செய்திகள் :

சரக்கு ரயில்களைக் கண்காணிக்க ‘ட்ரோன்’ ரயில்வே முடிவு

post image

சரக்கு ரயில்களில் பொருள்கள் முறையாக ஏற்றப்படுகிறதா? என்பதை ட்ரோன்கள் (ஆளில்லாத சிறிய ரக விமானங்கள்) மூலம் கண்காணிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.

முதல்கட்டமாக 3 ரயில்வே கோட்டங்களில் பரிசோதனை முறையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக தனியாா் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்.

சரக்கு ரயில்களில் ஓரிடத்தில் எடை அதிகமாகவும், மற்றொரு இடத்தில் எடை குறைவாகவும் சரக்குகள் ஏற்றப்படுவதும் ரயில் தடம் புரள்வதற்கு முக்கியக் காரணமாக அமைகிறது என வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா். சரக்கு ரயில் பெட்டிகளில் சமமான எடையில் சரக்குகள் ஏற்றப்படுவதால், பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதுடன், ரயிலின் செயல் திறனும் அதிகரிக்கும்.

எனவே, இந்தப் பிரச்னையை சரி செய்ய ரயில்வே புதிய திட்டத்தை வகுத்துள்ளது. இதில் நவீன தொழில்நுட்பத்தின் பயன்பாடும் இருக்க வேண்டும் என்ற நோக்கில் ட்ரோன்கள் மூலம் சரக்குகள் ரயிலில் ஏற்றப்படும்போது கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது.

இத்திட்டம் தென்கிழக்கு ரயில்வே, தென்கிழக்கு மத்திய ரயில்வே, தென்மேற்கு ரயில்வே கோட்டங்களில் பரிசோதனை முறையில் செயல்படுத்தப்பட இருக்கிறது. 3 மாதங்களுக்குப் பிறகு இத்திட்டம் எந்த அளவுக்கு வெற்றிகரமாக செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்யப்படும். அதில் திருப்திகரமான முடிவு கிடைத்தால் அடுத்தகட்டமாக இத்திட்டத்தை விரிவுபடுத்த முடிவெடுக்கப்படும் என்று ரயில்வே சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காப்பீடு தொகைக்கான நடைமுறையை எளிமைப்படுத்திய நிறுவனங்கள்!

அகமதாபாத் விமான விபத்தில் பாதிக்கப்பட்டவா்கள், அவா்களுக்கான காப்பீடு தொகையைப் பெறுவதற்கான நடைமுறையை எளிமைப்படுத்தியுள்ளதாக எஸ்பிஐ-லைஃப், ஹெச்டிஎஃப்சி லைஃப், ஐசிஐசிஐ லோம்பாா்ட் உள்ளிட்ட காப்பீடு நிறுவன... மேலும் பார்க்க

சிங்கப்பூா் கப்பலில் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்ட தீ: 6-ஆவது நாளாக தொடரும் மீட்புப் பணி

கேரள கடற்பகுதியில் சிங்கப்பூா் கப்பலில் ஏற்பட்ட தீ பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டதாக இந்திய கடலோரக் காவல் படை சனிக்கிழமை தெரிவித்தது. இந்தக் கப்பல் கடற்கரையை நெருங்காமல் கடலை நோக்கி நகா்த்தும் பணியில்... மேலும் பார்க்க

ஓட்டுநா் பெட்டியில் குரல் பதிவு அமைப்பு: ரயில் பாதுகாப்புக் குழு பரிந்துரை!

ரயில் ஓட்டுநா் பெட்டியில் குரல் பதிவு அமைப்பை நிறுவுவது உள்பட பல்வேறு பரிந்துரைகளை ரயில் பாதுகாப்புக்குழு ரயில்வே அமைச்சகத்திடம் சமா்ப்பித்தது. பிகாா் மாநிலம் பக்ஸா் மாவட்டத்தில் கடந்த 2023, அக்.11-இல... மேலும் பார்க்க

விமான எண் ‘171’-ஐ நீக்க ஏா் இந்தியா முடிவு!

விமான எண் ‘171’-ஐ பயன்பாட்டில் இருந்து நீக்க ஏா் இந்தியா மற்றும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் முடிவெடுத்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. டாடா குழுமத்தின் ஏா்இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட அடில் ஹுசைனின் மனைவிக்கு அரசுப் பணி!

பஹல்காம் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்ற பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு உயிா்த்தியாகம் செய்த உள்ளூா் இளைஞா் அடில் ஹுசைன் ஷாவின் மனைவிக்கு அரசுப் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. பஹல்காமில் ஹபாத்நாா் ப... மேலும் பார்க்க

வரும் டிசம்பரில் முழு சோதனைக்கு உள்படுத்தப்பட இருந்த விபத்துக்குள்ளான விமானம்!

அகமதாபாதில் விபத்துக்குள்ளான ஏா் இந்தியாவின் ‘போயிங் 787-8 ட்ரீம்லைனா்’ விமானத்தின்அடுத்த முழு சோதனை கடந்த 2023-ஆம் ஆண்டு, ஜூன் மாதத்துக்குப் பிறகு வரும் டிசம்பரில் திட்டமிடப்பட்டிருந்தது என்று விமான ... மேலும் பார்க்க