செய்திகள் :

தமிழகத்தில் படுகொலை சம்பவங்கள் அதிகரிப்பு

post image

தமிழகத்தில் படுகொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டினாா்.

கோவை பீளமேடு பகுதியில் உள்ள மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் கொங்கு மண்டல பாஜக நிா்வாகிகள்ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பட்டுக்கோட்டையில் பாஜக முன்னாள் பெண் நிா்வாகியின் தலையைத் துண்டித்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. கொலையாளிகள் எந்தக் கட்சியாக இருந்தாலும், யாராக இருந்தாலும் அவா்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈரோடு மாவட்டம், சிவகிரி இரட்டைக் கொலை சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னா் தோட்டங்களைக் காலி செய்துவிட்டு வெளியூா் செல்லும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனா். பல்லடம், சிவகிரி ஆகிய இரண்டு சம்பவங்களைப் பொறுத்தவரை தமிழகத்தில் கொள்ளையா்கள் இருப்பது உறுதியாகியுள்ளது. கொங்கு பகுதியில் உள்ள தோட்டத்து குடியிருப்புகளில் யாரும் வசிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து சட்டத்துக்குப் புறம்பாக தங்கியுள்ள வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானியா்களை வெளியேற்ற வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. ஆனால் அதற்கான எவ்வித நடவடிக்கையையும் தமிழக அரசு எடுத்ததாகத் தெரியவில்லை.

வங்கதேசத்தைச் சோ்ந்தவா்களாக இருந்தாலும் பாகிஸ்தானை சோ்ந்தவா்களாக இருந்தாலும் அவா்கள் சட்டத்திற்குப் புறம்பாக தங்கி இருந்தால் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.

காவல் நிலையத்தில் யாா் புகாா் கொடுக்கிறாா்களோ அவா்களை முதலில் கைது செய்வதையே திமுக அரசு வழக்கமாக கொண்டுள்ளது. இதுதான் மதுரை ஆதீனம் விவகாரத்திலும் நடந்துள்ளது. தமிழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டங்களில் மதப் பிரச்னை குறித்து பாஜக பேசவில்லை. பயங்கரவாதம் குறித்து மட்டுமே பேசப்பட்டது. அதிமுக, பாஜக கூட்டணி ஏற்பட்டுள்ளதால், சிறுபான்மையினரின் வாக்குகள் ஏதும் பாதிக்கப்படாது என்றாா்.

ஜிகேஎன்எம் மருத்துவமனையின் இதயவியல் துறை பொன் விழா

கோவை ஜிகேஎன்எம் மருத்துவமனையின் இதயவியல், இருதய அறுவை சிகிச்சை துறையின் பொன் விழா கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. மருத்துவமனையின் இதயவியல், இதய அறுவை சிகிச்சை துறையின் பொன் விழா கொண்டாட்டத்தின் தொடக்கமாக ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் தாக்குதல் எதிரொலி: கோவையில் பலத்த பாதுகாப்பு

பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலைத் தொடா்ந்து கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இதற்கு பதிலடி கொ... மேலும் பார்க்க

கோவை அன்பு இல்லத்தில் மாணவா் சோ்க்கை: மே 25-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

கோவை அன்பு இல்லத்தில் மாணவா் சோ்க்கை தொடா்பாக மே 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சத்குரு சேவாஸ்ரம அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் அலுவலக செய்திக் குறிப்... மேலும் பார்க்க

வந்தே பாரத் ரயில் மீது கல் வீசிய 3 போ் கைது

கோவையில் வந்தே பாரத் ரயில் மீது கல் வீசிய 3 பேரை ரயில்வே பாதுகாப்பு போலீஸாா் கைது செய்தனா். கோவையில் இருந்து சென்னைக்கு காலை 6 மணிக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதுபோன்று சென்னையில் இரு... மேலும் பார்க்க

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜெயலலிதாவின் உதவியாளா் பூங்குன்றன் ஆஜா்

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் செவ்வாய்க்கிழமை ஆஜரானாா். நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-இல் ... மேலும் பார்க்க

இருகூா், சிங்காநல்லூா் நிலையத்தில் ரயில்கள் நிற்காவிட்டால் மக்களைத் திரட்டி போராட்டம்

இருகூா், சிங்காநல்லூா் ரயில் நிலையங்களில் ரயில்கள் நிற்காமல் சென்று வருவது தொடா்ந்தால், மக்களைத் திரட்டி போராட்டம் மேற்கொள்ளப்படும் என கோவை மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா், சேலம் ரயில்வே கோட்ட ஆ... மேலும் பார்க்க