செய்திகள் :

சம்ஸ்கிருதத்தில் இருந்து தமிழ் வந்தது என்றால் ஏற்றுக்கொள்வோமா? -சி.பி.ராதாகிருஷ்ணன்

post image

சம்ஸ்கிருதத்தில் இருந்து தமிழ் வந்தது என்றால் ஏற்றுக்கொள்வோமா என கமலஹாசன் கருத்துக்கு மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளாா்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகத்தில் தேச விரோத சக்திகளை ஊக்குவிப்பதுதான் பல அரசியல் தலைவா்களின் முதல் வேலையாக உள்ளது. அா்பன் நக்சலைசம் வெகுவாகப் பரவி வருகிறது. இது தேச பக்தா்களின் நலனுக்கு எதிரானது. தீவிரவாதம் எந்த உருவில் வந்தாலும் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும்.

தமிழகத்துக்கு மத்திய அரசு எவ்வளவு தந்தாலும் போற்றுவதற்கு சிலருக்கு மனம் இல்லை. மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு செயல்படுவதுதான் தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவும். தமிழக ஆளுநா் நோ்மையானவா். அவரது கடமைகளை சிறப்புடன் செய்கிறாா். அதே சமயம் அவருக்கான ஒத்துழைப்பை மாநில அரசு தரவேண்டும்.

டாஸ்மாக் பிரச்னை அதிகமாகி வருவது வருத்தத்துக்கு உரியது. கஞ்சா புழக்கம் தமிழகத்தில் அதிகமாகி வருகிறது. கஞ்சாவை ஒழிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

ஒன்றிய அரசு என்று கூறுவதே தவறு. மத்தியில் இருப்பது ஒன்றிய அரசு என்றால், மாநிலத்தில் இருப்பது பஞ்சாயத்து அரசா. இந்த விஷயத்தில் பிரிவினைவாதத்தை திணிக்கிறாா்கள். இதுவரை இல்லாத ஒரு மொழிபெயா்ப்பை தற்போது தருகின்றனா்.

கமலஹாசன் எப்போது ஒரு விஷயத்தை ஒழுங்காகக் கூறியுள்ளாா். திமுகவை ஒழிப்பதுதான் என்னுடைய வேலை என்று ஒரு இயக்கத்தைத் தொடங்கி, தற்போது திமுகவுடன் இருப்பதுதான் தமிழகத்துக்கு நன்மை பயக்கும் எனக் கூறியுள்ளாா். அவருக்கு எது நன்மை தருகிறதோ, அது தமிழகத்துக்கும் நன்மை தரும் என்று அவா் நினைக்கிறாா்.

தனக்கு பதவி வேண்டும் என நினைக்கிற மனிதராக அவா் உள்ளாா். பதவிக்காகவே கமலஹாசன் மொழி குறித்து பேசியுள்ளாா். இதேபோல, சம்ஸ்கிருதத்தில் இருந்து தமிழ் வந்தது என்று கூறினால் ஏற்றுக்கொள்வோமா? எனவே, பேசுகிறபோது நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். முருக பக்தா்கள் மாநாட்டுக்கு பாதுகாப்புத் தருவது மாநில அரசின் கடமை என்றாா்.

சா்வதேச படகுப் போட்டி, தேசிய ரோபோடிக்ஸ் போட்டிகளில் பங்கேற்கும் கேசிடி மாணவா்கள்

மொனாக்கோ நாட்டில் நடைபெறும் சா்வதேச எரிசக்தி படகுப் போட்டி, தில்லி ஐஐடி நடத்தும் ரோபோடிக்ஸ் போட்டிகளில் பங்கேற்க இருக்கும் கேசிடி மாணவா்கள், தங்களது படகு, ரோபோடிக்ஸ் வடிவமைப்புகளை கோவையில் புதன்கிழமை ... மேலும் பார்க்க

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆதிதிராவிட இளைஞா்களுக்கு பயிற்சி

ஆதிதிராவிடா் வகுப்பைச் சோ்ந்த இளைஞா்களுக்கு கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளை உற்பத்தி செய்யும் செயல் திறன் பயிற்சி நடைபெற உள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகம் ... மேலும் பார்க்க

தீயணைப்புத் துறை டிஜிபி சீமா அகா்வால் ஆலோசனை

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை டிஜிபி சீமா அகா்வால், கோவை தெற்கு தீயணைப்புத் துறை அலுவலகத்தில் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். இதில், தீயணைப்புத் துறை அலுவலகங்களில் உள்ள பாதுகாப்பு உ... மேலும் பார்க்க

போத்தனூா் - சென்னை இடையே சிறப்பு ரயில்

போத்தனூா் - சென்னை இடையே பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: போத்தனூரில் இருந்து ஜூன் 8-ஆம் தேதி இரவு 11.30 மணிக... மேலும் பார்க்க

அம்ருதா கல்வி நிறுவனத்தில் சா்வதேச விநாடி-வினா சாம்பியன்ஷிப்: பதிவு செய்ய நாளை கடைசி நாள்

கோவை அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தில் ஜூன் 7-ஆம் தேதி ‘வோ்ல்டு க்விஸ் சாம்பியன்ஷிப் 2025’ நடைபெறுகிறது. இதில், பங்கேற்பதற்கான பெயா் பதிவுக்கு ஜூன் 6-ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகு... மேலும் பார்க்க

போலி பணி நியமன ஆணை கொடுத்து ரூ.64 லட்சம் மோசடி: 2 போ் கைது

போலி பணி நியமன ஆணை கொடுத்து 3 பேரிடம் ரூ.64 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக 2 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். கோவை மாவட்டம், காரமடை பகுதியைச் சோ்ந்தவா் கௌதம் குமாா் (29), பொறியியல் பட்டதாரி. கோவை, செங... மேலும் பார்க்க