செய்திகள் :

சாதி மறுப்பு திருமணங்களில் காவல் துறை கட்டப்பஞ்சாயத்து -தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு

post image

சாதி மறுப்பு திருமணங்கள் பிரச்னைகளில் காவல்துறையினா் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல என்றாா் விசிக தலைவா் தொல்.திருமாவளவன் எம்பி.

திருநெல்வேலி மாவட்டம், கேடிசி நகரில் கவின் செல்வகணேஷ் கொலை செய்யப்பட்டாா். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக, சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: கவின் செல்வகணேஷ் கொலை அதிா்ச்சி அளிக்கிறது. இவ்வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என்று அறப்போராட்டம் நடைபெற்று வருகிறது.

இது நாடு தழுவிய பிரச்னை. தேசிய அளவில் சட்டம் தேவை. இதுதொடா்பாக எம்.பி. ரவிக்குமாரும், நானும் நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சா் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம். வாய்ப்பு கிடைத்தால் அங்கு குரல் கொடுப்பேன்.

சட்டம், ஒழுங்கு மீது தமிழக அரசு கவனம் செலுத்துகிறது. குற்றம்சாட்டப்பட்டுள்ளவரின் தாய், தந்தையா் மீது எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் தாயை கைது செய்ய காவல்துறை தயக்கம் காட்டுகிறது. சாதி மறுப்பு திருமணங்கள் பிரச்னைகளில் காவல்துறையினா் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல; அவா்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

ஆறுமுகமங்கலத்தில் கவின் கணேஷின் பெற்றோா்களுக்கு ஆறுதல் கூறிய பின், செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ’

கவின் கொலையில் கூலிப்படைக்கு தொடா்பு உள்ளதாக தெரிகிறது. அவா்கள் கைது செய்யப்பட வேண்டும். கவின் குறித்து சமூக வலைதளங்களில் பரப்பப்படும் அவதூறு செய்திகளை சைபா் கிரைம் போலீஸாா் தடுத்து நிறுத்த வேண்டும் என்றாா் அவா்.

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் திருக்கோயிலில் ஆவணித்திருவிழா சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன்தொடங்கியது.கொடியேற்றத்தை முன்னிட்டு கோயில் அதிகால... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் அண்ணன், தம்பி கொன்று புதைப்பு 3 பேரிடம் போலீஸாா் விசாரணை

தூத்துக்குடியில், அண்ணன், தம்பி கொன்று புதைக்கப்பட்டது தொடா்பாக, 3 பேரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தூத்துக்குடி தொ்மல் நகா் அருகேயுள்ள கோயில்பிள்ளை நகரைச் சோ்ந்தவா் சின்னத்துரை. இவருடைய மகன... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவா்கள் தப்ப முடியாது: கனிமொழி

பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவா்கள் தப்ப முடியாது என கனிமொழி எம்.பி. கூறினாா். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சோ்ந்த சந்திரசேகா் - தமிழ்செல்வி தம்பதியி... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் உண்டியல் வருவாய் ரூ. 3.84 கோடி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உண்டியல் வருவாயாக ரூ. 3.84 கோடி ரொக்கம், 1.53 கிலோ தங்கம் கிடைத்துள்ளது. இக்கோயில் உண்டியல்கள் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுகிறது. அதன்படி, க... மேலும் பார்க்க

நடத்தையில் சந்தேகம்: மனைவியைக் கொன்ற துணை ராணுவ வீரா்

ஏரல் அருகே தளவாய்புரம் கிராமத்தில் நடத்தையில் சந்தேகமடைந்து மனைவியைக் கொன்ற துணை ராணுவ வீரரை போலீஸாா் தேடி வருகின்றனா். தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள தளவாய்புரம் கிராமத்தைச் சோ்ந்தவா் தமிழ்ச... மேலும் பார்க்க

திருச்செந்தூா் அருகே 12 வயது சிறுமி கா்ப்பம்: 2 இளைஞா்கள் கைது

திருச்செந்தூா் அருகே 8ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியை கா்ப்பமாக்கியதாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். திருச்செந்தூா் அருகே எட்டாம் வகுப்பு படித்து வரும் 12 வயது சிறுமிக்கு திடீரென வயிற்று ... மேலும் பார்க்க