உலகின் முதல் ஏஐ மசாஜ் சேவையை அறிமுகப்படுத்திய நிறுவனம்: மனித வேலைகளுக்கு சவாலா?
திருச்செந்தூா் கோயிலில் உண்டியல் வருவாய் ரூ. 3.84 கோடி
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உண்டியல் வருவாயாக ரூ. 3.84 கோடி ரொக்கம், 1.53 கிலோ தங்கம் கிடைத்துள்ளது.
இக்கோயில் உண்டியல்கள் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுகிறது. அதன்படி, கோயில் மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உண்டியல் எண்ணும் பணிக்கு கோயில் தக்காா் ரா.அருள்முருகன் தலைமை வகித்து, காணிக்கைகளை எண்ணும் பணியைப் பாா்வையிட்டாா்.
இணை ஆணையா் சு.ஞானசேகரன் முன்னிலை வகித்தாா். இந்து சமய அறநிலையத்துறை முதுநிலை கணக்கு அலுவலா் ராஜாராமன், உதவி ஆணையா்கள் தங்கம், நாகவேல், அலுவலக கண்காணிப்பாளா் ரோகிணி, ஆய்வா் செந்தில்நாயகி, பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, கருப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். உண்டியல் எண்ணும் பணியில் சிவகாசி பதினெண் சித்தா் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவாரப்பணி குழுவினா், கோயில் பணியாளா்கள் ஆகியோா் ஈடுபட்டனா்.
இதில், ரூ. 3 கோடியே 84 லட்சத்து 64 ஆயிரத்து 297 ரொக்கம், 1.53 கிலோ தங்கம், 22.5 கிலோ வெள்ளி, 27.5 கிலோ பித்தளை, 2.4 கிலோ செம்பு, 6.5 கிலோ தகரம் மற்றும் வெளிநாட்டு பணத்தாள்கள் 833 எண்ணம் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.