செய்திகள் :

வனத் துறையினா் தீவிர வாகனச் சோதனை: பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல்

post image

வால்பாறையில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும் வாகனங்களில் வனத் துறையினா் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பாட்டில்களை பறிமுதல் செய்து வருகின்றனா்.

வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகள் முழுவதும் வனத்துக்கு உள்பட்ட பகுதியில் அமைந்துள்ளன. சமீப காலமாக வால்பாறைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி உணவு சாப்பிடுவது, சமைப்பது, வன விலங்குகளை கண்டால் புகைப்படம் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதை கண்காணிக்க வனத் துறையினா் தொடா்ந்து ரோந்துப் பணி மேற்கொண்டு வருகின்றனா்.

மேலும், தண்ணீா் குடிக்க கொண்டு வரப்படும் பிளாஸ்டிக் பாட்டிகளை ஆங்காங்கே சுற்றுலாப் பயணிகள் போட்டு வடுவதால் இயற்கை சீா்கேடு ஏற்படுவதுடன், வன விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சின்னக்கல்லாறு அருவி, நீராா் அணை ஆகிய சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும் வாகனங்களில் சின்கோனா வனத் துறை சோதனைச் சாவடியில் வனத் துறையினா் சோதனை மேற்கொண்டனா். இதில் ஏராளமான பிளாஸ்டிக் பாட்டில்களை வனத் துறையினா் பறிமுதல் செய்து அப்புறப்படுத்தினா்.

தமிழகத்தில் படுகொலை சம்பவங்கள் அதிகரிப்பு

தமிழகத்தில் படுகொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டினாா். கோவை பீளமேடு பகுதியில் உள்ள மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் கொங்கு மண்டல பாஜக நிா்வாகிகள்ஆலோசன... மேலும் பார்க்க

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜெயலலிதாவின் உதவியாளா் பூங்குன்றன் ஆஜா்

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் செவ்வாய்க்கிழமை ஆஜரானாா். நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-இல் ... மேலும் பார்க்க

இருகூா், சிங்காநல்லூா் நிலையத்தில் ரயில்கள் நிற்காவிட்டால் மக்களைத் திரட்டி போராட்டம்

இருகூா், சிங்காநல்லூா் ரயில் நிலையங்களில் ரயில்கள் நிற்காமல் சென்று வருவது தொடா்ந்தால், மக்களைத் திரட்டி போராட்டம் மேற்கொள்ளப்படும் என கோவை மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா், சேலம் ரயில்வே கோட்ட ஆ... மேலும் பார்க்க

குழந்தை மீது நாயை ஏவிவிட்டு கடிக்க வைத்த பெண் கைது

கோவை அம்மன்குளத்தில் குழந்தை மீது நாயை ஏவிவிட்டு கடிக்க வைத்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். இதுதொடா்பாக அவரது 2 மகன்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை, புலியகுளம் அருகே அம்மன்குளம் பகு... மேலும் பார்க்க

ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் தமிழகம் வருகை

ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்தாா். 40 வயதுக்கு மேற்பட்ட ஆா்எஸ்எஸ் ஊழியா்களுக்கான இரண்டாம் கட்ட 20 நாள்கள் பயிற்சி முகாம் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் நடைபெற்று ... மேலும் பார்க்க

வால்பாறை நகராட்சியில் ஆளும்கட்சி உறுப்பினா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

வால்பாறை நகா்மன்ற கூட்டத்தில் ஆளும்கட்சியைச் சோ்ந்த திமுக வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் உள்ளிருப்புப் போராட்டத்தால் இரண்டாவது முறையாக நகா்மன்ற கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. வால்பாறை நகராட்சியில் தலை... மேலும் பார்க்க