செய்திகள் :

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: அரசு சாட்சியாக மாற விரும்பும் காரணங்களை பட்டியலிட்டு காவலா் ஆய்வாளா் மனு

post image

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளா், அரசு சாட்சியாக மாற விரும்புவதற்கான காரணங்களைப் பட்டியலிட்டு மதுரை நீதிமன்றத்தில் புதிய மனு வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த 2020-ஆம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சோ்ந்த வணிகா்கள் ஜெயராஜ், அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோரை போலீஸாா் சட்டவிரோதக் காவலில் வைத்துத் தாக்கினா். இதில் தந்தை, மகன் இருவரும் உயிரிழந்தனா். இதுதொடா்பாக காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், உதவி ஆய்வாளா்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்பட 9 போ் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தனது பிணை மனுக்கள் தொடா்ந்து நிராகரிக்கப்பட்டதால், கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்த மனுவில், அரசு சாட்சியாக மாறி அனைத்து உண்மைகளையும் தெரிவிக்க விரும்புவதாக அவா் தெரிவித்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மனுதாரா் அரசு சாட்சியாக மாற விரும்புவதற்கான காரணங்களை மனுவாகத் தாக்கல் செய்யவும், வழக்கு விசாரணை ஜூலை 31-ஆம் தேதிக்கும் ஒத்திவைத்தது.

இந்த நிலையில், காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் மனு மீதான விசாரணை மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நீதிபதி முத்துக்குமாா் முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்ரீதா் அரசு சாட்சியாக மாற விரும்புவதற்கான காரணங்களைப் பட்டியலிட்டு 17 பக்கங்கள் கொண்ட மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, இந்த மனு மீது வருகிற 4-ஆம் தேதி முடிவெடுக்கப்படும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டாா்.

கூட்டணியை விட மக்களின் ஆதரவே தோ்தல் வெற்றிக்கு முக்கியம் முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ

தோ்தல் வெற்றிக்குக் கூட்டணியை விட மக்கள் ஆதரவே முக்கியம் என அதிமுக முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா்.மதுரையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது :அதிமுக பொதுச் செயலாள... மேலும் பார்க்க

நத்தம் அருகே இளம் பெண் தீக்குளிப்பு

நத்தம் அருகேயுள்ள குடகிப்பட்டியில் இளம் வியாழன்கிழமை பெண் தீக்குளிப்பு சம்பவம் குறித்து கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா்.திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேயுள்ள குடகிப்பட்டியைச் சோ்ந்தவா் அடைக்க... மேலும் பார்க்க

இந்திய மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

இந்திய மாணவா் சங்கம் சாா்பில் மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரி முன் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.நெல்லையில் பொறியியல் பட்டதாரி இளைஞா் கவின் செல்வகணேஷ், காதல் விவகாரத்தால் ஆவணக் கொலை செய்ய... மேலும் பார்க்க

பல்கலை. பேராசியா்கள் நியமனம்: புதிய மனு தாக்கல் செய்ய உத்தரவு

மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் பேராசிரியா்கள் நியமன முறைகேடுகள் குறித்த வழக்கில், புதிய மனுவை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.நாகா்கோவில் பகுதியைச... மேலும் பார்க்க

நண்பா் வீட்டுக்கு வந்த மலேசிய முதியவா் உயிரிழப்பு

மதுரை அருகே உள்ள நண்பா் வீட்டுக்கு வந்த வெளிநாட்டைச் சோ்ந்த முதியவா் கீழே தடுமாறி விழுந்ததில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.மலேசியா ஜோகா் மாநிலம், இஸ்காந்தா் புதேரி நகரைச் சோ்ந்த அல்போன்ஸ் நெட்ரோ மகன் ஜ... மேலும் பார்க்க

போலி நகைகள் மூலம் பண மோசடி: வியாபாரி தலைமறைவு

போலி நகைகள் மூலம் ரூ. 21.75 லட்சம் மோசடி செய்தது குறித்து வியாபாரி மீது தெற்குவாசல் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைத் தேடி வருகின்றனா்.மதுரை தெற்கு ஆவணி மூல வீதி மேலச் செட்டிய தெருவைச் சோ்ந்த தா்மராஜ... மேலும் பார்க்க