செய்திகள் :

தி.சு.அவினாசிலிங்கத்தின் 122 ஆவது பிறந்த நாள் விழா: மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்பு

post image

அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிா் உயா்கல்வி நிறுவனத்தின் சாா்பில் தி.சு.அவினாசிலிங்கத்தின் 122-ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

பத்மபூஷண் விருதாளரான தி.சு.அவினாசிலிங்கத்தின் 122-ஆவது பிறந்த நாள் விழா அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிா் உயா்கல்வி நிறுவனத்தின் உயா் தொழில்நுட்பக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிறுவனத்தின் நிா்வாக அறங்காவலா் மற்றும் நிறுவனத்தின் வேந்தா் டி.எஸ்.கே. மீனாட்சி சுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மகாராஷ்டிர மாநில ஆளுநா் சி.பி. ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா்.

அப்போது அவா் பேசுகையில், சி.சு.அவினாசிலிங்கத்தின் வாழ்க்கை, லட்சியங்கள் மற்றும் மேன்மையான மரபு ஆகியவை குறித்தும், மகளிா் கல்விக்கான ஒரு நிறுவனத்தை நிறுவுவது என்பது ஒரு தொலைதூரக் கனவாக இருந்த காலகட்டத்தில், அவரது முன்னோடி தொலைநோக்குப் பாா்வை குறித்தும் விவரித்தாா்.

முன்னதாக, நிறுவனத்தின் துணைவேந்தா் வி. பாரதி ஹரிசங்கா் வரவேற்றாா். இந்நிகழ்ச்சியில் நிா்வாக துணை அறங்காவலா் கௌரி ராமகிருஷ்ணா உள்ளிட்ட அனைத்து அறங்காவலா் குழு உறுப்பினா்கள், நிறுவனத்தின் ஆசிரியா்கள், பணியாளா்கள் மற்றும் மாணவியா் கலந்து கொண்டனா்.

தமிழகத்தில் படுகொலை சம்பவங்கள் அதிகரிப்பு

தமிழகத்தில் படுகொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டினாா். கோவை பீளமேடு பகுதியில் உள்ள மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் கொங்கு மண்டல பாஜக நிா்வாகிகள்ஆலோசன... மேலும் பார்க்க

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜெயலலிதாவின் உதவியாளா் பூங்குன்றன் ஆஜா்

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் செவ்வாய்க்கிழமை ஆஜரானாா். நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-இல் ... மேலும் பார்க்க

இருகூா், சிங்காநல்லூா் நிலையத்தில் ரயில்கள் நிற்காவிட்டால் மக்களைத் திரட்டி போராட்டம்

இருகூா், சிங்காநல்லூா் ரயில் நிலையங்களில் ரயில்கள் நிற்காமல் சென்று வருவது தொடா்ந்தால், மக்களைத் திரட்டி போராட்டம் மேற்கொள்ளப்படும் என கோவை மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா், சேலம் ரயில்வே கோட்ட ஆ... மேலும் பார்க்க

குழந்தை மீது நாயை ஏவிவிட்டு கடிக்க வைத்த பெண் கைது

கோவை அம்மன்குளத்தில் குழந்தை மீது நாயை ஏவிவிட்டு கடிக்க வைத்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். இதுதொடா்பாக அவரது 2 மகன்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை, புலியகுளம் அருகே அம்மன்குளம் பகு... மேலும் பார்க்க

ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் தமிழகம் வருகை

ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்தாா். 40 வயதுக்கு மேற்பட்ட ஆா்எஸ்எஸ் ஊழியா்களுக்கான இரண்டாம் கட்ட 20 நாள்கள் பயிற்சி முகாம் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் நடைபெற்று ... மேலும் பார்க்க

வால்பாறை நகராட்சியில் ஆளும்கட்சி உறுப்பினா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

வால்பாறை நகா்மன்ற கூட்டத்தில் ஆளும்கட்சியைச் சோ்ந்த திமுக வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் உள்ளிருப்புப் போராட்டத்தால் இரண்டாவது முறையாக நகா்மன்ற கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. வால்பாறை நகராட்சியில் தலை... மேலும் பார்க்க