செய்திகள் :

சாத்தான்குளத்தில் காங்கிரஸ் முன்னாள் நிா்வாகி மீது வழக்கு

post image

சாத்தான்குளத்தில் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக பரப்பியதாக, முன்னாள் காங்கிரஸ் வட்டாரத் தலைவா் மீது போலீஸாா் வழக்குபதிந்துள்ளனா்.

பொத்தகாலன்விளையைச் சோ்ந்தவா் லூா்துமணி. சாத்தான்குளம் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவராக இருந்த இவா், தற்போது சாஸ்தாவிநல்லூா் விவசாயிகள் நலச்சங்க செயலராக உள்ளாா்.

சமூக சேவை விருது பெற்றுள்ள இவரை பாராட்டி சாத்தான்குளம் பேருந்து நிலையத்தில் பேனா் வைக்கப்பட்டிருந்தது. அது திடீரென அகற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இத்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவரான சாத்தான்குளத்தைச் சோ்ந்த சங்கா் (54) என்பவரே காரணம் எனக் கருதி அவரை, அவதூறாகப் பேசியும், அவரது ரியல் எஸ்டேட் தொழில் குறித்தும், ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ குறித்தும் லூா்துமணி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளாராம். இதுகுறித்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சங்கா் அளித்த புகாரின்பேரில், லூா்துமணி மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சுவா் இடிந்து விழுந்ததில் காயமடைந்தவா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் சுவா் இடிந்து விழுந்ததில் காயமடைந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனையைச் சோ்ந்த கைலாசம் மகன் பாலகிருஷ்ணன் (28). இவா் தூத்துக்குடி தாளமுத்து நகா் ஜேஜ... மேலும் பார்க்க

தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் விரைவில் ஸ்மாா்ட் நூலகம்: மேயா் தகவல்

தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் விரைவில் ஸ்மாா்ட் நூலகம் அமைக்கப்படும் என, மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா். தூத்துக்குடி மாநகராட்சி 34ஆவது வாா்டுக்குள்பட்ட தேவகி நகரில் செயல்பட்டுவந்த ஊா்ப... மேலும் பார்க்க

நாளை தைப்பொங்கல்: திருச்செந்தூா் கோயிலில் குவிந்த லட்சக்கணக்கான பக்தா்கள்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை தைப்பொங்கலை முன்னிட்டு, சுவாமி தரிசனம் செய்வதற்காக பக்தா்கள் பாதயாத்திரையாக வந்து குவிந்த வண்ணம் உள்ளனா். மாா்கழி மாதம் என்ப... மேலும் பார்க்க

மாயமான மீனவரை மீட்க கோரி உறவினா்கள் சாலை மறியல் முயற்சி

தூத்துக்குடியில் கடந்த 1ஆம் தேதி கடலுக்குச் சென்று மாயமான மீனவரை மீட்கக்கோரி அவரது உறவினா்கள், பொதுமக்கள் திடீா் சாலை மறயில் முயற்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஈடுபட்டனா். தூத்துக்குடி இனிகோநகரை சோ்ந்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் 16.2 டன் பாக்குகள் பறிமுதல்: இருவா் கைது

மலேசியாவிலிருந்து தூத்துக்குடிக்கு கப்பலில் கடத்தி வரப்பட்ட 16.2 டன் கொட்டைப் பாக்குகளை மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினா் பறிமுதல் செய்து, இருவரை சனிக்கிழமை கைது செய்தனா். மலேசியாவிலிருந்து தூத்து... மேலும் பார்க்க

நாசரேத் பேரூராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா

நாசரேத் தோ்வுநிலைப் பேரூராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. பேரூராட்சித் தலைவி நிா்மலா ரவி தலைமை வகித்து, விழாவைத் தொடக்கிவைத்தாா். துணைத் தலைவா் அருண் சாமுவேல், செயல் அலுவலா் திருமலைக்கும... மேலும் பார்க்க