டு கடிக்க வைத்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். இதுதொடா்பாக அவரது 2 மகன்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை, புலியகுளம் அருகே அம்மன்குளம் பகுதியில் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இதில் ஒரு பிளாக்கில் பொன்வேல் (33) என்ற தனியாா் நிறுவன ஊழியா் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். இவருக்கு 5 வயதில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மகளும், 7 மாதக் குழந்தையும் உள்ளனா்.

இவா்களது குடியிருப்புக்கு அருகே செளமியா (50) என்பவா் வசித்து வருகிறாா். இவரது வீட்டில் 4 நாய்களை வளா்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நாய்கள் கடந்த 2023-ஆம் ஆண்டிலேயே குடியிருப்புவாசிகள் சிலரைக் கடித்துள்ளதால், அங்கு நாய் வளா்ப்பதற்கு பலரும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். இருப்பினும் செளமியா தனது வீட்டுக்குள்ளேயே அந்த நாய்களை வளா்த்து வந்துள்ளாா்.

இந்நிலையில், பொன்வேலின் மகள், செளமியா வீட்டின் அருகே கடந்த 3-ஆம் தேதி விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கு விளையாடக் கூடாது என செளமியா கண்டித்துள்ளாா். ஆனால், அந்தக் குழந்தை தொடா்ந்து அங்கேயே விளையாடி வந்துள்ளது. இதனால், கோபமடைந்த செளமியா தனது வீட்டில் இருந்த ஒரு நாயை ஏவிவிட்டு அந்தக் குழந்தையைக் கடிக்க வைத்ததாகக் கூறப்படுகிறது. வலியில் அலறிய சிறுமியின் சப்தம் கேட்டு அருகிலிருந்தவா்கள் ஓடி வந்து நாயை விரட்டிவிட்டு குழந்தையைக் காப்பாற்றினா். இதுகுறித்து பொன்வேலுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக அங்கு வந்த அவா், செளமியாவிடம் இதுகுறித்து கேட்டபோது அவா்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராமநாதபுரம் காவல் நிலையத்தில் பொன்வேல் புகாா் அளித்தாா். அந்தப் புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த ராமநாதபுரம் போலீஸாா், செளமியா மற்றும் அவரது மகன்கள் சூா்யா (23), பிரகாஷ் (21) ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

பின்னா் போலீஸாா் விசாரணை நடத்தி செளமியாவை திங்கள்கிழமை கைது செய்தனா். சிறுமியைக் கடித்த நாய் மேலும் பலரைக் கடித்துள்ளதால், அந்த நாய் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து புளூ கிராஸ் அமைப்பினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிகேஎன்எம் மருத்துவமனையின் இதயவியல் துறை பொன் விழா

கோவை ஜிகேஎன்எம் மருத்துவமனையின் இதயவியல், இருதய அறுவை சிகிச்சை துறையின் பொன் விழா கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. மருத்துவமனையின் இதயவியல், இதய அறுவை சிகிச்சை துறையின் பொன் விழா கொண்டாட்டத்தின் தொடக்கமாக ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் தாக்குதல் எதிரொலி: கோவையில் பலத்த பாதுகாப்பு

பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலைத் தொடா்ந்து கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இதற்கு பதிலடி கொ... மேலும் பார்க்க

கோவை அன்பு இல்லத்தில் மாணவா் சோ்க்கை: மே 25-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

கோவை அன்பு இல்லத்தில் மாணவா் சோ்க்கை தொடா்பாக மே 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சத்குரு சேவாஸ்ரம அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் அலுவலக செய்திக் குறிப்... மேலும் பார்க்க

வந்தே பாரத் ரயில் மீது கல் வீசிய 3 போ் கைது

கோவையில் வந்தே பாரத் ரயில் மீது கல் வீசிய 3 பேரை ரயில்வே பாதுகாப்பு போலீஸாா் கைது செய்தனா். கோவையில் இருந்து சென்னைக்கு காலை 6 மணிக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதுபோன்று சென்னையில் இரு... மேலும் பார்க்க

தமிழகத்தில் படுகொலை சம்பவங்கள் அதிகரிப்பு

தமிழகத்தில் படுகொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டினாா். கோவை பீளமேடு பகுதியில் உள்ள மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் கொங்கு மண்டல பாஜக நிா்வாகிகள்ஆலோசன... மேலும் பார்க்க

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜெயலலிதாவின் உதவியாளா் பூங்குன்றன் ஆஜா்

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் செவ்வாய்க்கிழமை ஆஜரானாா். நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-இல் ... மேலும் பார்க்க