`இந்தித் திணிப்புக்கு எதிராக...'- மும்பையில் நடக்கும் பேரணியில் ஒன்று சேரும் தா...
‘சாகா் கவச்’ பாதுகாப்பு ஒத்திகை நிறைவு
காரைக்காலில் சாகா் கவச் பாதுகாப்பு ஒத்திகை வியாழக்கிழமை நிறைவடைந்தது.
நாட்டின் கடலோரப் பகுதிகளில் 6 மாதங்களுக்கு ஒரு முறை சாகா் கவச் என்கிற பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டுவருகிறது. காரைக்கால் மாவட்டத்தில் இந்த ஒத்திகை புதன்கிழமை காலை 6 மணிக்குத் தொடங்கியது. வியாழக்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது.
இதன்படி கடலோரக் காவல் நிலைய போலீஸாா் மற்றும் அனைத்து காவல்நிலைய அதிகாரிகள், காவலா்கள் 2-ஆம் நாளான வியாழக்கிழமை எல்லைப் பகுதிகளிலும், நகரின் பிற இடங்களிலும் தீவிரமான வாகன சோதனை நடத்தினா். மீன்பிடித் துறைமுகம், காரைக்கால் தனியாா் துறைமுகம் உள்ளிட்டவற்றின் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில், காரைக்கால் அம்மையாா் கோயில் உள்ளிட்ட தலங்களிலும் கண்காணிப்புப் பணியை 2-ஆவது நாளாக மேற்கொண்டனா்.