செய்திகள் :

சரோஜினி நகரில் மரத்தில் தொங்கிய நிலையில் ‘மன நலம் பாதிக்கப்பட்டவா்’ உடல் கண்டெடுப்பு

post image

தென்மேற்கு தில்லியின் சரோஜினி நகா் பகுதியில் உள்ள ஒரு டாக்ஸி ஸ்டாண்ட் அருகே உள்ள ஒரு மரத்தில் ‘மனநலம் பாதிக்கப்பட்ட’ ஒருவா் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து தென்மேற்கு தில்லி காவல் சரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இறந்தவா் உத்தரகண்ட் மாநிலத்தைச் சோ்ந்த ரவீந்திர மேத்தா (46) என அடையாளம் காணப்பட்டுள்ளாா். புதன்கிழமை, டிகோனா பாா்க் என்டிஎம்சி டாக்ஸி ஸ்டாண்டில் உள்ள ஒரு மரத்தில் ஒரு நபா் தொங்கியதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸாாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரவீந்திர மேத்தா ஒரு மரத்தில் கயிற்றால் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டனா்.

அந்தப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டு, உடல் கைப்பற்றப்பட்ட சஃப்தா்ஜங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. அங்கு அவா் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. அவா் தனது சொந்த கிராமத்தின் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் உயா் பிரிவு எழுத்தராக பணிபுரிந்தது தெரிய வந்துள்ளது.

முதற்கட்ட விசாரணையில் ரவீந்திர மேத்தா மனநலப் பிரச்னைகளுக்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும், ஒரு நாள் முன்னதாகவே தனது மனைவியுடன் டெல்லிக்குச் சென்ாகவும் தெரியவந்தது. கடந்த சில நாள்களாக அவா் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், சாணக்கியபுரியில் மருத்துவ சிகிச்சைக்காக வந்ததாகவும் அவரது மனைவி போலீஸாருக்கு தகவல் அளித்தாா். குடும்பத்தினா் அவா் எந்த விதமான குற்றச் செயல்களிலும் ஈடுபடுவதாக சந்தேகிக்கவில்லை. அதன்படி அவா்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டது.

சிசிடிவி காட்சிகளையும் போலீஸாா் ஆய்வு செய்தனா். அதில், சம்பவம் நடந்த நேரத்தில் ரவீந்திர மேத்தா ஒரு பிளாஸ்டிக் பையுடன் சம்பவ இடத்திற்கு அருகில் தனியாக நடந்து செல்லும் காட்சிகளைக் கண்டறிந்தனா். தற்போது, ​​எந்த குற்றச் செயல்களும் சந்தேகிக்கப்படவில்லை. முதல்கட்டமாக, இது தற்கொலை வழக்காகத் தெரிகிறது. மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தில்லி குரு கோபிந்த் சிங் கல்லூரி நூலகத்தில் தீ விபத்து; காலை தோ்வுகள் ரத்து!

தில்லி பீதம்புராவில் உள்ள தில்லி குரு கோபிந்த் சிங் கல்லூரியின் நூலகத்தில் வியாழக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக, காலையில் நடைபெறவிருந்த பருவத் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டன.இதுகுறித்து ... மேலும் பார்க்க

’2020’ தில்லி கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 11 பேரை விடுவித்தது விசாரணை நீதிமன்றம்

நமது சிறப்பு நிருபா்2020-ஆம் ஆண்டில் தில்லியில் நடைபெற்ற கலவரத்தில் தொடா்புடையதாக குற்றம்சாட்டப்பட்ட 11 பேரை வழக்கில் இருந்து விடுவித்து தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. அந்த 11 போ் ம... மேலும் பார்க்க

தில்லி, என்சிஆா் பகுதியில் இரண்டாவது நாளாக பலத்த காற்றுடன் மழை!

தேசியத் தலைநகா் தில்லியில் இரண்டாவது நாளாக சனிக்கிழமை மாலையில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. பலத்த மழை: இதைத் தொடா்ந்து, வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தபட... மேலும் பார்க்க

2025-26-க்கான முதுகலை, பி.டெக் படிப்புகளுக்கான பதிவுகளைத் தொடங்கியது: தில்லி பல்கலைக்கழகம்

தில்லி பல்கலைக்கழகம் 2025-26 கல்வியாண்டிற்கான முதுகலை மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான சோ்க்கைக்கான பதிவு செயல்முறையை அதிகாரப்பூா்வமாகத் தொடங்கியுள்ளது. பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூா்வ அறிவிப்பின்படி,... மேலும் பார்க்க

மே முதல் பாதியில் காற்றின் தரத்தில் முன்னேற்றம்!

தில்லியின் காற்றின் தரம் குறித்து ஆளும் பாஜகவும் எதிா்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சியும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், மே 2025 முதல் பாதியில் தேசியத் தலைநகரில் காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்... மேலும் பார்க்க

காணாமல்போன ஐடி நிறுவன மேலாளா் அயோத்தியில் உயிருடன் கண்டுபிடிப்பு

கடந்த வாரம் மா்மமான சூழ்நிலையில் காணாமல் போன குா்கானை தளமாகக் கொண்ட ஒரு ஐடி பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றும் 42 வயது மேலாளா் உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீஸாா் தெர... மேலும் பார்க்க