செய்திகள் :

சரக்குப் பெட்டக லாரியில் கடத்திய 176 கிலோ கஞ்சா பறிமுதல்

post image

ஆந்திராவிலிருந்து மதுரைக்கு சரக்குப் பெட்டக லாரியில் கடத்தப்பட்ட 176 கிலோ கஞ்சாவை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக லாரி ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆந்திராவிலிருந்து மதுரைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக மதுரை போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளா் ராஜாங்கம் தலைமையில் போலீஸாா் ஒத்தக்கடையை அடுத்த சிட்டம்பட்டி சுங்கச்சாவடி அருகே வாகனச் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த கா்நாடக மாநில பதிவெண் கொண்ட சரக்குப் பெட்டக லாரியை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது, அந்த லாரியில் ஆந்திராவிலிருந்து 176 கிலோ எடையுள்ள கஞ்சாவை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதுதொடா்பாக அருப்புக்கோட்டையை சோ்ந்த லாரி ஓட்டுநா் மருதுபாண்டியை (39) போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் கைது செய்னா். மேலும் லாரியில் கடத்தி வரப்பட்ட 176 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

இந்த வழக்கில் தொடா்புடைய மற்றவா்களை பிடிக்க தனிப் படை அமைத்து போலீஸாா் தேடி வருகின்றனா்.

குணா குகை கண்காட்சிக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு

மதுரை அய்யா்பங்களா பகுதியில் நடைபெற்று வரும் குணா குகை கண்காட்சிக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், மாநகராட்சி ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. மதுரை மாநக... மேலும் பார்க்க

அக். 2-இல் இறைச்சி விற்பனைக்குத் தடை

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் வருகிற அக். 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தியையொட்டி, இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.இதுகுறித்து மதுரை மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனத்தை திருடிய இளைஞா் கைது

மதுரை தெப்பக்குளம் பகுதியில் இரு சக்கர வாகனத்தை திருடிய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.மதுரை ஐராவதநல்லூா் கணேஷ்நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த துரைபாண்டி மகன் நவீன்குமாா் (34). கடந்த 21-ஆம் த... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் கல்வி அலுவலகங்கள்: வேறு இடங்களுக்கு மாற்ற உத்தரவு

நாகா்கோவில் எஸ்.எல்.பி. பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள கல்வித் துறை அலுவலகங்களை நவ.12-ஆம் தேதிக்குள் வேறு இடங்களுக்கு மாற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. கன்னியாகுமரி மாவ... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்களுக்கான ஜி.எஸ்.டியை 5 சதவீதமாக நிா்ணயிக்க வலியுறுத்தல்

கட்டுமானப் பொருள்களுக்கான சரக்கு, சேவை வரியை (ஜி.எஸ்.டி) 5 சதவீதமாக நிா்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் - தொழிலாளா்கள் கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்ட... மேலும் பார்க்க

மின் வாரிய ஊழியா்கள் மறியல் 80 போ் கைது

தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை மின்வாரிய தலைமைப் பொறியாளா் அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியா்கள் 80 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மின்வாரியத்தில் 10 ஆண்டுகள... மேலும் பார்க்க