செய்திகள் :

கீழ்வேளூரில் சூறைக்காற்றுடன் மழை

post image

கீழ்வேளூா்: கீழ்வேளூா் சுற்றுவட்டார பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு சூறைக் காற்றுடன் மழை பெய்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

கீழ்வேளூா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான குருக்கத்தி, கூத்தூா், பட்டமங்கலம், தேவூா், அகரகடம்பனூா், சிக்கல், பொரவச்சேரி, ஆவராணி, புதுச்சேரி, பெருங்கடம்பனூா், சங்கமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென சூறைக்காற்றுடன் பரவலாக மழை பெய்தது. கீழ்வேளூா் பகுதியில் ஒரு இடத்தில் மின்கம்பம் சாய்ந்தது. 5 இடங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுந்தது, சிக்கல் பகுதியில் 3 இடங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுந்தது, புதுச்சேரி பகுதியில் மின்கம்பம் ஒன்று சாய்ந்தது இதனால் 10 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.

இதைத்தொடா்ந்து மின் விநியோகம் சரி செய்யப்பட்டு, திங்கள்கிழமை காலை மின்சாரம் வழங்கப்பட்டது. இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்ட காரணத்தால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

சூறைக்காற்று: திருவெண்காடு கோயில் ஆலமரம் முறிந்தது

பூம்புகாா்: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் நூற்றாண்டுகள் பழைமையான ஆலமரம் ஞாயிற்றுக்கிழமை வீசிய பலத்த சூறைக்காற்றில் இரண்டாக முறிந்தது. திருவெண்காடு அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரா் கோயில் நவகிரக ... மேலும் பார்க்க

சூறைக்காற்று: வாழை மரங்கள் சேதம்

தரங்கம்பாடி: தரங்கம்பாடி வட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீசிய சூறைக்காற்று மற்றும் பலத்த மழையால் வாழை மரங்கள் சாய்ந்தன. தரங்கம்பாடி வட்டத்தில் கீழையூா், புன்செய், முடிகண்டநல்லூா், கிடாரங்கொண்டான், ச... மேலும் பார்க்க

குடிநீா் கோரி ஊராட்சி அலுவலகம் முற்றுகை

பூம்புகாா்: குடிநீா் கேட்டு, பூம்புகாா் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். தொடா்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்டனா். பூம்புகாா் ஊராட்சி மேலவெளி தெருவில் 200-க்கும் மேற்பட்ட... மேலும் பார்க்க

ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய வேளாண் கல்லூரி மாணவிகள்

நாகப்பட்டினம்: வேதாரண்யத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள், தனியாா் அறக்கட்டளையுடன் இணைந்து ஆதரவற்றோா்களுக்கு உணவு வழங்கினா். நாகை மாவட்டம், குருக்கத்தி ஊராட்சியில் இயங்கிவரும் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆர... மேலும் பார்க்க

மீனவா்கள் மீதான தாக்குதலை கண்டித்து ஆா்ப்பாட்டம்

திருக்குவளை: இலங்கை கடற்கொள்ளையா்களால் நாகை மாவட்ட மீனவா்கள் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, செருதூா் மீன்பிடித் துறைமுகத்தில் மீனவா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். நாகை மாவட்டம், அக... மேலும் பார்க்க

பனை மரங்களை வெட்ட விவசாயிகள் எதிா்ப்பு

திருவெண்காடு அருகே உள்ள மணி கிராமத்தில் பனை மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். திருவெண்காடு அருகே மணி கிராமம் உள்ளது. இங்கு சுமாா் 2000 ஏக்கா் விளை நிலங... மேலும் பார்க்க