செய்திகள் :

சம்மனை நான்தான் கிழிக்கச் சொன்னேன்: சீமான் மனைவி

post image

வளசரவாக்கம் காவல்துறையினர் வீட்டின் முன்பு ஒட்டிய சம்மனை, படிப்பதற்காக நான்தான் கிழிக்கச் சொன்னேன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் மனைவி கயல்விழி தெரிவித்துள்ளார்.

காவல்துறையினரின் அழைப்பாணையை ஏற்று வியாழக்கிழமை சீமான் ஆஜராகாததால், வெள்ளிக்கிழமை நேரில் ஆஜராகுமாறு, சீமானின் நீலாங்கரை வீட்டின் கதவில், காவல்துறையினர் வியாழக்கிழமை பிற்பகல் சம்மன் ஒட்டினர்.

இந்த நிலையில், காவல்துறையினர் ஒட்டிய சம்மனை சீமானின் ஓட்டுநர் கிழித்தார். இதுகுறித்து நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், விசாரணைக்கு சென்ற நீலாங்கரை ஆய்வாளர் பிரவீனுக்கு சீமான் வீட்டு காவலருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தொடர்ந்து, சீமான் வீட்டு காவலரான முன்னாள் ராணுவ வீரரையும் ஓட்டுநரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

கயல்விழி விளக்கம்

சீமான் வீட்டில் வியாழக்கிழமை நடந்த சம்பவம் குறித்து அவரது மனைவி கயல்விழி விளக்கம் அளித்துள்ளார்.

செய்தியாளர்களை வெள்ளிக்கிழமை சந்தித்த அவர் பேசியதாவது:

”வளசரவாக்கம் காவல்துறையினர் கொடுக்க வந்த சம்மனை முறைப்படி கையெழுத்திட்டு பெற்றுக் கொள்ள தயாராக இருந்தோம். ஆனால், வீட்டின் கதவில் ஒட்டிவிட்டுச் சென்றனர்.

வெளியே வந்து அதனை படிக்க எனக்கு சங்கட்டமாக இருந்ததால், நான்தான் சம்மனை எடுத்து வரச் சொன்னேன். அதனை எடுக்க முடியாததால், கிழிக்க நேரிட்டது. என்னை கைது செய்யாமல் ஓட்டுநரை கைது செய்துள்ளனர்.

நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன் வந்தபோது, நாங்கள் கதவை திறக்க முடியாது என்று கூறவில்லை. முன்னாள் ராணுவ வீரரிடம் அவர் அப்படி நடந்துகொண்டது முறையில்லை. ஆய்வாளர் பிரவீன் வேண்டுமென்றே இப்படி செய்கிறார்.

காவல்துறையினர் மீது எங்களுக்கு மரியாதை இருக்கிறது. ஆனால், நேற்று அவர்கள் நடந்துகொண்டது ஏற்றுக் கொள்ளமுடியாதது. மேலிடத்தின் அழுத்தத்தால் இவ்வாறு செய்துள்ளனர்.

காவலர் வைத்திருந்த துப்பாக்கியை போலீஸிடம் கொடுக்கவே வெளியே எடுத்தார். மிரட்டுவதற்காக இல்லை. கைது செய்யப்பட்டவர்களை காவல்துறையினர் அடித்துள்ளனர். ஆய்வாளர் பிரவீன் மீது மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கு தொடர்வேம்.

சீமான் பல வழக்குகளை எதிர்கொண்டு வருவதால் எங்களுக்கு வழக்கின் மீதெல்லாம் பயமில்லை. சட்டப்படி வழக்குகளை எதிர்கொள்வோம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க : சீமான் வீட்டில் போலீஸாருடன் தள்ளுமுள்ளு: காவலாளி உள்பட இருவா் கைது

இதனிடையே, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இன்று மாலை 6 மணியளவில் சீமான் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மாற்றம்!

மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதியை மாற்றம் செய்து தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து ஈரோடு மாநகராட்சி ஆணையராக இருந்த ஸ்ரீகாந்த் மயிலாடுதுறை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். மயிலாடுதுறை ஆட்சியரு... மேலும் பார்க்க

மயிலாடுதுறை ஆட்சியருக்கு அண்ணாமலை கண்டனம்

மூன்றரை வயது குழந்தை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் மயிலாடுதுறை ஆட்சியருக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ள் தளப் பதிவில், சீர்காழியில், மூன்றரை... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலினுடன் மு.க.அழகிரி சந்திப்பு

முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து அவரது அண்ணன் மு.க.அழகிரி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை இந்த சந்திப்பு நடைபெற்றது. முதல்வர் ஸ்டா... மேலும் பார்க்க

கைதுக்கு பயப்படும் ஆள் நான் இல்லை: சீமான்

கைது நடவடிக்கைக்கு பயப்படும் ஆள் நான் கிடையாது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சேலத்தில் இருந்து விமானத்தில் வெள்ளிக்கிழமை சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில்... மேலும் பார்க்க

நிதிப் பகிர்வைக் குறைக்கும் மத்திய அரசு? ராமதாஸ் கண்டனம்!

மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வு குறைக்கப்படுவதாக வெளியான தகவல்களையடுத்து, மத்திய அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதிப் பகிர்வினை 41 சதவிகிதத்திலிருந... மேலும் பார்க்க

'கலெக்டர், எஸ்.பி. நான் சொல்றததான் கேட்கணும்' - தருமபுரி திமுக மாவட்டப் பொறுப்பாளர் பேச்சு

மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., அதற்கு கீழ் உள்ள அத்தனை நிர்வாகமும் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும் என தருமபுரி திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் தர்மசெல்வன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி ... மேலும் பார்க்க