செய்திகள் :

காஷ்மீர் மக்களை காத்து நிற்கும் `S-400 சுதர்சன் சக்ரா' அதிநவீன பாதுகாப்பு பற்றி தெரியுமா?

post image

இந்தியா பாகிஸ்தான் எல்லையில் கடுமையான தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக காஷ்மீரில் வான்வழி தாக்குதலை நடைபெற்றுவருகிறது. மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் பாகிஸ்தான் ட்ரோன்கள் மூலமாகவும் போர் விமானங்கள் மூலமாகவும் தாக்குதல்தாக்குதல் நடத்தி வருகிறது. அவற்றின் அதிவேக விமானங்களை வழிமறைத்து வீழ்த்துகிறது இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பு.

அதில் மிக முக்கியமானது ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட S-400 சுதர்சன் சக்ரா என்ற அதிநவீன பாதுகாப்பு அமைப்பு. இது நேற்றைய தினம் 15 ட்ரோன்களை வீழ்த்தியிருக்கிறது.

S-400 பாதுகாப்பு அமைப்பு

ஆசியாவிலேயே இந்த பாதுகாப்பு அமைப்பு இந்தியாவில் மட்டுமே உள்ளது. இதனால் 600 கிலோமீட்டர் தொலைவில் வரும் ஏவுகனைகளை கண்காணிக்க முடியும், 400 கிலோமீட்ட எல்லைக்குள் வரும் ஏவுகனைகளை தடுத்து தாக்குதல் நடத்த முடியும்.

இந்தியா ரஷ்யா இடையே S-400 பாதுகாப்பு அமைப்பு தொகுப்புகளுக்காக 35,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

வாங்கப்பட்ட அனைத்து S-400 தொகுப்புகளும் இந்திய விமானப்படையின் கீழ் செயல்பாட்டில் உள்ளன. பாகிஸ்தான் மற்றும் சீனா எல்லையில் இவற்றை நிறுவியுள்ளனர்.

ரஷ்யாவிலிருந்து வரவிருந்த மேலும் சில தொகுப்புகள் உக்ரைன் போரால் தடைபட்டுள்ளன.

ஹார்ப்பி ட்ரோன்கள் (HARPY Drones)

ஹார்ப்பி ட்ரோன்கள் பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைப்பை சேதப்படுத்தியிருக்கின்றன.

இந்த ட்ரோன்கள் ரேடார் அமைப்புகளை சேதப்படுத்தி, 'எதிரி வான் பாதுகாப்புகளை அடக்க்கும் (SEAD)' வேலையைச் செய்கின்றன.

இதில் பெரும் வெடிப்பை ஏற்படுத்தும் ஏவுகணைகள் உள்ளன, அத்துடன் இலக்கில் (ரேடார்) இருந்து வெளியேறும் கதிர்வீச்சைத் தன்னிச்சையாகக் கண்டறிந்து தாக்கும் சிறப்பு ரேடாரும் உள்ளது.

HARPY Drones
HARPY Drones

இது குறிப்பிட்ட பகுதியில் (டார்கெட்டட் ஏரியா) உள்ள இலக்கைக் குறிவைத்து தாக்கும்படி வடிவமைக்கப்பட்டது. இலக்கின் அதிர்வெண்ணைக் துரத்தி எந்த திசையிலிருந்தும் தாக்கக் கூடியது. இலக்கு வானில் பறந்துகொண்டிருந்தாலும், நிலத்தில் புதைந்திருந்தாலும் இந்த ட்ரோனிலிருந்து தப்ப முடியாது.

இது வானில் ஒன்பது மணிநேரம் தொடர்ந்து பறந்து தாக்குதல் நடத்தும். பகலானாலும் இரவானாலும் துல்லியமாக தாக்கும் திறன் பெற்றுள்ளது.

``தீவிரவாதத்துக்கு எதிராக நிற்கிறோம்; எங்கள் மண்ணை பயன்படுத்த முடியாது'' - நேபாளம் அறிக்கை!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துவரும் சூழலில் நேபாளம் நாட்டின் வெளியுறவுத் துறை பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. பத்திரிகை செய்தியில்,"ஏப்ரல் 22, 2025 தேதியில் ஒரு நேபாள... மேலும் பார்க்க

`விமான நிலையங்களில் தீவிர சோதனை; பார்வையாளர்கள் வருகைக்கு தடை..' - பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு

நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பைத் தீவிரப்படுத்த விமானப் போக்குவரத்து பாதுகாப்புத் துறை உத்தரவிட்டிருக்கிறது.பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை நடத்திய... மேலும் பார்க்க

`கடும் மோதல்' வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் F-16 போர் விமானம்!

பாகிஸ்தானின் அதிவேக சூப்பர்சோனிக் விமானமான F-16போர் விமானத்தை இந்தியாவின் தரையிலிருந்து வானில் தாக்கும் ஏவுகணைகள் வீழ்த்தியுள்ளதாக என்.டி.டி.வி தளம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு ... மேலும் பார்க்க

Doctor Vikatan: வகுப்பறையில், மீட்டிங் நடக்கும்போது.. தூக்கம் வருவது ஏன்?

Doctor Vikatan:மீட்டிங் நடக்கும்போது, வகுப்பறையில் இருக்கும்போதெல்லாம் தூக்கம் வருவது ஏன்... சாப்பிட்ட பிறகு தூக்கம் வருவது இயல்பு. ஆனால், இது போன்ற இடங்களில் சாப்பிடுவதற்கு முன்பும் தூக்கம் வருகிறதே.... மேலும் பார்க்க

இரவில் தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான்; ஜம்மு காஷ்மீரில் ஒலித்த அபாய சைரன்; இந்தியா பதிலடி!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததற்குப் பதிலடியாக, இந்திய ராணுவம் நேற்று (மே 7) பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ... மேலும் பார்க்க

Operation Sindoor: ``15 இடங்களில் பாகிஸ்தான் தாக்குதல் முறியடிப்பு'' - கர்னல் சோபியா குரேஷி

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, நேற்று (மே 7) பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது `ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) என்ற பெயரில் இந்திய ... மேலும் பார்க்க