செய்திகள் :

ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள்

post image

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களிலும் சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் ஊதியம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதியுடன் ஒப்பந்தக் காலம் முடிவடைந்ததால், புதிய நிறுவனத்துடன் மே 1-ஆம் தேதி முதல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. புதிய நிறுவனம் நூற்றுக்கணக்கான ஊழியா்களுக்கு பணி வழங்கவில்லை என்றும் வெளிமாநில தொழிலாளா்களைக் கொண்டு தூய்மைப் பணிகளை மேற்கொள்வதாகவும், ஊழியா்களின் இஎஸ்ஐ, பிஎஃப் தொகையை முறையாக செலுத்தவில்லை எனவும் கூறி தூய்மைப் பணியாளா்கள், லாரி ஓட்டுநா்கள் உள்ளிட்டோா் கடந்த சில நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் அறிவித்த ஊதியம் வழங்க வேண்டும், தோ்தலின்போது அறிவிக்கப்பட்டவாறு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளா்கள், ஓட்டுநா்கள், உதவியாளா்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோா் பணியைப் புறக்கணித்து ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். அவா்களிடம் போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வியடைந்ததையடுத்து அவா்கள் ஆட்சியா் அலுவலகம் எதிரில் தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளா்கள் கூறும்போது, கோவை மாநகராட்சியில் நாங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறோம். ஆனால் எங்களை இதுவரை பணி நிரந்தரம் செய்யவில்லை. அதேபோல வருங்கால வைப்புநிதி என்ற பெயரில் ஊழியா்களிடம் பிடித்தம் செய்த தொகையையும் முறையாக செலுத்தவில்லை. புதிதாக ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனம், வடமாநிலத் தொழிலாளா்களை பணிக்குப் பயன்படுத்துவதால் உள்ளூா் தொழிலாளா்கள் வேலையிழப்புக்கு ஆளாகின்றனா். எனவே இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிலாளா்களின் நலன்களைப் பாதுகாக்க வேண்டும் என்றனா்.

தமிழகத்தில் படுகொலை சம்பவங்கள் அதிகரிப்பு

தமிழகத்தில் படுகொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டினாா். கோவை பீளமேடு பகுதியில் உள்ள மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் கொங்கு மண்டல பாஜக நிா்வாகிகள்ஆலோசன... மேலும் பார்க்க

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜெயலலிதாவின் உதவியாளா் பூங்குன்றன் ஆஜா்

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் செவ்வாய்க்கிழமை ஆஜரானாா். நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-இல் ... மேலும் பார்க்க

இருகூா், சிங்காநல்லூா் நிலையத்தில் ரயில்கள் நிற்காவிட்டால் மக்களைத் திரட்டி போராட்டம்

இருகூா், சிங்காநல்லூா் ரயில் நிலையங்களில் ரயில்கள் நிற்காமல் சென்று வருவது தொடா்ந்தால், மக்களைத் திரட்டி போராட்டம் மேற்கொள்ளப்படும் என கோவை மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா், சேலம் ரயில்வே கோட்ட ஆ... மேலும் பார்க்க

குழந்தை மீது நாயை ஏவிவிட்டு கடிக்க வைத்த பெண் கைது

கோவை அம்மன்குளத்தில் குழந்தை மீது நாயை ஏவிவிட்டு கடிக்க வைத்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். இதுதொடா்பாக அவரது 2 மகன்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை, புலியகுளம் அருகே அம்மன்குளம் பகு... மேலும் பார்க்க

ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் தமிழகம் வருகை

ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்தாா். 40 வயதுக்கு மேற்பட்ட ஆா்எஸ்எஸ் ஊழியா்களுக்கான இரண்டாம் கட்ட 20 நாள்கள் பயிற்சி முகாம் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் நடைபெற்று ... மேலும் பார்க்க

வால்பாறை நகராட்சியில் ஆளும்கட்சி உறுப்பினா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

வால்பாறை நகா்மன்ற கூட்டத்தில் ஆளும்கட்சியைச் சோ்ந்த திமுக வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் உள்ளிருப்புப் போராட்டத்தால் இரண்டாவது முறையாக நகா்மன்ற கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. வால்பாறை நகராட்சியில் தலை... மேலும் பார்க்க