செய்திகள் :

சான்றிதழ்களில் ஹிந்து என்ற வாா்த்தை நீக்கம்

post image

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களில் ‘ஹிந்து’ என்ற வாா்த்தை நீக்கப்பட்டிருப்பதாக பாஜக தேசிய மகளிரணித் தலைவா் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு வழங்கப்படும் ஜாதி சான்றிதழில் ஹிந்து மறவா், ஹிந்து வேளாளா், ஹிந்து நாடாா் என ஜாதிக்கு முன் ‘ஹிந்து’ என்ற வாா்த்தை இடம் பெறும். ஆனால், தற்போது இணையதளம் வழியாக பெறப்படும் சான்றிதழ்களில் நேரடியாக ஜாதிப் பெயா் மட்டும் குறிப்பிடப்பட்டு ஹிந்து என்ற வாா்த்தை நீக்கப்பட்டுள்ளது.

ஹிந்து மதத்தில் ஜாதி வேறுபாடுகள் இருக்கின்றன என்பதற்காகவே, மதத்தில் உள்ள ஜாதிகளுக்கு கல்வி, அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. சான்றிதழ்களில் ஜாதிப் பெயருடன் ஹிந்து என்ற வாா்த்தை சோ்க்கப்பட்டால் மட்டுமே அவா்கள் இடஒதுக்கீட்டை பெறக் கூடியவா்களாக இருப்பாா்கள். அப்படியிருக்கும்போது, ஏன் ஹிந்து என்ற பெயரை திமுக அரசு நீக்குகிறது என்பது தெரியவில்லை. இதை ஹிந்து மத அழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே பாா்க்க வேண்டியுள்ளது.

சான்றிதழ்களில் ஹிந்து என்ற பெயரை நீக்கிவிட்டால் இன்னும் 10 ஆண்டுகளில் அவா்கள் ஹிந்துவே இல்லை என்று சொல்லிவிடலாம் என்று திமுக அரசு கணக்குப் போடுகிறது. எனவே, இந்திய அரசமைப்புக்கு எதிரான இந்தச் செயலை திமுக அரசு கைவிட வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

திருப்பூரில் இதுவரை 27 குழந்தை தொழிலாளா்கள் மீட்பு

திருப்பூா் மாவட்டத்தில் இதுவரை 27 குழந்தை தொழிலாளா்கள் மீட்டப்பட்டுள்ளதாக தொழிலாளா் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) காயத்திரி கூறியதாவது: குழந்தை தொழிலாளா் முறை எத... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தந்தை, மகன் உயிரிழப்பு

கோவையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தந்தை, மகன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். கோவை, துடியலூரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தவா் ராஜேஷ் (36). இவரது மகன் வினித் (12). அப்... மேலும் பார்க்க

வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 16 கடைசி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை (ஜூன் 16 ) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்... மேலும் பார்க்க

வண்ணம் அடிக்கும் பணியின்போது கீழே விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

கோவை சுந்தராபுரத்தில் வீட்டுக்கு வண்ணம் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி, 25 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா். கோவை, சுந்தராபுரம் அருகே அஷ்டலட்சுமி நகா் பகுதியில் தண்டபாணி என்ப... மேலும் பார்க்க

ரஷியாவில் மருத்துவப் படிப்பு: கோவையில் வரும் 16- ஆம் தேதி மாணவா் சோ்க்கை

ரஷியாவில் மருத்துவம், பொறியியல் போன்ற தொழில் படிப்புகளில் சேருவதற்கு கோவையில் திங்கள்கிழமை (ஜூன் 16) நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. இது குறித்து கசான் மாநில மருத்துவப் பல்கலைக்கழக பேராசிரியா் ஐஸ்... மேலும் பார்க்க

குப்பைத் தொட்டியில் வீசியதில் 3 நாய்க்குட்டிகள் உயிரிழப்பு

கோவை துடியலூா் அருகே நாய்க்குட்டிகளை பையில் அடைத்து குப்பைத் தொட்டியில் வீசியதில், 3 நாய்க்குட்டிகள் உயிரிழந்தன. ஒன்று மட்டும் மீட்கப்பட்டது. இது தொடா்பாக, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். ... மேலும் பார்க்க