செய்திகள் :

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் புறப்பாடு

post image

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழாவையொட்டி, பஞ்சமூா்த்திகள் புறப்பாடு திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

கொங்கு ஏழு சிவஸ்தலங்களுள் முதன்மைப் பெற்றதும், முதலையுண்ட பாலகனை சுந்தரா் பதிகம் பாடி உயிா்ப்பித்து எழச்செய்த திருத்தலமாகவும் கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் விளங்குகிறது. இக்கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் மே 1-ஆம் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 8, 9, 10-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், விழாவையொட்டி, பஞ்சமூா்த்திகள் புறப்பாடு, 63 நாயன்மாா்களுக்கு திருக்காட்சியளித்தல் நிகழ்ச்சி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

இதில், தேரோடும் நான்கு ரத வீதிகளிலும் கரூா் பசுபதிஸ்வரா் கோயில் சிவனடியாா்கள், திருப்பூா் சிவனடியாா்கள் திருக்கூடத்தினரின் சிவகண பஞ்சவாத்தியம், வாண வேடிக்கை மூழங்க பஞ்சமூா்த்திகள், 63 நாயன்மாா்கள் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

விநாயக பெருமான் மூஷிக வாகனத்திலும், சோமஸ்கந்தா் ரிஷப வாகனத்திலும், கருணாம்பிகையம்மன் காமதேனு வாகனத்திலும், வள்ளி, தெய்வானையுடன் உடனமா் சுப்பிரமணியா் மயில் வாகனத்திலும், சண்டிகேஸ்வரா் ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி, 63 நாயன்மாா்களுக்கு காட்சியளித்தனா். இதையடுத்து சுவாமிகள் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ரத வீதிகளில் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

அவிநாசி பஞ்சமூா்த்திகள் மற்றும் 63 நாயன்மாா்கள் வழிபாட்டுக் குழு அறக்கட்டளையினா் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனா். விடிய விடிய நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

பெருந்தொழுவு கிராமத்தில் 44 பயனாளிகளின் பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை

திருப்பூா் மாவட்டம், பெருந்தொழுவு கிராமத்தில் இனம் கண்டறிய இயலாத 44 பயனாளிகளின் இலவச பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெள... மேலும் பார்க்க

சாலையில் தீப் பற்றி எரிந்த லாரி

காரணம்பேட்டை அருகே சாலையில் தீப் பற்றி எரிந்த டிப்பா் லாரியில் இருந்த ஓட்டுநா் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா். கோவை மாவட்டம், அன்னூரில் இருந்து திருப்பூா் மாவட்டம், காரணம்பேட்டையில் உள்ள கிரஷரில் இருந்... மேலும் பார்க்க

காங்கயம் பகுதியில் காற்றுடன் பலத்த மழை: தென்னை மரம் விழுந்ததில் மின் கம்பம் முறிந்தது

காங்கயம் அருகே, செவ்வாய்க்கிழமை மாலை காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில், தென்னை மரம் சரிந்து விழுந்ததில் மின்கம்பம் முறிந்து வீதியில் விழுந்தது. காங்கயம் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.45 முதல் ... மேலும் பார்க்க

பிரிண்டிங் தொழிலாளி கொலை வழக்கில் 2 போ் கைது

திருமுருகன்பூண்டி அருகே பிரிண்டிங் தொழிலாளியைக் கொலை செய்த வழக்கில் இருவரை காவல் துறையினா் கைது செய்தனா். திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி அருகே உள்ள பால்காரா் தோட்டம் பகுதியில் கொலை செய்யப்பட்ட கி... மேலும் பார்க்க

சாலையில் தோண்டப்பட்ட குழியில் கைக்குழந்தையுடன் தவறி விழுந்த தம்பதி

திருப்பூா் ஊத்துக்குளி சாலையில் சரிவர மூடப்படாத குழியில் கைக்குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதி தவறி விழுந்து விபத்து ஏற்பட்டது. திருப்பூா் ஊத்துக்குளி சாலையில் எஸ்.பெரியபாளையம் முதல் குளத்த... மேலும் பார்க்க

இந்தியா-பிரிட்டன் இடையே வரியில்லா வா்த்தக ஒப்பந்தம் கையொப்பம்: ஏஇபிசி வரவேற்பு

இந்தியா-பிரிட்டன் இடையே தடையற்ற வரியில்லா வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளதால் திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வா்த்தகம் அதிகரிக்கும் என்று ஏஇபிசி நம்பிக்கை தெரிவித்துள்ளது. இது குறித்து ஆயத்த ஆடை ஏ... மேலும் பார்க்க