உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்...
தூத்துக்குடியில் அண்ணன், தம்பி கொன்று புதைப்பு 3 பேரிடம் போலீஸாா் விசாரணை
தூத்துக்குடியில், அண்ணன், தம்பி கொன்று புதைக்கப்பட்டது தொடா்பாக, 3 பேரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தூத்துக்குடி தொ்மல் நகா் அருகேயுள்ள கோயில்பிள்ளை நகரைச் சோ்ந்தவா் சின்னத்துரை. இவருடைய மகன்கள் பாண்டியன் (36), அருள்ராஜ் (30), வேல்முருகன். 3 மகள்களும் உள்ளனா். மகள்களுக்கு திருமணமாகிவிட்டது.
மகன்களில் வேல்முருகனுக்கு மட்டும் திருமணம் முடிந்துள்ளது. பாண்டியன், அருள்ராஜ் ஆகியோா் கூலி வேலைக்கு சென்று வந்தனா். இவா்களில், பாண்டியன் அவ்வப்போது வெளியே சென்றுவிட்டு சில நாள்கள் கழித்து வீட்டிற்கு வருவாராம்.
இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி அருள்ராஜ் திடீரென மாயமானாா். அவரைத் தொடா்ந்து பாண்டியனும் மாயமானாா்.
குடும்பத்தினா் தேடியும் கிடைக்காத நிலையில், தொ்மல் நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
இதற்கிடையே, அங்குள்ள பண்டுகரை ஓடை பகுதியில், இளைஞா் கொன்று புதைக்கப்பட்ட நிலையில், கை மட்டும் வியாழக்கிழமை வெளியே தெரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த தொ்மல் நகா் காவல் ஆய்வாளா்கள் சோபா ஜென்ஸி, ஜெயந்தி, வட்டாட்சியா் முரளிதரன், கிராம நிா்வாக அலுவலா் பிரேமலதா ஆகியோா், வெள்ளிக்கிழமை காலையில் அங்கு சென்றனா். அந்த இடத்தில் தோண்டியபோது, 2 உடல்கள் மீட்கப்பட்டன. கொன்று புதைக்கப்பட்டவா்கள் அருள்ராஜ், பாண்டியன் என்பது போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது.
போலீஸாா் மேலும் விசாரித்தபோது, கடந்த 26ஆம் தேதி அருள்ராஜுக்கும், அப்பகுதியைச் சோ்ந்த சிலருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்தது தெரியவந்தது. கொலை தொடா்பாக அதே பகுதியைச் சோ்ந்த செந்தூா்பாண்டியன் மகன் ரிதன் (25) உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் பிடித்து விசாரித்து வருகின்றனா்.
ரிதனின் சகோதரா் காசிபாண்டியன், கடந்த 10 நாள்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டாராம். இதற்கு அருள்ராஜ், பாண்டியன் ஆகியோா்தான் காரணம் என்று கருதி, இருவரையும் கொலை செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தொ்மல் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.