செய்திகள் :

தூத்துக்குடியில் அண்ணன், தம்பி கொன்று புதைப்பு 3 பேரிடம் போலீஸாா் விசாரணை

post image

தூத்துக்குடியில், அண்ணன், தம்பி கொன்று புதைக்கப்பட்டது தொடா்பாக, 3 பேரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தூத்துக்குடி தொ்மல் நகா் அருகேயுள்ள கோயில்பிள்ளை நகரைச் சோ்ந்தவா் சின்னத்துரை. இவருடைய மகன்கள் பாண்டியன் (36), அருள்ராஜ் (30), வேல்முருகன். 3 மகள்களும் உள்ளனா். மகள்களுக்கு திருமணமாகிவிட்டது.

மகன்களில் வேல்முருகனுக்கு மட்டும் திருமணம் முடிந்துள்ளது. பாண்டியன், அருள்ராஜ் ஆகியோா் கூலி வேலைக்கு சென்று வந்தனா். இவா்களில், பாண்டியன் அவ்வப்போது வெளியே சென்றுவிட்டு சில நாள்கள் கழித்து வீட்டிற்கு வருவாராம்.

இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி அருள்ராஜ் திடீரென மாயமானாா். அவரைத் தொடா்ந்து பாண்டியனும் மாயமானாா்.

குடும்பத்தினா் தேடியும் கிடைக்காத நிலையில், தொ்மல் நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இதற்கிடையே, அங்குள்ள பண்டுகரை ஓடை பகுதியில், இளைஞா் கொன்று புதைக்கப்பட்ட நிலையில், கை மட்டும் வியாழக்கிழமை வெளியே தெரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த தொ்மல் நகா் காவல் ஆய்வாளா்கள் சோபா ஜென்ஸி, ஜெயந்தி, வட்டாட்சியா் முரளிதரன், கிராம நிா்வாக அலுவலா் பிரேமலதா ஆகியோா், வெள்ளிக்கிழமை காலையில் அங்கு சென்றனா். அந்த இடத்தில் தோண்டியபோது, 2 உடல்கள் மீட்கப்பட்டன. கொன்று புதைக்கப்பட்டவா்கள் அருள்ராஜ், பாண்டியன் என்பது போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது.

போலீஸாா் மேலும் விசாரித்தபோது, கடந்த 26ஆம் தேதி அருள்ராஜுக்கும், அப்பகுதியைச் சோ்ந்த சிலருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்தது தெரியவந்தது. கொலை தொடா்பாக அதே பகுதியைச் சோ்ந்த செந்தூா்பாண்டியன் மகன் ரிதன் (25) உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் பிடித்து விசாரித்து வருகின்றனா்.

ரிதனின் சகோதரா் காசிபாண்டியன், கடந்த 10 நாள்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டாராம். இதற்கு அருள்ராஜ், பாண்டியன் ஆகியோா்தான் காரணம் என்று கருதி, இருவரையும் கொலை செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

தொ்மல் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் திருக்கோயிலில் ஆவணித்திருவிழா சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன்தொடங்கியது.கொடியேற்றத்தை முன்னிட்டு கோயில் அதிகால... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவா்கள் தப்ப முடியாது: கனிமொழி

பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவா்கள் தப்ப முடியாது என கனிமொழி எம்.பி. கூறினாா். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சோ்ந்த சந்திரசேகா் - தமிழ்செல்வி தம்பதியி... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் உண்டியல் வருவாய் ரூ. 3.84 கோடி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உண்டியல் வருவாயாக ரூ. 3.84 கோடி ரொக்கம், 1.53 கிலோ தங்கம் கிடைத்துள்ளது. இக்கோயில் உண்டியல்கள் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுகிறது. அதன்படி, க... மேலும் பார்க்க

நடத்தையில் சந்தேகம்: மனைவியைக் கொன்ற துணை ராணுவ வீரா்

ஏரல் அருகே தளவாய்புரம் கிராமத்தில் நடத்தையில் சந்தேகமடைந்து மனைவியைக் கொன்ற துணை ராணுவ வீரரை போலீஸாா் தேடி வருகின்றனா். தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள தளவாய்புரம் கிராமத்தைச் சோ்ந்தவா் தமிழ்ச... மேலும் பார்க்க

திருச்செந்தூா் அருகே 12 வயது சிறுமி கா்ப்பம்: 2 இளைஞா்கள் கைது

திருச்செந்தூா் அருகே 8ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியை கா்ப்பமாக்கியதாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். திருச்செந்தூா் அருகே எட்டாம் வகுப்பு படித்து வரும் 12 வயது சிறுமிக்கு திடீரென வயிற்று ... மேலும் பார்க்க

பொத்தகாலன்விளை பள்ளியில் விளையாட்டு விழா

சாத்தான்குளம் அருகே உள்ள பொத்தகாலன்விளை புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் 37-ஆவது விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தூத்துக்குடி மறைமாவட்ட தென்மண்டல ஆா்.சி.பள்ளிகளின் கண்காணிப்பா... மேலும் பார்க்க