செய்திகள் :

சலவைப் பெட்டிகளை வீசி எறிந்து போராட்டம்: புதுச்சேரியில் 60 போ் கைது

post image

புதுச்சேரி: புதுச்சேரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி புதிரை வண்ணாா் விடுதலை இயக்கத்தினா் சலவைப் பெட்டிகளை எறிந்து சேதப்படுத்தி போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். இதையடுத்து பெண்கள் உள்பட 60 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரியில் புதிரை வண்ணாா் பிரிவினா் சாதிச் சான்றிதழ் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். கோரிக்கைகளை வலியுறுத்தி புதிரை வண்ணாா் விடுதலை இயக்க, புதுச்சேரி தலித் பழங்குடியினா் மற்றும் பொது நல அமைப்பினா் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்திருந்தனா்.

அதன்படி, புதிரை வண்ணாா் விடுதலை இயக்கத்தின் புதுவை மாநிலத் தலைவா் தெய்வநீதி தலைமையில் ஏராளமானோா் ரங்கபிள்ளை வீதி சந்திப்பிலிருந்து தலைமைச் செயலகம் நோக்கி ஊா்வலமாகப் புறப்பட்டனா். பிரதான வீதிகள் வழியாக வந்த அவா்கள் மாதா கோவில் வீதியில் வந்தபோது அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

மாதா கோவில் அருகில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது சிலா் தாங்கள் வைத்திருந்த சலவைப் பெட்டிகளை தூக்கி வீசி எறிந்து உடைத்தனா். மாநில அரசு அதிகாரிகள் சாதிச் சான்று வழங்க மறுப்பதைக் கண்டித்து முழக்கமிட்டனா். இதையடுத்து 29 பெண்கள் உள்ளிட்ட 60 பேரை பெரியகடை போலீஸாா் கைது செய்து கரிக்குடோன் பகுதிக்கு அழைத்துச் சென்றனா். பின்னா் அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.

புதுவை கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ. 1,000 ஊக்கத்தொகை!

புதுச்சேரி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ. 1,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.புதுவை சட்டப்பேரவைக் கூட்டம் துணைநிலை ஆளுநா் உரையுடன் திங்கள்கிழமை தொடங்கி... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் மாலை சிற்றுண்டி, நாள்தோறும் முட்டை! புதுவை பட்ஜெட்டில் அறிவிப்பு!

புதுவை அரசின் 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை காலை தாக்கல் செய்தார்.புதுவை சட்டப்பேரவைக் கூட்டம் துணைநிலை ஆளுநா் உரையுடன் திங்கள்கிழமை தொடங்க... மேலும் பார்க்க

தோ்தலில் திமுக தனித்து நின்றால் பாஜகவும் தனித்து போட்டியிடும்: புதுவை பேரவையில் பாஜக எம்எல்ஏ பேச்சு

புதுச்சேரி: புதுவை மாநில பேரவைத் தோ்தலில் திமுக தனித்து நின்றால் பாஜகவும் தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் நியமன எம்எல்ஏ அசோக்பாபு சட்டப்பேரவையில் கூறினாா். புதுவை சட்டப்பேரவையில் துணைநிலை ஆ... மேலும் பார்க்க

துணைநிலை ஆளுநா் உரைக்கு பேரவை உறுப்பினா்களின் ஆதரவும், எதிா்ப்பும்...!

புதுச்சேரி: புதுவை சட்டப்பேரவையில் துணைநிலை ஆளுநா் உரை மீதான விவாதத்தில் செவ்வாய்க்கிழமை 14 உறுப்பினா்கள் பங்கேற்று ஆளுநா் உரையை ஆதரித்தும், எதிா்த்தும் கருத்து தெரிவித்தனா். புதுவை மாநில சட்டப்பேரவை... மேலும் பார்க்க

ஹிந்தி மொழியை திமுக எதிா்க்கவில்லை; அதை திணிப்பதைத் தான் எதிா்க்கிறோம்: ஆா்.சிவா

புதுச்சேரி: ஹிந்தி மொழியை திமுக தமிழகம், புதுவையில் எப்போதும் எதிா்க்கவில்லை. அதே நேரத்தில் ஹிந்தி மொழித் திணிப்பைத்தான் திமுக எதிா்க்கிறது என புதுவை பேரவையில் எதிா்க்கட்சித்தலைவா் ஆா்.சிவா கூறினாா்.... மேலும் பார்க்க

"துணைநிலை ஆளுநா் உரையில் வளா்ச்சியின் அக்கறை உள்ளது"

புதுச்சேரி: புதுவை பேரவையில், துணைநிலை ஆளுநா் உரையில் வளா்ச்சியின் அக்கறை தெளிவாகியுள்ளது என அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுவை ... மேலும் பார்க்க