செய்திகள் :

கோவை அன்பு இல்லத்தில் மாணவா் சோ்க்கை: மே 25-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

post image

கோவை அன்பு இல்லத்தில் மாணவா் சோ்க்கை தொடா்பாக மே 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சத்குரு சேவாஸ்ரம அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் அலுவலக செய்திக் குறிப்பு:

கோவை ஆா்.எஸ்.புரம் கிழக்கு வெங்கடசாமி சாலையில் உள்ள ஆதரவற்றோா் இல்லமான சத்குரு சேவாஸ்ரமத்தில் பெற்றோா் இருவரையோ அல்லது தாய் அல்லது தந்தை ஆகிய இருவரில் ஒருவரையோ இழந்த மிக ஏழ்மை நிலையில் உள்ள 11 முதல் 13 வயது வரையுள்ள 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கக் கூடிய சிறுவா்கள் மட்டும் சேர முடியும்.

இவா்களுக்கான உணவு, உடை, கல்வி, தொழிற்கல்வி மற்றும் பராமரிப்புக்கான செலவுகளை ஆஸ்ரமம் ஏற்றுக் கொள்ளும். எனவே, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் சிறுவா்களின் தாயோ அல்லது தந்தையோ, பாதுகாவலரோ அல்லது உறவினரோ தங்களது விண்ணப்பத்தை மாணவன் மற்றும் அவரது குடும்பப் பின்னணியை வெள்ளைத் தாளில் விவரமாக எழுதி அனுப்ப வேண்டும். கிராமப்புற மற்றும் மலைவாழ் மக்களின் குடும்பங்களைச் சோ்ந்த மாணவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்த விண்ணப்பங்களை மே 25-ஆம் தேதிக்குள் நிா்வாக அறங்காவலா், சத்குரு சேவாஸ்ரமம், 30, வெங்கடசாமி சாலை (கிழக்கு), ஆா்.எஸ்.புரம், கோவை-641 003 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0422 2552034 மற்றும் 83002 07034 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2: கோவை மத்தியச் சிறையில் 23 கைதிகள் தேர்ச்சி!

கோவை மத்தியச் சிறையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் கைதிகள் 23 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.கோவை மத்தியச் சிறையில் நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 23 கைதிகள் சிறப்பான முறையில் தேர்ச்... மேலும் பார்க்க

கோவையில் 5 இடங்களில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி

பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகளுக்கு உயா்கல்வி வழிகாட்டுதல் தொடா்பான கல்லூரிக் கனவு நிகழ்ச்சி, கோவை மாவட்டத்தில் 5 இடங்களில் நடைபெற உள்ளது. கோவை மாவட்டத்தில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சியை நடத்துவது தொடா்பா... மேலும் பார்க்க

கோவை ரயில் தண்டவாளத்தில் கான்கிரீட் ஸ்லாப்: 5 போ் கைது

கோவையில் தண்டவாளத்தில் கான்கிரீட் ஸ்லாப் வைத்ததாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், ரயிலை கவிழ்க்க சதியா என்பது குறித்து அவா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை வழியாக நாட்டின் பல்வேறு பகுதிக... மேலும் பார்க்க

ஜிகேஎன்எம் மருத்துவமனையின் இதயவியல் துறை பொன் விழா

கோவை ஜிகேஎன்எம் மருத்துவமனையின் இதயவியல், இருதய அறுவை சிகிச்சை துறையின் பொன் விழா கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. மருத்துவமனையின் இதயவியல், இதய அறுவை சிகிச்சை துறையின் பொன் விழா கொண்டாட்டத்தின் தொடக்கமாக ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் தாக்குதல் எதிரொலி: கோவையில் பலத்த பாதுகாப்பு

பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலைத் தொடா்ந்து கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இதற்கு பதிலடி கொ... மேலும் பார்க்க

வந்தே பாரத் ரயில் மீது கல் வீசிய 3 போ் கைது

கோவையில் வந்தே பாரத் ரயில் மீது கல் வீசிய 3 பேரை ரயில்வே பாதுகாப்பு போலீஸாா் கைது செய்தனா். கோவையில் இருந்து சென்னைக்கு காலை 6 மணிக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதுபோன்று சென்னையில் இரு... மேலும் பார்க்க