செய்திகள் :

'சாதிய ஆதிக்க திமிரோடு அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதாடுகிறார்!' - போராட்டக்குழு கடும் குற்றச்சாட்டு

post image

தனியார்மயத்தை எதிர்த்தும் பணி நிரந்தரம் கோரியும் சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே 11 வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையின் மண்டலங்கள் 5, 6 இரண்டையும் தனியார்மயப்படுத்துவதை எதிர்த்து போராட்டத்தை முன்னெடுத்து வரும் உழைப்போர் உரிமை இயக்கம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தனர்.

போராட்டக்குழு சார்பாக வாதிட்ட வழக்கறிஞர் குழு
போராட்டக்குழு சார்பாக வாதிட்ட வழக்கறிஞர் குழு

இன்று விசாரணைக்கு வந்த வழக்கில் பதிலளிக்க இரண்டு நாட்கள் அவகாசம் வேண்டுமென அரசுத் தரப்பு வழக்கறிஞர் கேட்டிருக்கிறார்.

நிலமோசடி வழக்கில் சிக்கியவர்!

நீதிமன்றத்தில் என்ன நடந்தது என்பதைப் பற்றி போராட்டத்தை முன்னெடுக்கும் உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் பாரதி பேசுகையில், 'சென்னை உயர் நீதிமன்றத்தில் சங்க தரப்பில் அவுட் சோர்ஸிங்குக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது.

தமிழ்நாடு அரசுத் தரப்பிலிருந்து அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் நாளை மறுநாள் வரை அவகாசம் கேட்டார். நாங்கள் அதற்கு எதிராக வாதிட்டோம். உடனே எங்களின் சங்கத்தை கொச்சைப்படுத்தும் விதத்தில் பி.எஸ்.ராமன் பேசினார்.

போராடும் மக்கள்
போராடும் மக்கள்

சாதிய ஆதிக்க திமிரோடு ராம்கி நிறுவனத்தின் பிரதிநிதியாக பி.எஸ்.ராமன் பேசியிருக்கிறார். மக்கள் ப்ளாக்மெயில் செய்வதாக அரசு வாதிடுகிறது. எவ்வளவு கேவலமான வாதம் இது?

ராம்கி நிறுவனத்தின் நிறுவனர் ஆந்திராவில் நிலமோசடி செய்து வழக்கில் சிக்கியவர். எங்களின் கோரிக்கைகளை கேட்பது ப்ளாக் மெயிலா?

தொழிலாளிகளை உடைக்க முயல்கிறார்கள். திமுக கவுன்சிலர்களும் சேகர் பாபுவும் நேரடியாக போன் செய்து பணம் தருகிறோம் என தொழிலாளர்கள் மனதை மாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.' என்றார் காட்டமாக.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Paridhabangal: "கோபி, சுதாகர் மீது வழக்கு போடுவது சமூக தீண்டாமை" - சீமான் காட்டம்

நாம் கட்சி தலைவர் சீமான் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 11) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது அவரிடம் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்குப் பதிலளித்த அவர், "விஜய் வருகை... மேலும் பார்க்க

SIR: `தேர்தல் ஆணையத்துக்கு எதிரான போராட்டம்' - தடுப்பை தாண்டிய அகிலேஷ்; ராகுல் காந்தி கைது!

2024 மக்களவைத் தேர்தலின் போது ஆளும் பா.ஜ.க தேர்தல் ஆணையத்தின் பெரும் ஆதரவுடன் "வாக்கு திருட்டு" செய்ததாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்கின்றனர். மேலும், பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடை... மேலும் பார்க்க

SIR: ``தோளோடு தோள் நிற்கிறோம்..." - இந்தியா கூட்டணியின் ஆர்ப்பாட்டத்துக்கு ஸ்டாலின் ஆதரவு!

பீகார் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சிறப்பு வாக்காளர் தீவிரத் திருத்தம், முறைகேடான வாக்காளர் பட்டியல், தேர்தலின்போது வாக்குத் திருட்டு என தேர்தல் ஆணையத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் உள... மேலும் பார்க்க

கீழடி: "சிந்து சமவெளி நாகரிகத்தை உருவாக்கியது திராவிடப் பழங்குடிகள்" - அமர்நாத் ராமகிருஷ்ணா பேச்சு

ஈரோடு மாவட்டத்தில் மக்கள் சிந்தனை பேரவை மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் பத்து நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் ஒவ்வொரு ... மேலும் பார்க்க

திருப்பூர்: முதல்வர் ஸ்டாலினின் உடுமலைப்பேட்டை பயணம்; நலத்திட்ட உதவிகள் வழங்கினார் | Photo Album

நலத்திட்டம் உதவி வழங்கினார்நலத்திட்டம் உதவி வழங்கினார்நலத்திட்டம் உதவி வழங்கினார்நலத்திட்டம் உதவி வழங்கினார்நலத்திட்டம் உதவி வழங்கினார்நலத்திட்டம் உதவி வழங்கினார்நலத்திட்டம் உதவி வழங்கினார்நலத்திட்டம்... மேலும் பார்க்க

`ராஜினாமா செய்த தன்கர் எங்கே?; சீனா, ரஷ்யாவில்தான் இப்படி நடக்கும்’ - கேள்வி எழுப்பும் சஞ்சய் ராவத்

சமீபத்தில் துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். லஞ்ச ஊழல் வழக்கில் சிக்கிய நீதிபதிக்கு எதிராக ராஜ்ய சபையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானத்தை துணை ஜனாதிப... மேலும் பார்க்க